Header image alt text

2014 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு; ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து’

 23.02.2014 இன்று சுவிஸ்லாந்து பேர்ன் மாநகரில் கூடிய ‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து’ பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது. Read more

இலங்கையின் தீர்வு கூட்டு மீன்பிடித் தொழில்-அமைச்சர் ராஜித சேனாரத்ன-

rajitha senaratneஇந்திய மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இலங்கை- இந்திய மீனவர்கள் இருநாட்டு கடற்பரப்புக்குள் தடையின்றி மீன்பிடிக்கக்கூடிய கூட்டுத் தொழில்முறை ஒன்று பற்றி ஆராய தயாராக இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களை வேறு ஆழ்கடல் பிராந்தியத்திற்கு அனுப்புவதில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனைக்கு இந்த கூட்டுத் தொழில்முறை தீர்வாக அமையும் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை மீனவர்களை பாதிக்காத விதத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து தடையின்றி மீன்பிடித்துச் செல்வதற்கு இதன்மூலம் வழியேற்படும். அதேபோல், இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடித்துவர வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜித்த குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்துவந்து இலங்கையின் கடல்வளங்களை சுரண்டிச் செல்வதாக மீனவ அமைப்புகளும் இலங்கை அரசும் நீண்டகாலமாக வாதிட்டு வருகின்றன. இந்நிலையில் இருதரப்பு கூட்டுத் தொழில்முறை இலங்கை மீனவர்களை மேலும் பாதிக்காதா என்று கேட்டதற்கு, அப்படி பாதிப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்கிறோம். இப்படியான கூட்டுத் தொழில் முறை ஒன்று உருவாகுமானால் இப்படியான பாதிப்புகள் பற்றியும் இருதரப்பும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் – அரசியல் கட்சிகள் சந்திப்பு-

desapiryaதேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தேர்தல் முறைபாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த குழுவில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் போக்கு தன்னிச்சையானது-வீ. நாராணயசாமி-

narayanasamy ministerரஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானமானது தன்னிச்;சையானது என்று, இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வீ நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். தமிழக முதல்வருக்கு இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த தீர்மானமானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றும் எனவும் நாராயண சாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் புதைகுழி தோண்டும் பணி தொடர்கிறது-

mannarமன்னார் மனித புதைகுழி இன்று மீண்டும் தோண்டப்படுகின்றது. 31வது தடவையாகவும் இந்த புதைகுழி இன்று தோண்டப்படுகின்றது. இதுவரையில் இப் புதைகுழி 30 தடவைகள் தோண்டப்பட்டுள்ள நிலையில் 79 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவாலய விடுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு-

dead.bodyஅம்பாறையின், அக்கரைப்பற்று ஆரோக்கியமாதா தேவாலய விடுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்றுகாலை 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. கண்ணகிபுரம் 2ம் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய மகேஸ்வரன் சேமியராஜ் என்பரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து தேவாலய விடுதிக்குச் சென்ற நபர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜிவ் கொலையுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்கு எதிரான மனு விசாரணை-

Indiaராஜிவ் காந்தி கொலை வழக்கின், 4 குற்றவாளிகளை விடுவிப்பதை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எதிர்வரும் 27ல் இந்த மனுமீதான விசாரணை இடம்பெறுமென உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரொபட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக அரசின் இம்முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜிவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

பேஸ்புக் தொடர்பில் 250 முறைப்பாடுகள்-

face bookசமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. அவமானப்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணணிப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணணி அவசர அழைப்புப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்தரகுப்த தெரிவிக்கின்றார். பேஸ்புக் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படும் பட்சத்தில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு தேராவில், உதவி வழங்கும் நிகழ்வில் புளொட் தலைவர் பங்கேற்பு-

