Header image alt text

வலி மேற்கில் பஜனைப் பாடசாலைத் திட்டம் ஆரம்பித்து வைப்பு- 

N.Ainkaran News (5aN.Ainkaran News (3a

N.Ainkaran News (2a

N.Ainkaran News (1aயாழ். வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்சரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் பஜனைப் பாடசாலைத் திட்டம் கடந்த 27.03.2014 வியாழக்கிழமை அன்று அராலி மத்தி பிரதேசத்தில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டது. வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் அவர் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைத்து மாணவர்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமளித்தார். இந்நிகழ்வில் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான த.நடனேந்திரன். த.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்சரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் பஜனைப் பாடசாலைத் திட்டம் 27.03.2014 அன்றுமாலை 6.30 மணியளவில் யாழ். மூளாய், தொல்புரம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஞானவைரவர் கோவிலிலும் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு ஆலய பரிபாலன சபை உறுப்பினர் பஞ்சாட்சரம் அவர்கள் தலைமை தாங்கினார் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர் த.சசிதரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கினர். இந் நிகழ்வில் உரையாற்றிய திரு. சசிதரன் அவர்கள், எமது இனத்தினுடைய பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய நோக்காகக் கொண்டே, எமது சபையினுடைய தவிசாளர் இந்நிகழ்வை ஆரம்பித்திருக்கின்றார். இவ்வாறு எமது பிரதேசத்திலுள்ள சகல ஆலயங்களிலும் இந்த செயற்பாட்டை மேற்கொள்வதன்மூலம் குறித்த ஒரு நாளிலாவது பெரியார்கள் முன்னிலையில் எமது சிறார்களை எமது மதம் சார்ந்த விடயங்களில் ஈடுபடவைத்து நல்வழிப்படுத்த முடியும் என்பதே எமது நம்பிக்கையாகும். வெறுமனவே எமது சழூதாயம் சீரழிந்து விட்டது கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று குறிப்பிடுவதில் பயன் இல்லை இச் செயற்பாடுகளை இலகுவாக்குவதே எமது தவிசாளரது நோக்கமாகும் இந்த நோக்கத்தினை நிறைவு செயய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகள்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற ஆறு மாவட்டங்களுக்குமான விருப்புவாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமசந்திர 1,39,034 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார். ஆளும் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட உதய கம்மன்பில 1,15,638 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், உப்பாலி கொடிகார 47,822 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67,243 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட கே.டி. லால்காந்த 45,460 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுசில் கிந்தெல்பிட்டிய 32,918 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட மனோ கணேசன் அந்த கட்சி சார்பில் 28,558 வாக்குகளைப் பெற்று மேல் மாகாணத்திற்கு தெரிவாகியுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி 44,156 வாக்குகளைப் பெற்றதுடன், சண் குகவரதனும் தெரிவானதன் ஊடாக அக்கட்சி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. Read more

அராலி கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்க பொதுக்கூட்டம்-

யாழ். அராலி கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வு 27.03.2014 வியாழக்கிழமை அன்றுமாலை அராலியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும் போது, சிறு துளி பெரு வெள்ளம் என்ற சொற்பதத்திற்கு அமைய இவ் அராலி கிழக்கு சிக்கன கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ்வாறான சங்கங்களின் வாயிலாக உள்ளுரில் சுழற்சி முறையில் கடன் வழங்கும் எமது நிதி எமது சழூகத்தினுள்ளே சுழற்சிக்கு உட்படும் இச் செயற்பாடு எமது சழூகத்தின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும். இன்று பல புதிய நிதி நிறுவனங்களும் இங்கு செயற்படுகின்றன. இந் நிறுவனங்களின் ஊடாகவும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்ய நிதியினை பெற்றுவருகின்றனர் இவ்வாறு பெற்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே உள்ளனர். கூடுதலான நிதி நிறுவனங்கள் பெண்களின் அபிவிருத்தி நோக்கியதாகவே இக் கடன்களை வழங்கி வருவதும் குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இன்றும் இந் நிகழ்வில்கூட பெண்களே அதிகமாக உள்ளனர். இது பெண்களின் செயற்பாடுகளிலேயே கிராமிய பொருளாதாரம் தங்கியுள்ளது என்பதனை மிக தெளிவாக காட்டி நிற்கின்றது. இதேவேளை நிதி நிறுவனங்கள் குறித்த ஒரு செயற்பாட்டிற்காக கடனை வழங்கும்போது குறித்த அச் செயற்பாடு நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதனையும் ஆராய்தல் அவசியமான ஒன்றாக உள்ளது. நிதி நிறுவனங்கள் வெறுமனே கடனை அறவிடும் செயற்பாடுகளில் மட்டும் ஈடுபடக் கூடாது உரிய நோக்கம் நிறைவு செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராய வேண்டும் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .ஈ.சரவணபவன் அவர்கள் மற்றும் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான த.நடனேந்திரன். த.சசிதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீர்மானத்தை நிராகரிப்பதால் திணறப்போவது இலங்கையே-யஷ்மின் சூகா-

