தென்னாபிரிக்க அனுசரணையை பெறுவதில் தவறில்லை-அமைச்சர் வாசு-

vaasudevaஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுசரணையை பெறுவதில் எவ்விதமான தவறும் இல்லை. அது வரவேற்புக்குரியதாகும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் பிரச்சினை அல்ல என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஐனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். மேற்குலகம் எமக்கு அதை செய் இதை செய் என்று கட்டளையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை எதிர்க்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்வது நல்ல விடயமாகும். ஏனென்றால் தென்னாபிரிக்காவில் யுத்தத்தின் பின்னர் அவர்கள் எப்படி இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்றும், மீள்கட்டமைப்பினை உருவாக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் கூட்டமைப்பினர் தெரிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசாங்கம் தடை விதித்தவர்களுள் 32 பேர் இந்தியாவில்-

imagesCA47OAWZநாட்டில் மீண்டும் விடுதலை புரட்சிக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில், அரசாங்கம் கடந்தவாரம் புலிகள் இயக்கம் மற்றும் 15 தமிழ் அமைப்புகளுக்கு தடை விதித்திருந்தது. அவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் உள்ள 422 நபர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 32பேர் தற்போது இந்தியாவில் வசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 32 பேர்களில் 6 பேரின் இந்திய முகவரி மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள மற்றையவர்கள் தற்போது அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை கைதுசெய்ய சர்வதேச போலீசாருக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

திருமலையில் மற்றுமொரு கைக்குண்டு மீட்பு-

granadeதிருகோணமலை, திருக்கடலூர் பகுதியில் வீடொன்றின் பின்புறதிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றுமாலை கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை நீதிமன்ற உத்தரவிற்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் திருமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பஹ்ரெய்ன் விஜயம்-

mahintha[1]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பஹ்ரெய்ன் நாட்டுக்குச் செல்லவுள்ளார். இம்மாதம் 28ம் திகதி ஜனாதிபதி பஹ்ரெய்ன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி, பஹ்ரெய்னுடன் உறவை பலப்படுத்தும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பஹ்ரெய்ன் பிரதமர் 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதாரம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

செல்வாக்கு மிக்கவர்களுள் ஜனாதிபதிக்கு 34ஆவது இடம்-

‘எசியன் அவார்ட்ஸ்’ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் செல்வாக்கு மிக்க 100 ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில் 2014ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 34 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும், இரண்டாம் இடத்தை இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நான்காம் இடத்தில இந்திய பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியும் தெரிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் ஷெல் மற்றும் கண்ணிவெடி மீட்பு-

kannivedi kunduயாழ்ப்பாணம் மாவைக்கலட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் இருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஆட்லெறி ஷெல் ஒன்று நேற்றுமாலை மீட்கப்பட்டதாக காங்கேசன்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். மாவைக்கலட்டிப் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தமையினால், மீள்குடியேறும் நோக்குடன் வீட்டு உரிமையாளர் தனது வளவினைத் துப்பரவு செய்யும்போது, நிலத்தில் வெடிக்காத நிலையில் புதையுண்டிருந்த ஷெல் ஒன்றினைக் கண்டுள்ளார். இது தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து இராணுவத்தினருடன் வந்த பொலிஸார் ஷெல்லினை மீட்டுச் சென்றனர். இதேவேளை, அச்சுவேலி இடைக்காடு அக்கரைப் பகுதியிலுள்ள மைதானமொன்றிலிருந்து கண்ணிவெடி ஒன்ற நேற்று (மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பை மாற்றி ஆட்சியிலிருக்க வேண்டிய அவசியமில்லை-சந்திரிகா-

chandrikaநாட்டில் நேர்மையான நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பணத்திற்கு பேராசை பிடித்தவர் நானல்ல. அதனால் தான் ஆட்சியிலிருந்து செல்லும்போது மிகவும் ஏழ்மையாகவே சென்றேன். எனது பெற்றோரிடம் இருந்து கிடைத்த காணிகளை விற்றுத்தான் தற்போது நான் வாழ்க்கையை கொண்டு செல்கிறேன். அரசியல் அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டு 5 அல்லது 6 வருடங்கள் ஆட்சியில் இருக்கவோ அல்லது சாகும்வரை பதவியில் இருக்கவோ வேண்டியதில்லை. நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபோது இருதடவைகளுக்கு மேல் பதவியில் இருக்கப்போவதில்லை என எனது பிள்ளைகளுக்கு உறுதி மொழியளித்தேன். அதற்குபின் நான் வீட்டில் ஓய்வாக இருப்பதாக கூறினேன். ஆனால் தாங்கள் இன்னும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகவில்லை. Read more