theravil 22.02 (1)முல்லைத்தீவு தேராவில் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஜோசெப் விநாயகமூர்த்தி அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கு புதிய சைக்கிள்கள் நேற்று 22.02.2014 வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் அகரம் பவுண்டேசன் நிறுவனம் (சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை) இந்த உதவியினை வழங்கியுள்ளது. அத்துடன் முன்னாள் போராளியான ஜோசெப் விநாயகமூர்த்தி, தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்கு உதவி கேட்டதற்கிணங்க அதற்கான நிதியுதவியையும் சில பொருட்களையும் அந்நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் முன்னாள் போராளியும் இசைக் கலைஞருமான மாற்றுத் திறனாளி நகுலேந்திரன் நிமால், தனது இசைத்துறையினை மேம்படுத்துவதற்காக ஒரு தொகை நிதியுதவியையும் சுவிஸ் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தினர் (சுவிஸ் எல்லாளன் இறைச்சிக்கடை) வழங்கியுள்ளனர். இந்த உதவிகளுக்கான ஏற்பாட்டினை அதிரடி இணையத்தினர் மேற்கொண்டிருந்தனர். மேற்படி உதவியினை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வழங்கி வைத்ததுடன், திருமதி மீனா சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா கிளையையும், கோவில்குளம் இளைஞர் கழகத்தையும் சேர்ந்தவரான திரு எம்.கண்ணதாசன், மற்றும் கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், காண்டீபன், சதீஸ், சமூக சேவையாளரும், வவுனியா வரியிறுப்பாளர் சங்கத் தலைவருமான செல்வராஜா சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா வரியிறுப்பாளர் சங்க உறுப்பினரும், கவிஞருமான மாணிக்கம் ஜெகன், சமூக சேவையாளரும், அதிரடி இணைய இணைப்பாளருமான கேதீஸ் ஆகியோரும் மேற்படி நிகழ்வினில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை இந்த நிகழ்வின்போது புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கிராம மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

theravil 22.02 (17)theravil 22.02 (5)theravil 22.02 (8)theravil 22.02 (4)theravil 22.02 (3)theravil 22.02 (13)theravil 22.02 (12)theravil 22.02 (9)theravil 22.02 (15)

untitled

கூட்டமைப்புடன் பேசுவதில் சிக்கல் இல்லை-அமைச்சர் ராஜித-

அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டிக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசு இருதரப்பு பேச்சுக்களை நடத்தலாம். கூட்டமைப்பும் இந்நாட்டின் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அவர்களுடன் நேரடி பேச்சுக்களை நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக தெரியவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்ற உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை இலங்கையில் விரைவில் நிறுவி அதன் செயற்பாடுகளை முன்னெடுத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் தேவி புகையிரதம் பளை வரை பயணம்-

யாழ் தேவி புகையிரதம் கிளிநொச்சியிலிருந்து பளை வரை இன்று பரீட்சார்த்தமாக பயணத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலைய பொதுமுகாமையாளர் தலைமயில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதிமுதல் யாழ் தேவி பளைவரை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹமீட் கர்ஷாயின் இலங்கை விஜயம் இரத்து-

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை வருவதற்கு தீர்மானித்திருந்தார். தலிபான் அமைப்பின் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் 19பேர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஹமீட் கர்சாயின் இலங்கைக்கான பணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

மன்னார் மனித புதைகுழியில் அகழ்வுப் பணி தொடர்கிறது-

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியில் 30ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன. மனித புதைகுழியிலிருந்து இதுவரை 76 மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எழும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம்-மாந்தை வீதியில் கடந்த வருடம் டிசம்பர் 20ஆம் திகதி நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கையின்போது இந்தமனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டன.

அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பயணித்த வாகனம் விபத்து-

கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பயணித்த வாகனம் இன்றுகாலை கல்கமுவ பாதனிய பகுதியில் பௌசர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் அமைச்சர் சிறுகாயங்களுக்குள்ளாகி குருனாகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அமைச்சரின் சாரதியும் மேலும் ஒருவரும் இந்த சம்பவத்தின்போது காயமடைந்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளருடன் விசேட சந்திப்பு

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல் செயலகத்தில் நாளை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான முறைபாடுகள் தொடர்பில் இச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதில் தேர்தல் முறைபாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த குழுவில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தேர்தல் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் மனித புதைகுழி, ஆத்ம சாந்தி பிரார்த்தனை-

மன்னார், திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியிலிருந்து இதுவரை 79 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், ஏகாதசி 11 ரூத்ர ஹோம பிரார்த்தனையும் இன்றுகாலை திருக்கேதீஸ்வர ஆலய பாலாவியில் இடம்பெற்றது. ஆலய திருப்பனிச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புனிதம் அறியாதவர்களினால் ஏற்படுத்தப்பட்ட மனிதாபிமானமற்றதும், இறை பயமற்றதுமான இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக திருக்கேதீஸ்வர ஆலய திருப்பனிச்சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல வீதிகளைப் புனரமைக்க நடவடிக்கை-

யாழ். நல்லுர் பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வீதி அபிவிருத்தி தொடர்பாக கிராம உத்தியேகஸ்தர் பிரிவு ஜே-112,113 ஆகிய பிரிவுகளில் உள்ள பூதவராயர் வீதி, கலைமகள் வீதி, விநாயகர் வீதி, ஆறுமுகம் வீதி, வீரபத்திரர் வீதி, புதியசெங்குந்தா விதி போன்ற வீதிகள் நல்லுர் பிரதேச சபை உறுப்பினரான சண்முகலிங்கம் சுரேஸ்குமார் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வாயிலாக வெகுவிரைவில் புனரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை விரல் அடையாளத்தை கொண்டு குற்றவாளிகளை இனங்காண திட்டம்-

குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை இனங் காண்பதற்கான தானியங்கி கை விரல் அடையாள முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

ஸ்கந்தவரோதயன், தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களின் மணிவிழா-

unnamed17ஸ்கந்தவரோதயன், தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் அவர்களின் மணிவிழா நேற்றையதினம் (21.02.2014) பிற்பகல் 2 மணியளவில் சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் சிரேஸ்ட விரிவுரையாளர் கந்தையா ஸ்ரீ கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக மணிவிழாவில் கலந்துகொண்ட கலாநிதி அகளங்கன் (நா.தர்மராஜா), திருமதி பூரணேஸ்வரி அகளங்கன் ஆகியோர் விழா ஏற்பாட்டுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், இடம்பெற்ற பின்னர் வரவேற்புரையை ஆசிரியர் எஸ்.மோகன்ராஜ் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வின் ஆசியுரையை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் வழங்கினார். மணிவிழா அதிதிகளை நிகழ்வில் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் இ.ஈஸ்வரதாசன், இந்துசாசனம் ஆசிரியர், சிற்பி சி;.சிவசரவணபவன், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராசா, அகில இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் மற்றும் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் பழைய மாணவி திருமதி யோகாதேவி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகளை வழங்கினர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவரும்,, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் மீனா சித்தார்த்தன் ஆகியோர் மணிவிழா அதிதிகளை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், சிறப்புரையையும் நிகழ்த்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

unnamed4unnamed-1221unnamed3unnamed5unnamedWDunnamed1unnamed 2unnamed17unnamed-2102unnamed-565unnamed2

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ர வித்தியாலய மெய்வல்லுநர் போட்டி-