ஐ.நா.மனித உரிமைகள் சபையுடன் இலங்கை அரசு ஒத்துழைக்க மறுக்குமானால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். அவற்றில் பொருளாதாரத் தடையும் உள்ளடங்கலாம் என இலங்கையின் போர் மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் ஆலோசகர் யஷ்மின் சூகா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பதும், அதனை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்ததும் தெரிந்ததே. அவ்வாறான ஒரு நிலை நீடிக்குமானால் என்ன நடக்கும் என்பது பற்றி கருத்து வெளியிட்டுள்ள யஷ்மின் சூகா, பொருளாதாரத் தடைகள் பல்வேறு விதமாக செயற்படுத்தப்படக் கூடும். அவை பற்றி விரிவாக இப்போது கூற முடியாது. ஆனால் சர்வதேச விசாரணைக்கு அவர்கள் இணங்க மறுத்தால் அவை மிக பாரதூரமானவையாக இருக்கும். சர்வதேச விசாரணையை நிராகரிப்பது என்பது ஆணையாளர் நவிப்பிள்ளையை நிராகரிப்பதாக கருதக்கூடாது. அது ஐ.நா. மனிதஉரிமைகள் சபையின் தீர்மானத்தை நிராகரிப்பதாக இருக்கும் என்று இலங்கை போர் மீறல்கள் தொடர்பான ஐ.நா ஆலோசகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

20 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை-

votingஇந்த மாகாண சபை தேர்தலில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 20 லட்சம் வாக்களர்கள் வாக்களிக்கவில்லை என்று புள்ளிவிபரவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தென் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் எண்ணிக்கை 18 லட்சத்து 73 ஆயிரத்து 804 ஆகும். எனினும் இவர்களில் 12 லட்சத்து 52 ஆயிரத்து 296 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளனர். இதன்படி தென் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 508 பேர் வாக்களிக்கவில்லை. இதனிடையே, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்களார்களின் எண்ணிக்கை 40 லட்சத்து 24 ஆயிரத்து 624 ஆகும். எனினும் இவர்களில் 26 லட்சத்து 69 ஆயிரத்து 316 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 15 லட்சத்து 52 ஆயிரத்து 734 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதிலும், அவர்களில் 10 லட்சத்து 21 ஆயிரத்த 188 மாத்திரமே வாக்களித்துள்ளனர். இதனிடையே கம்பஹா மாவட்டத்தில் 15 லட்சத்து 90 ஆயிரம் வாக்களர்களும், களுத்துரை மாவட்டத்தில் 8 லட்சத்து 81 ஆயிரம் வாக்களார்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், அங்கு சராசரியாக 35 வீதமானவர்களே வாக்களித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பு புலம்பெயர் அமைப்புக்கு அடிமை-சுதர்சன நாச்சியப்பன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கு அடிமையாகியுள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியாவின் வர்த்தக அமைச்சர் சுதர்சண நாச்சியப்பன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதனிடையே, ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், இந்தியாவின் பிரதிபலிப்பு சாதாரணமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்காமை தொடர்பில் இந்தியாமீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் இதற்கு பதிலளித்த நாச்சியப்பன், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியா பாரிய ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. இந்நிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காவிட்டால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும். இலங்கை மீதான சுயாதீன விசாரணையை இந்தியா நிராகரிக்கிறது. இவ்வாறான ஒரு நிலைமை நாளை இந்தியாவுக்கும் வரலாம் என சுதர்சன நாச்சியப்பன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீதுவை தனியார் வங்கியில் கொள்ளை-

bank robbery....கட்டுநாயக்க – சீதுவை பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் இன்றுகாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முகத்தை மூடிய வண்ணம் நால்வர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட நாணய தாள்களின் தொடர் இலக்கங்கள் ஜீ கிடைக்கோடு 1239037451 தொடக்கம் ஜீ கிடைக்கோடு 1239037500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் இலக்கங்களுடன் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருமாயின் பொதுமக்கள் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தனியார் வங்கி முகாமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொது சுகாதர பரிசோதகர்களை நியமிக்க கோரி கவனயீப்பு-

