கொலை, ஆட்கடத்தல்களுக்கு எதிராக கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்-

northern_province

unnamed20140318_143510vada maakaana sabai aarpaattam (3)vada maakaana sabai aarpaattam (2)photo

;ஜனநாயகப் படுகொலை, நீதிக்கு புறம்பான சகல ஆட்கடத்தல்கள், கொலை மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பங்கேற்புடன் மாகாணசபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் நடாத்தப்பட்டுள்ளது. வடக்கில் போர்க்காலத்தில் காணாமற்போனவர்களை தேடி அலையும் குடும்பங்களின் போராட்டத்தை முடக்கும் நோக்குடன் அரசாங்கத்தினால் திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டு பூஸா முகாமில் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகளான விபூசிகா அகியோரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், இந்தக் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று யாழ்ப்பாணத்தில்; கண்டனப் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பி;னரும் வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் உட்பட பலரும் பங்கு பற்றியிருந்தனர். இன்று காலை 9 மணியளவில் வடக்கு மாகாணசபையின் 7ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இதனையடுத்து பிற்பகல் 2மணியளவில் மாகாண சபையின் முன்பாக ஏ-9 வீதியில் இந்தக் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதேயான மகள் விபூசிகா ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என பிரதானமாக வலியுறுத்தப்பட்ட அதேவேளை வடக்கில் தொடரும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளை அரசாங்கமும் படைத்தரப்பினரும் நிறுத்த வேண்டுமெனவும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் கூடிய கவனம் செலுத்தி தமிழருக்குகெதிரான அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமெனவும் கோரப்பட்டது. 
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ருந்த சபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கும், நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
 அப்பாவிப் பெண்களைக் கைது செய்வதற்காகப் புனையப்பட்ட காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தின் பாதுகாப்பு இயந்திரம் நாடகமாடியுள்ளது. இதுபற்றிய நிலைமைகளை அறிய முயன்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசு கைது செய்திருக்கின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.’ அடிப்படை மனித உரிமைகளை இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மீறி வருவதை அந்த அரசுக்கும் உலக நாடுகளுக்கும் எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை தாங்கள் நடத்தியதாக கூறினர்.

 ‘சிறைகளிலுள்ள எமது உடன்பிறப்புக்களை விடுதலை செய், காவியுடை கலகக்காரர்களுக்கு காவற்துறை பாதுகாப்பு, மனித உரிமை பாதுகாவலர்க்கு 4 ஆம் மாடியா?’, போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை கையில் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.