hhhhhயாழ். மல்லாகம், கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ர வித்தியாலய வருடாந்த மெய் வல்லுநர் போட்டி. கடந்த 19.02.2014 புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. சோ.சுகிர்தன், தெல்லிப்பளை கேட்டக்கல்விப் பணிப்பாளர் திரு. சு.சண்முககுலகுமாரன் ஆகியோரும், கௌரவ விருந்தினராக ஓய்வுபெற்ற யாழ். இலங்கை வங்கியின் முகாமையாளர் திரு. எஸ். விக்னராஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். வித்தியாலயத்தின் அதிபர் திரு. சிவகுமார் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிபர் திரு சிவகுமார் அவர்கள் உரையாற்றும்போது, இப்பாடசாலைக்கான மைதானத்தினை அமைப்பதற்கு உரிய காணியினை வாங்க வேண்டியிருக்கின்றது. இந்த காணிக்காக ஓய்வுபெற்ற யாழ் இலங்கை வங்கி முகாமையாளர் திரு. எஸ்.விக்னராஜா அவர்கள் 10 லட்சம் ரூபாவினை வழங்கி உதவியிருக்கின்றார். இருந்தபோதிலும் இப்பணியினை மேற்கொள்வதற்கு பெருமளவு நிதி மேலதிகமாக தேவைப்படுகின்றது. ஆகையினால் பழைய மாணவர்கள், புலம்பெயர்ந்து வாழும் இப்பிரதேச மக்களிடமும் இதற்கு தங்களாலான உதவிகளை வழங்க முன்வருமாறு விண்ணப்பிக்கின்றேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த மைதானம் அமைவதற்கு புலம்பெயர்ந்து வாழும் இப்பிரதேச மக்களும், பழைய மாணவர்களும் மாத்திரமல்லாது நன்கொடையாளர்களும் நிதியுதவியளிக்க வேண்டுமென்றும், இந்த மைதாத்தினை அமைப்பதற்கு உதவுவதன் மூலம் மாணவர்கள் கல்வியில் மாத்திரமல்லாது அவர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களிலும் தம்மை ஈடுபடுத்தி உடல் ரீதியிலும் திறமை கொண்டவர்களாகவும், வலிமை பெற்றவர்களாகவும் விளங்க ஏதுவாகவிருக்கும் என்றும் தெரிவித்தார்.

நவிப்பிள்ளை அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம்;-அமெரிக்க அதிகாரி-

navneethamஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் அமையும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை உள்ளிட்ட பன்னிரண்டு முக்கிய பரிந்துரைகளை அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே அமெரிக்கா, தன்னால் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையில் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை அடியொற்றியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர், நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில விடயங்களை அடிப்படையாக கொண்டே அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருக்கும். ஆனால், முழுமையாக அதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் இரு மண்டையோடுகள் மீட்பு-

mannarமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் இரண்டு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் இந்த புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த மண்டையோடுகளின் எண்ணிக்கை 76 ஆக உயர்வடைந்துள்ளது. மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது முதல் 29 ஆவது நாளாக இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டமீறல் தொடர்பில் 30 பேர் கைது-

LK policeதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 30 பேருக்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை 9 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பேரணி சென்றமை, பதாதைகள் ஒட்டியமை மற்றும் பிரதான வீதிகளில் தேர்தல் இலக்கங்களை வரைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-

afkhan1ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின்போது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் உயர் அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரையும் அவர் சந்தித்து பேசவுள்ளார். ஜெனீவாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது,

வவுனியாவில் வாராந்த பத்திரிகை நிறுவனம்மீது தாக்குதல்-

vavuniya blastவவுனியாவிலிருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றை இலக்கு வைத்து மணியளவில் வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா, தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள இப்பத்திகை நிறுவத்தில் பணிகளை முடித்துக்கொண்டு அலுவலகத்தை மூடிய சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் வீசப்பட்ட பொருளே வெடித்துள்ளதாகவும், எனினும் பத்திரிகை நிறுவனத்தின் முன்பாக இப் பொருள் வீழ்ந்து வெடித்தமையினால் நிறுவனத்திற்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் தொடர்பில் 21 முறைப்பாடுகள் பதிவு-

imagesCAB3LJ2Hமாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 21 முறைபாடுகள் இதுவரை தமக்குக் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றுள் தேர்தல் வன்முறைகள் தொடர்பிலான 7 முறைபாடுகளும், தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 14 முறைபாடுகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த முறைபாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறிப்பாக அச்சுறுத்தல்கள் மற்றும் தேர்தல் பிரசார அலுவகம்மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுளும் கிடைத்திருப்பதாகவும், தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் 74ஆம் விதிமுறையைப் பின்பற்றி நடக்குமாறு வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களிடம் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளின் மத்தியில் சிறுநீரக கோளாறு-