aarpaattamவட மாகாணத்தில் உள்ள பிரதேச சபைகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்ளை நியமிக்க கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு முன்பாக சபையின் தலைவர் க.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மாகாணத்தில் உள்ள 3 பிரதேச சபைகளில் பணியாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களை இடமாற்றியுள்ளமையை கண்டித்தும் அதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாகவும் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தல் இல்லை-ஜனாதிபதி-

2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தென் மாகாணத்தின் டி.ஏ.ராஜபக்ஷ மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி கூறியுள்ளார். மக்கள் இப்பொழுது புலனாய்வு தகவல்கள் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் ஜனநாயகத்தினை விரும்புகிறார்கள். ஆகையினால், அவர்களின் எதிர்பார்ப்பு ஒருபோதும் வீண்போகாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா படகு விபத்து, பெண் ஊடகவியலாளரும் பலி-

journalist deadவவுனியா, மாமடு குளத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்த மூவரில் ஒருவர், இளம் பெண் ஊடகவியலாளர் என அடையாளங் காணப்பட்டுள்ளார். வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும் பட்டைக்காடை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (வயது 26) என்ற பெண் ஊடகவியலாளரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர், இலங்கை இதழியல் கல்லூரியில் கடந்த 2010ஆம் ஆண்டு அச்சு ஊடகத்தில் கல்வி பயின்று பின், தினகரன் மற்றும் சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் ஊடகவியாளராக பணியாற்றியுள்ளார். திருமணம் முடித்து நான்கு மாதங்களே ஆன நிலையில் இவர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி-

kopay college of education 29.03 (17)யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் போட்டி நேற்று (29.03.2014) பிற்பகல் 2மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கடந்த 14வருடங்களாக கோப்பாய் கல்வியியற் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிவரும் திரு லயன்ஸ் ஈ.எஸ்.பி நாகரட்ணம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் ஐங்கரன் வெதுப்பக உரிமையாளர் ஆர்.பொன்குமார் மற்றும் பாலசிங்கம் சிவசுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கல்லூரியின் வளாகத்திலிருந்து பாண்ட் வாத்தியத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. போட்டிகளின் நிறைவில் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்தக் கல்லூரி ஆசிரியர்களை உருவாக்கக்கூடிய ஒரு கல்லு{ரியாகும். எங்களுடைய சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதென்றால் கல்விதான் முக்கியமானதொரு விடயமாக இருக்கின்றது. கல்வி ஒன்றின் மூலம்தான் எங்களுடைய சமூதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும், இதிலே ஆசிரியர்களாகிய உங்களுடைய பங்குதான் மிகவும் பெரியதாக இருக்கும். நீங்கள் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கப் போகின்றீர்கள். ஆகவே நீங்கள் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு உங்களால் இயன்றளவுக்கு பாடுபட வேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய ஆசிரியர்களுள் பெரும்பாலானோர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். அதுபோல் நீங்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றோம் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

kopay college of education 29.03 (23)unnamed0kopay college of education 29.03 (20)unnamedCAGYU3SUkopay college of education 29.03 (9)unnamed4unnamed 1unnamedCA5QMG4WunnamedCA0T1WKJkopay college of education 29.03 (14)kopay college of education 29.03 (12)unnamedCA00EHOVkopay college of education 29.03 (15)unnamed3kopay college of education 29.03 (22)kopay college of education 29.03 (21)unnamedCAUQLOSJkopay college of education 29.03 (25)kopay college of education 29.03 (16)

கீரிமலையில் கலைக் கூடத்துடன் கூடிய கலாசார மண்டபம் திறந்துவைப்பு-

யாழ். கீரிமலையில் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் இயங்கும் சிவபூமி அறக்கட்டளை, அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியன இணைந்து கட்டமைத்த கலைக் கூடத்துடன் கூடிய கலாச்சார மண்டபம் இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டது. இந்து மாமன்றத்தின் முன்னைநாள் தலைவர் கைலாசபிள்ளை அவர்களால் இக்கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. சோமசுந்தரம் அவர்கள் மேற்படி கட்டிடம் அமைப்பதற்கான காணியை அன்பளிப்பாக வழங்கியிருந்ததுடன், இக்கட்டிடம் அமைப்பதற்கான அனுசரணையை திரு. கைலாசபிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார். மேற்படி கட்டிடத் திறப்புவிழா நிகழ்வில் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கலாநிதி நீலகண்டன், இலங்கைக்கான இந்திய பிரதித்தூதுவர் மகாலிங்கம், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர் சுகிர்த்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல சிவாச்சாரியார்களும் ஆசியுரை வழங்கினார்கள். பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

