வலி. வடக்கு பாதுகாப்பு வேலி படையினரால் அகற்றல்-

IMG_4137வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலய சுற்றுவேலிகளை அகற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கு வயாவிளான், குட்டியபுலம் பகுதியினூடாக செல்லும் உயர் பாதுகாப்புவலய எல்லை வேலியை நேற்றுமாலை அகற்றும் பணியில் படையினர் ஈடுபட்டிருந்தனர். கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் காரணமாக வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை. யுத்தம் முடிவடைந்து 5வருடங்கள் ஆகின்ற நிலையிலும் வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றப்படாமல் அப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பாட்டு பிரதேசத்தை சுற்றி உயரமான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாத பிரதேசமாகக்கப்பட்டிருந்தது. அங்கு தம்மை மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி அப்பிரதேச மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் உயர் பாதுகாப்பு வலய எல்லை கம்பி வேலிகளை அகற்றும்பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குழுவினரின் ஜெனிவா விஜயம்-

imagesCAH8ITDXஇந்த முறை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் பங்குகொள்ளும் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உள்ளிட்ட இலங்கை குழுவினர் நேற்று ஜெனிவா நகரை சென்றடைந்துள்ளனர். இந்த குழுவினார் நாளை ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பங்குகொள்கின்றனர். ஜெனிவா மனித உரிமைகள் மாநாடு ஐ.நா பொதுச் செயலாளர் பான்கி மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன்பிள்ளை ஆகியோர் தலைமையில் நேற்று ஆரம்பமானது. இதனிடையே, ஜீ.எல் பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை நவனீதன்பிள்ளையை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், இலங்கை தொடர்பான நவனீதன்பிள்ளையில் அறிக்கை எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதேவேளை இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய அமைச்சர் ஹ்யூகோ ஸ்வையா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் 25வது மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் சந்திப்பு-

mahinda manmohan meetமியன்மாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நடைபெற்றுவரும் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் (பிம்ஸ்டெக்) அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மியன்மார் சென்றுள்ளார். இதேவேளை இலங்கை தமிழ் மக்களின் புனர்வாழ்வு பணிகளுக்காக தொடர்ந்தும் பொறுப்புடன் செயலாற்றப்படும் என இந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அவசியமாகின்றன. இதன்காரணமாகவே அந்த மக்களுக்கு வீடுகள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் நிர்மாணித்து கொடுக்கப்படுகின்றது. நல்லிணக்கம் மற்றும் 13வது அரசியலமைப்பு தொடர்பிலும் இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து பளைக்கான யாழ்தேவி ரயில் போக்குவரத்து-

yaal deviகிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி ரயில் இன்று நண்பகல் பளை ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. யுத்தத்தின்போது சேதமடைந்த ரயில் பாதை புதிதாக அமைக்கப்பட்டதை குறிக்கும் முகமாக கிளிநொச்சியிலிருந்து பளைவரை ரயில் பயணம் இன்று இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹ ஆகியோர் இந்த புகையிரத சேவை தொடர்பிலான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.