untitled6தமிழகம் மதுரையில் உள்ள இலங்கை அகதிகளின் மத்தியில் சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது திருவாரூர் அகதி முகாமில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த முகாமில் கடந்த நான்கு வருடங்களில், சிறுநீரக கோளாறினால் நோயால் 9 அகதிகளின் மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. முகாமிற்கு விநியோகிக்கப்படுகின்ற தரமற்ற நீர் விநியோகமே இதற்கான காரணம்என்று த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறுமாறு இராணுவம் அழுத்தம்;

srilankan refugeesதாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள யாழ். உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக அந்த முகாமில் உள்ள வலி. வடக்கு மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். வலி.வடக்கில் சொந்தக் காணியில்லாதவர்களையே மாவை கலட்டியில் உள்ள அரச காணியில் குடியேறுமாறு நலன்புரி நிலைய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கு, பலாலியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள் கடந்த 24 வருடங்ளாக உடுப்பிட்டியிலுள்ள தனியார் காணியில் நலன்புரி நிலையம் அமைத்துத் தங்கியுள்ளனர். Read more

வவுனியா சைவபிரகாச ஆரம்பப் பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டி-

feffeeeவவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்றுப் பிற்பகல் 2.00 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் பாடசாலையின் கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில்; இந்நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதிக்கல்வி பணிப்பாளர் (திட்டமிடல்) செல்வி லதாங்கி அம்பிகைபாலன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.பி.நடராஜ் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக சைவபிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி உமா இராசையா, உதவிக் கல்விப்பணிப்பாளர் உடற்கல்வி (ஜனாப் எ.எம்.சுபைர், வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும், புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் பங்கேற்றிருந்தனர்.

'_k'k'_k'k_j_j_jeeeee_kkkbfrefewww

தென்னாபிரிக்காவின் அழைப்பு வரவில்லை-இரா.சம்பந்தன்-

sampanthanஅரசாங்கத்தின் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தென்னாபிரிக்காவுக்கு வருகை தரும் என அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்திருந்த நிலையில், அவ்வாறான எந்த அழைப்புக்களும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.. கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றியிருந்த தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசியிருந்தார். இச் சந்திப்பின்போது இருதரப்பும் தென்னாபிரிக்கா சென்று அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பினர் என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் கூறியுள்ளார். இதனடிப்படையிலேயே, அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை தென்னாபிரிக்கா சென்றுள்ளதாகவும், அதுபோலவே கூட்டமைப்பும் விரைவில் தென்னாபிரிக்கா வரவுள்ளதாகவும் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார்.

நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை- முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்-

vikiவடமாகாணத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பீ.பீ.சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்த பல இராணுவ காவலரண்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டிய விடயம். ஆனாலும் காவலரண்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினர் சைக்கிள்களில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அந்த பகுதிகள் பயங்கரவாதப் பிரதேசம் என்று கருதுகின்ற மனநிலையே காரணம். ஆனால் வடக்கு மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் இல்லை என முதலமைச்சர் கூறியுள்ளார். அதேநேரம் கடந்த காலங்களை மறந்து விடுமாறு யாராலும் சாதாரணமாக கோர முடியும். மறப்பதற்கு தமிழ் மக்கள் சந்தித்த கடந்தகாலம் சாதாரணமானதாக இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கரம்பன் தென்கிழக்கில் சட்டவிரோத நடவடிக்கை தடுக்கப்பட்டது-