மேல், தென் மாகாண சபைகளுக்கான ஆசனங்களின் விபரம்-

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல் மாகாண சபை மற்றும் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபை ஆகிய இரண்டு மாகாண சபைகளுக்குமான போனஸ் ஆசனங்களை உள்ளடக்கிய ஆசனங்களின் விபரங்கள் பின்வருமாறு

மேல் மாகாண சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,363,675 ஆசனங்கள் 56
ஐக்கிய தேசியக் கட்சி – 679,682 ஆசனங்கள் 28
ஜனநாயகக் கட்சி – 203,767 ஆசனங்கள் 09
மக்கள் விடுதலை முன்னணி – 156,208 ஆசனங்கள் 06
ஜனநாயக மக்கள் முன்னணி – 51,000 ஆசனங்கள் 02
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 49,515 ஆசனங்கள் 02
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 15,491 ஆசனம் 01

தென் மாகாண சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 699,408 ஆசனங்கள் 33
ஐக்கிய தேசியக் கட்சி – 310,431 ஆசனங்கள் 14
மக்கள் விடுதலை முன்னணி – 109,032 ஆசனங்கள் 05
ஜனநாயகக் கட்சி – 75,532 ஆசனங்கள் 03

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் ஆளும் கட்சியின் வசம்-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், இந்த மாகாண சபைகளின் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவடங்களுக்குமான தொகுதி வாரியான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு தொகுதியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளது.

தென் மாகாணத்தில் மொத்தமாக ஆறு இலட்சத்து 99 ஆயிரத்து 408 வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், மாகாணத்தின் அதிகாரத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் பிரகாரம் தென் மாகாண சபையின் 31 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசப்படுத்தியுள்ளது. Read more

தேர்தல் பாதுகாப்பிற்கு விசேட ஏற்பாடுகள்-

இன்று நடைபெறுகின்ற மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்பொருட்டு சுமார் 37 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிகளின் பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் மேல் மற்றும் தென் மாகாணங்களில் விசேட வீதித் தடைகளும் போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். பெண்களுக்கான வாக்ளிப்பு நிலையங்களிலும் பெண் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர்களிடம் வாக்குகளுக்காக மன்றாடுதல், வாக்காளர்களை வற்புறுத்தி வாகனங்களில் ஏற்றிச்செல்லல் என்வற்றை தடுக்க வாக்குச் சாவடிகளுக்கு அருகில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் சட்டங்களை மீறுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான உரிய ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டு மத்திய நிலையம் வாக்கு எண்ணும் வரை இயங்கும்-தேர்தல் ஆணையாளர்-

தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தேர்தல் வாக்குகள் எண்ணி முடிவடையும்வரை இயங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தின் கீழ் இந்த தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் இயங்குவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளது. எனினும் தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையம் தேர்தல் வாக்குகள் எண்ணி முடிவடையும்வரை இயங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்-

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக தேர்தல்கள் செயலகம் விசேட தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 0112 877 631 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். கம்பஹா மாவட்டத்தில் 0112 877 632 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக முறைப்பாடு செய்யலாம். களுத்துறை மாவட்டத்தில் 0112 877 633 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். காலி மாவட்டத்தில் 0112 877 634;என்ற இலக்கத்தினூடாக அறிவிக்க முடியும். மாத்தறை மாவட்டத்தில் 0112 877 635 என்றஇலக்கத்திற்கும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 0112 877 636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் முறைப்பாடு செய்ய முடியுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

தேர்தல் வன்முறை தொடர்பில் 1159 முறைப்பாடுகள் பதிவு-

மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் இதுவரை 1159 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில்1106 முறைப்பாடுகளும் தேர்தல் வன்முறை சம்பவம் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் இவ் அமைப்பிற்கு கிடைக்கப்ப பெற்றுள்ளது. மேல் மாகாணத்தில் ஆகக் கூடியதாக இது வரை 680 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் தென் மாகாணத்தில் 402 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 356 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொலீஸ் பற்றாக்குறையே இராணுவ பிரசன்னத்துக்கு காரணம்-சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர்-

