ஸ்கந்தவரோதயன், தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களின் மணிவிழா-

unnamed17ஸ்கந்தவரோதயன், தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களின் மணிவிழா நேற்றையதினம் (21.02.2014) பிற்பகல் 2 மணியளவில் சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளர் கந்தையா ஸ்ரீ கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக மணிவிழாவில் கலந்துகொண்ட கலாநிதி அகளங்கன் (நா.தர்மராஜா), திருமதி பூரணேஸ்வரி அகளங்கன் ஆகியோர் விழா ஏற்பாட்டுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், இடம்பெற்ற பின்னர் வரவேற்புரையை ஆசிரியர் எஸ்.மோகன்ராஜ் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வின் ஆசியுரையை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வழங்கினார். மணிவிழா அதிதிகளை நிகழ்வில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் இ.ஈஸ்வரதாசன், இந்துசாசனம் ஆசிரியர், சிற்பி சி;.சிவசரவணபவன், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராசா, அகில இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் மற்றும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவி திருமதி யோகாதேவி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவரும்,, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் மீனா சித்தார்த்தன் ஆகியோர் மணிவிழா அதிதிகளை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், சிறப்புரையையும் நிகழ்த்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed4unnamed-1221unnamed3unnamed5unnamedWDunnamed1unnamed 2unnamed17unnamed-2102unnamed-565unnamed2