palmeraயாழ். தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரம்பன் தென்கிழக்கு பகுதியில் கடந்த 19.02.2014 அன்று சட்டவிரோதமாக பனைமரங்கள் தறிக்கப்பட்டன. இதன்போது பிரதேசவாசிகள் பிரதேச செயலர் திருமதி. எழிலரசி அன்டன் யோகநாதனுக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து பிரதேச செயலாளர் திருமதி. எழிலரசி அன்டன் யோகநாயகம் தலைமையில் உடனடியாக சம்பவம் இடம்பெற்றுவந்த பற்றைக்காட்டுப் பகுதிக்கு ஊர்காவற்துறை பிரதேச செயலக அலுவலர்களுடன் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் பணிப்பின் பேரில் ஊர்காவற்துறை பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர் இதன்போது அவ்விடயத்தில் தறிக்கப்பட்ட பனை மரங்களுடன் நால்வர் கைதாகினர். அவர்களிடமிருந்து பெறுமதி மிக்க ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இதன்போது ஊர்காவற்துறை நீதிமன்றில் கைதானவர்களை ஆஜர்படுத்துவதாக போலிஸ் அதிகாரி கூறினார். மேற்படி சம்பவத்தில் பிரதேச செயலாளரின் துணிச்சலை அப்பிரதேச மக்கள் பாராட்டியுள்ளனர்.

இலங்கையர்களை நாடு கடத்துமாறு காங்கிரஸ் வலியுறுத்தல்-

unnamed0இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களும் நாடுகடத்தப்பட வேண்டும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைமை கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் வீ.வைத்தியலிங்கம் இதனை கோரியுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலைசெய்ய தமிழக அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம், எதிர்வரும் லோக்சபா தேர்தல்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் இந்தியாவில் உள்ள சகல இலங்கை தமிழர்களையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழகம் ஜனாதிபதிக்கு ஆட்சிக்குள் வரவேண்டும்-சுப்பிரமணியம் சுவாமி-

subramaniam swamyராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் சட்ட விரோதமானது என ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை இரத்து செய்ய ஜெயலலிதா ஜெயராம் முன்வராத பட்சத்தில், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஜெயலிலதாவின் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான உத்தரவை, இந்திய அரசியல் அமைப்பின் 256 சரத்தின்படி, மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு ஜெயலலிதா அடிபணியாமல் இருப்பாராக இருந்தால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுலாக்குவதை விட வேறு வழி இல்லை என்றும் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பூண்டுலோயா தீ விபத்தில் 31 கடைகள் நாசம்-

imagesCAYGW205நுவரெலியா, பூண்டுலோயா நகரில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் காரணமாக நகரின் 31 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. சில்லறைக் கடை ஒன்றில் முதலில் ஏற்பட்ட தீ பின்னர் அந்த கடைத் தொகுதியில் தொடர்ந்து பரவியுள்ளது. நுவரெலியா தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றபோதும், அதனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் பெக்கோ இயந்திரதைத் கொண்டு குறித்த கடைத் தொகுதி இடிக்கப்பட்டு, தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிராணி தொடர்பான தீர்ப்பு, உயர்நீதிமன்றம் நிராகரிப்பு-

shirani-bandaranayake-626x380-626x380முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்ய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது நாடாளுமன்றத்துக்கு இந்த அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது இந்நிலையில் இதற்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தார் இந்த விசாரணை இன்று இடம்பெற்றபோது தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், உயர் சட்டவாக்க சபை என்ற அடிப்படையில் நாடாளுமன்றுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது

உதயன் நிறுவன வளாகத்திலிருந்து குண்டு மீட்பு-

udayanயாழ். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை நிறுவன வளாகத்திலிருந்து பழைய ‘பாம்’ குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பத்திரிகை வாளாகத்தினை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பாம் குண்டு ஒன்று இருப்பதனை அவதானித்த ஊழியர்கள் இது குறித்து தகவல் வழங்கியதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதுபற்றி இராணுவத்தின் குண்டு செயலிழக்கும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குண்டு மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி-