யாழ். குடாநாட்டில் உள்ள பொலிஸாரின் எண்ணிக்கை போதாமலுள்ளது. அவ்வாறே அவர்களுக்கான வாகன வசதியும் பற்றாக்குறையாகவுள்ளது. அதனாலேயே இங்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இரவு ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர் என யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன.தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு நீதிபதிகள், அமைச்சர்கள் வருகை மற்றும் பல தேவைகள் காரணமாக பொலிஸாரைச் சகல இடங்களுக்கும் அனுப்ப வேண்டியுள்ளது. அதனாலும் பொலிஸாரின் எண்ணிக்கை இங்கு போதாமலுள்ளது. அதனாலேயே இங்கு இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுகின்றோம் என சிரேஸ்ட பொலிஸ் அத்;தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவில் இந்தியா எடுத்த நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது – அமெரிக்கா-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மான வாக்களிப்பை இந்தியா தவிர்த்துக் கொண்டமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த இரு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இம்முறை தீர்மான வாக்களிப்பில் கலந்து கொள்ளாமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி பேச்சாளர் மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் இந்திய அதிகாரிகள் பேசிய விதம் தொடர்பில் பெரும் ஏமாற்றம் அடைந்து விட்டதாகவும் வாக்களித்த விதமும் திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை மீதான தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் 12 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல – அமெரிக்கா-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானதல்ல என அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களின் நலன்களை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கியமானதும், சமாதானமானதுமான நாட்டில் கௌரவமாக அனைத்து இலங்கையர்களும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும். இந்த முனைப்புக்களுக்கு இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா ஆர்வம் காட்டுகின்றது என மிச்சல் ஜே. சிசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டது-தமிழ் தேசியக் கூட்டமைப்பு-

sampanthanஅமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைபு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் இது தொடர்பில் ஊடகத்திற்கு கருத்துக் கூறுகையில், அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கும் நன்றியினை தெரிவிக்கின்றோம். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆதரிக்கின்றோம். இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாகும். இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு வருத்தமளிப்பதாக இருந்தாலும், இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியா பொறுப்புடன் நடந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்-ப.சிதம்பரம்-

p.chitamparamஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட வரைவு தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இந்திய மத்திய அரசு நடுநிலையான முடிவை எடுத்திருக்கிறது. இந்த முடிவு இந்திய வெளிவிவகார அமைச்சினாலேயே எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அமைச்சரகம் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் சிதம்பரம் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிகத்தில் உள்ள கட்சிகளும் ஒற்றுமை இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும் 23 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து இருக்கின்றன. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி பேச நிறைய வாய்ப்புகள், அரங்குகள் உள்ளன. அதனால் நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகளில் 26 ஆயிரம் பொலிஸார் ஈடுபாடு-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளின் பொருட்டு 26 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் துப்பாக்கியுடன் இரு பொலிஸார் வீதம் இன்று முதல் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பெண்களுக்கான வாக்ளிப்பு நிலையங்களில் நாளைமுதல் பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர்களிடம் வாக்குகளுக்காக மன்றாடுதல், வாக்காளர்களை வற்புறுத்தி வாகனங்களில் ஏற்றிச் செல்லல் என்பவற்றை தடுக்க வாக்குச் சாவடிகளுக்கு அருகிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அருகிலுமாக மூன்று கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தேர்தல் சட்டங்களை மீறுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உரிய ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

யாழ். நோக்கி துப்பாக்கிகளுடன் சென்ற ஐவர் கைது-

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி காரில் சென்றவர்களிடம் போலி கைத்துப்பாக்கிகள் காணப்பட்டதையடுத்து அதில் பயணித்த ஐவர் வவுனியா பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற கார் ஒன்றினை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள கல்குனாமடு சந்தியில் வைத்து பொலிஸார் சோதனை செய்தபோது அதில் போலி கைத்துப்பாக்கிகள் 02, கையுறைகள் 10 மற்றும் வாகனத்திற்கான போலி இலக்க தகடுகள் சிலவும் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த காரில் பயணம் செய்த கொழும்பைச் சேர்ந்த நால்வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமாக ஐவர் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களிடம் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாத்தறையில் தேர்தல் அதிகாரிகள் குழுவின் கடமைக்கு இடையூறு-

மாத்தறையில் உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக தேர்தல்கள் செயலகத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்றை மாத்தறைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை கடற்கரை வீதியில் பொருத்தப்பட்டிருந்த வேட்பாளர் ஒருவரின் பிரசார பதாகைகளை அகற்றுவதற்கு சென்ற சந்தர்ப்பத்தில், விசாரணை அதிகாரிகளின் கடமைக்கு சிலர் இடையூறு விளைவித்துள்ளதுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறியுள்ளார்.

வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் அனுப்பிவைப்பு-

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் இன்றுகாலை 7மணிமுதல் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. 4, 253 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். 58இலட்சத்து 98ஆயிரத்து 427பேர் இந்த இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். இதேவேளை, 608 வாக்கெண்ணும் நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மேல் மாகாணத்தில் 420 நிலையங்களிலும், தென் மாகாணத்தில் 188 நிலையங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.

சீன பிரதிநிதிகளுடன் உடன்படிக்கை-

எதிர்வரும் வாரம் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொள்ளவிருக்கும் சீனப் பிரதிநிதிகள் இங்கு பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இந்நிலையில், அந்த குழுவுடன் சுற்றுலா, கைத்தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு முதலீடுகள் தொடர்பான உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும், சீன பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டுக்கு த.தே.கூட்டமைப்புக்கு அழைப்பு-

untitledஇனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான தேசிய ஒருமைப்பாட்டு மகாநாடு ஒன்று எதிர்வரும் ஏப்ரல் ஏழாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவிருக்கும் மேற்படி மாநாட்டுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியகட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டில் சுமார் 1500 பேர் வரையில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடையார்கட்டில் ரி.ஐ.டியினரால் ஒருவர் கைது-

imagesCA5PZGM2முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் வைத்து சின்னத்துரை சிறீகாந்தன் (35) என்ற இளைஞன் நேற்று இரவு 11 மணியளவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டுள்ளார். புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்படடிருந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். புத்தூர் மேற்கைச் சேர்ந்த இவர் உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வந்தவர். அப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவரும் ரி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்-

un manitha urimai peravaiஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. 47 நாடுகளை கொண்ட இந்த கவுன்ஸிலில் 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. பிரேரணைக்கு ஆதரவாக ஆஜர்ன்டினா ஒஸ்ரியா, பெனின், பொட்ஸ்வானா, பிரேஸில், சிலி, கொஸ்டாரிகா, கோர்டிவோரின், செக்குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ், ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி, மெக்சிகோ, மொன்டிநீக்ரோ, பெரு, கொரியா, ருமேனியா, மாக்கடோனியா, சியாரா லியோ, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய 23 நாடுகளும், எதிராக அல்ஜீரியா, சீனா, கொங்கோ, கியூபா, கென்யா, மாலைத்தீவு, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், வெனிசூலா, வியட்னாம் ஆகிய 12 நாடுகளும் வாக்களித்துள்ளதுடன், புருக்கினோ பாசோ, எத்தியோபியா, காபன், இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், கஸகிஸ்தான், குவைத், மொரோக்கோ, நமீபியா, பிலிப்பைன்ஸ் தென்னாபிரிக்கா ஆகிய 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காது நடுநிலை வகித்துள்ளன. ஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் புவியியல் பரம்பல் விகிதப்படி ஆபிரிக்க நாடுகள் 13, ஆசிய பசுபிக் நாடுகள் 13, இலத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள் 8, மேற்கு ஐரோப்பிய நாடுகள் 7, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் 6 ஆகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 25வது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கவே அரசு விரும்புகிறது-புளொட் தலைவர் சித்தார்த்தன்-

chulipuram varutholaiதமிழ் மக்களைத் தொடர்ந்தும் அடக்குமுறைகளுக்குள் வைத்திருப்பதற்கே அரசாங்கம் விரும்புகின்றது எனத் தெரிவித்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இதற்கமையவே தற்போது சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், விசாரணைகள் வடக்கு மாகாணம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
யாழ். சுழிபுரம் வறுத்தோலை சிவன் சனசமூக நிலையத்தில் அப்பகுதி மக்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இங்குள்ள மக்கள் வாழ்வாதார ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு மாகாண சபையினூடாக உதவிகளைச் செய்து கொடுப்பதற்கு என்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தற்போதும் இந்தப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் முதல் பல்வேறு தரப்பினர்களுக்கும் பல உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றோம். இதேபோன்று தொடர்ந்தும் உதவிகளை வழங்குவோம். இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து கொடுப்பதுடன், அவர்களின் வாழ்வாதார ரீதியான முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து உழைப்போம். Read more

