கிளி- இராமநாதபுரம் அ.த.க பாடசாலை பிள்ளைகளுக்கு ‘புளொட்’ உதவி!! –
கிளி-கிழக்கு இராமநாதபுரம் அ.த.க பாடசாலை புலமைப்பரிசில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கான கவுரவிப்பு நிகழ்வு கிளி-கிழக்கு இராமநாதபுரம் அ.த.க பாடசாலை அதிபர் ச.புண்ணியமூர்த்தி தலைமையில் பிரதம அதிதிகளான ஒய்வு பெற்ற கல்விப்பணிப்பார் திரு.கோ.செல்வராஜா ஆரம்ப பிரிவு கல்விப் பணிப்பாளர் திருமதி வசந்தா மற்றும் புளியம்பொக்கணை அதிபர் திரு.ரவீந்திரன் இமாயவனூர் பாடசாலை அதிபர் திரு.கோபாலராசா அவர்களும் விழாவை சிறப்பித்து மாணவர்களுக்கான கேடயங்களையும், பதக்கங்கள் மற்றும் சகல மாணவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகங்களையும் வழங்கி கவுரவித்தனர்
லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இதற்கான நிதி மற்றும் கேடயங்கள்இ பதக்கங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) கிளிநொச்சி கிளை பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.