untitled eவடக்கு கிழக்கில் மாகாணங்களில் வாழும் போரில் துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுக்கும் என அதன் ஆசிய பிராந்திய தூதுவர் டேவிட் டாலி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தானிய களஞ்சியத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியத்தை நிர்மாணிக்க 44 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த களஞ்சியத்தில் 500 மெற்றி தொன் தானியங்களை சேமித்து வைக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியா தனி தீர்மானம்-திமுக-

untitledஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக ஐ.நா மனித உரிமை ஆணையத்திடம் இந்தியா தனி தீர்மானம் அளித்திட வேண்டும் என மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துள்ளனர். இதன்போது, இலங்கையில் 2008-2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரின்போது போர்க் குற்றம் புரிந்தது. தொடர்பாக ஐக்கிய நாடுகள் தலைமையிலான தன்னிச்சையான மற்றும் சர்வதேச விசாரணை நடத்த ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுள்ளனர். மேலும், 2008 டிசம்பர் மாதம் முதல் 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா-வின் கீழ் இயங்கும் தன்னிச்சையான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும். Read more

 திடற்புலம் பரிசளிப்பு விழா, வட மாகாணசபை உறுப்பினர் த.சித்தார்த்தன் பங்கேற்பு-

thidatpulam news 20.02 (6) இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், நரசிங்க வைரவர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழா யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு திடற்புலத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வினில் பிரதம விருந்தினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உடுவில் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தர்பனா சுதர்சன் அவர்களம், கௌரவ விருந்தினரான உடுவில் கோட்டக் கல்வி அலுவலர் திரு. ஞ.குணரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நரசிங்க வைரவர் அறிநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திரு. ஜெயப்பிரகாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அறிநெறிப் பாடசாலைகளின் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசியதுடன், அறறெநிப் பாடசாலைகளின் மூலம்தான் எங்களுடைய சமய வளர்ச்சிகண்டு வருகின்றது என்றும் அறநெறிப் பாடசாலைகள் ஊடாக எங்களுடைய பிள்ளைகளை சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதன் மூலம்தான் சமுதாயத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இன்றைக்கு முக்கியமாக யாழ்ப்பாணத்தில் மிகவும் கலாச்சார சீரழிவு மலிந்து காணப்படுகின்ற நிலையில் இந்த சிறார்களுக்கு சிறுவயது முதலே சமய விழுமியங்களை கற்பிப்பதன் மூலம் அறிநெறிப் பாடசாலைகள் மிகப்பெரியதொரு சேவையினைச் செய்து வருகின்றன. எனவே இந்நடவடிக்கைக்கு அனைவரும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ கோபாலசர்மா அவர்கள் ஆசியுரை வழங்கினார்.

thidatpulam news 20.02 (4)thidatpulam news 20.02 (3)thidatpulam news 20.02 (1)thidatpulam news 20.02 (2)thidatpulam news 20.02 (5)thidatpulam news 20.02 (7)

வலி மேற்கு பிரதேச சபை தவிசாளரின் ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள்-

vali metku pradesa sabai etpaadu (5)யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி. ஐங்கரனது அழைப்பின் பேரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் 18.02.2014 அன்று வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது வட்டு இந்து நவோதய பாடசாலைக்கு அவர் விஜயம் செய்து அப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினருடன் ஆராய்ந்தார். இக் கலந்துரையாடலில் பாடசாலை அதிபர் சிவஞானபோதன் தனஞ்சேயன், வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான கௌரவ இராஜதுரை, கௌரவ சபாநாயகம், கௌரவ சசிதரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்பின்னர் பாடசாலையின் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல இடங்களையும்; அவர்கள் பார்வையிடப்பட்டதுடன் தொடர்ந்து வட்டு கிழக்கு சித்தன்கேணியில் அமைந்துள்ள அறிவொளி சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவு சங்கத்திற்கும் விஜயம் மேற்கொண்டு 2013ம் ஆண்டில் ஒதுகீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக கொள்வனவு செய்யப்பட்ட பாத்திரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈ.சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் வழங்கினர். Read more