சர்வதேச பொறிமுறை முன்பாக ஆஜராக சாட்சியாளர்கள் விருப்பம்-நவிபிள்ளை-

navilpillaiஉள்ளக விசாரணையின் மூலம் உண்மையைக் கண்டறிய முடியாதுபோனதால், சர்வதேச விசாரணையொன்றின் ஊடாக பரந்தளவிலான செயற்பாட்டை நிறைவேற்ற முடியும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை, மனித உரிமைகள் பேரவையில் நவநீதம்பிள்ளை நேற்று சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இங்கு உரையாற்றிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களின் துக்கத்தையும், அதிர்ச்சியையும் அடையாளம் காண தவறியுள்ளமையின் ஊடாக அரசாங்கம் மற்றும் நல்லிணக்கம் மீதான நம்பிக்கை அற்றுப் போகின்றது. இந்தவேளையில் புதிய சாட்சியங்கள் தொடர்ந்தும் தோன்றுகின்றன. சர்வதேச பொறிமுறைக்கு முன்பாக ஆஜராகி சாட்சியமளிக்க சாட்சியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த பொறிமுறைமீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவ்வாறானதொரு பொறிமுறையின்கீழ் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். இதன்மூலம் சர்வதேச விசாரணையின் அவசியம் மாத்திரமன்றி, அதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. புதிய தகவல்களை வெளிக்கொணரவும், உண்மையைக் கண்டறியவும் உள்ளக விசாரணை பொறிமுறைகளால் இயலாமல் போயுள்ளது என்பதுடன், சர்வதேச விசாரணையின்மூலம் பரந்தளவிலான பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்றார்.

யுத்தக் குற்ற விசாரணை முன்னெடுப்பதாக காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனம்-

unnamed0இந்திய காங்கிரஸ் கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வெளியிட்டது. அதில் எதிர்வரும் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கைக்கு எதிராக யுத்தக்குற்ற விசாரணை ஒன்றை முன்னெடுக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் முழுமையான அதிகாரப்பகிர்வுகளுடன் தன்னிச்சையாக இயங்கக்கூடிய மாகாண சபைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உட்பட சிறுபான்மை இன மக்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ்வதற்கான அரசியல் தீர்வும் பெற்றுத்தரப்படும் என காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இவை எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள வெற்று உறுதிமொழிகள் என தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதரவு தருமாறு பிரித்தானியா கோரிக்கை-

imagesCA5L8U3Dஇலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் பிரேரணைக்கு ஆதரவு தருமாறு, தென்கொரியா, கசகஸ்தான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை தாம் வலியுறுத்தி இருப்பதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார். ஹேக்கில் வைத்து அந்த நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, தாம் இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை உள்ளக விசாரணை ஒன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்க வேண்டிய செயற்பாடுகள் முழுமை பெறாத நிலையிலேயே சர்வதேச விசாரணையொன்று குறித்த பிரேரணை முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்-

chinaசீனாவின் வர்த்தக பிரதிநிதிகள் குழு ஒன்று இந்த வாரம் இலங்கை வரவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதிமுதல் அந்த குழு இலங்கைக்கு விஜயம் செய்து, பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் ஆயு;வு செய்யவுள்ளது. இந்த விஜயத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது. இலங்கையில் தரகு தொழில், இலத்திரனியல் உற்பத்திகள், இரும்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, தேயிலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்துறைகளில் முதலீடு செய்வது தொடர்பில் சீனா பிரதிநிதிகள் அவதானம் செலுத்தவுள்ளனர்.

இலங்கையருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிப்பு-

புலிகள் அமைப்பிற்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் எறிகணை என்பவற்றை கொள்வனவுசெய்ய முற்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு நிவ்யோர்க் நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரதீபன் நடராஜா என்ற 37 வயதான இவர் விசாரணையின் பொருட்டு கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த ஆறுபேரில் தண்டனை வழங்கப்படாதிருந்த இறுதி நபர் இவராவர். இவர் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதன் பொருட்டு, எப்பிஐ உளவு சேவை அதிகாரியுடன் கலந்துரையாடி இருந்தார் என்று அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரூ.100 கோடி கேட்டு பொன்சேகா வழக்கு-

பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் சரண குணவர்தனவிடமிருந்து 100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஜனநாயக கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா கஸ்கிசை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். இராணுவ தலைமையகத்தில் வைத்து முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாமீது இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் தனியார் வானொலியொன்றுக்கு பிரதியமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்துள்ளார். பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு பிஸ்கல் ஊடாக நோட்டீஸ் அனுப்புமாறு மாவட்ட நீதவான் நிஹால் சந்திர ரணவக்க பணித்துள்ளார்.

வவுனியாவிலும் இராணுவத்தினரின் துண்டுப்பிரசுரங்கள்-

unnamedவவுனியாவில் இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறன. இது உங்களதும் உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மூன்று தசாப்த மோதல்கள் நிறைவுபெற்று அபிவிருத்திமூலம் நன்மையை அனுபவிக்கின்றனர். கொடிய பயங்கரவாதிகளின் மோதல்களின்மூலம் கோடிக்கணக்கான சொத்திழப்புகள் உயிரிழப்புகள் விதவைத் தன்மை என பல இழப்புகள் ஏற்பட்டன. தற்போதைய சமாதான செயற்பாட்டின் மூலம் புலிப்பயம் நீங்கியுள்ளதோடு புலி ஆதரவு செயற்பாடுகளும் அற்றுப்போயுள்ளன. ஆனால் வெளிநாட்டில் வாழும் புலி ஆதரவாளர்களுக்கு இங்குள்ள மக்களின் புலி மறந்த தன்மை பிடிக்கவில்லை. அவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்து புலி ஆதரவு இணையத்தளங்கள் மூலம் பரப்பி அந்த செயற்பாடுகளுக்கு ஆதரவு தேடுகின்றனர். இங்குள்ள வறிய இளைஞர்களுக்கு அதிகளவு பணம் அனுப்பி அழிவு வேலைகளுக்கு தூண்டி விடுகின்றனர். இந்த சிறிய குழுவின் வேலைகள் பற்றி அறிந்துள்ளோம். அண்மையில் துண்டுப்பிரசுரம் விநியோகித்தவர்கள் பளையில் கைது செய்யப்பட்டனர். பாரிய விலை கொடுத்து பெற்ற சமாதானத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் உங்கள் பிரதேசத்திலும் இருக்கமுடியும். இந்நடவடிக்கைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன. இதற்கு துணைபோகாமல் ஒத்துழைப்பு நல்கவேண்டும்-(பாதுகாப்பு படையினர்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நாவை அல்ல அரசையே மாற்ற வேண்டும்-அத்துரலிய ரத்தன தேரர்-

athuraliyeநல்லிணக்க ஆணைக்குழுவின் காலவரையறைக்கு அடிபணியாமல் உடனடியாக செயற்திறன்மிகு உள்நாட்டு விசாரணையொன்றை நடத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திற்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இதனைக் கூறியுள்ளனர். இங்கு கருத்துக் கூறிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உள்நாட்டு விசாரணையொன்றை விரைவில் நடத்துமாறு நாம் அரசிடம் கோருகின்றோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் காலவரையறைக்கு அடிபணியாமல் அதனை நிறைவேற்ற முடியும். 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி பிரபாகரனுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர். 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி பிரபாகரன் உயிரிழந்தார். இந்த காலத்திற்குள் இடம்பெற்ற விடயங்களை மாத்திரமே தெளிவுபடுத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது. இவை அனைத்தும் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உள்நாட்டு விசாரணை அவசியமாகும் என்றார் அவர், ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கூறுகையில், இலங்கை அரசாங்கம் தவறிழைப்பதாக இருந்தால், அல்லது மனித உரிமைகளை மீறுவதாக இருந்தால், இலங்கையில் மக்களுக்கு வாழ முடியாது என்றால் இம்முறை தேர்தலில் அவர்களுக்கு தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். ஐக்கிய நாடுகளை அல்ல முதலில் இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரமுள்ளது-தமிழக அரசு-

tamilnaduராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமக்குள்ளதாக தமிழக மாநில அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள்மீது முடிவெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதையடுத்து, அவர்களின் தூக்குத் தண்டனை இந்திய உச்ச நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி, ரொபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் முருகன் உட்பட ஏனைய மூன்று குற்றவாளிகளும் 23 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதை கருத்திற்கொண்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனையடுத்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள்மீது மத்திய அரசு சட்டங்களின் கீழ் விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், அவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையென தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகள் ஏழு பேரும் மத்திய அரசின் தடா சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து Read more