Posted by plotenewseditor on 13 April 2014
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 13 April 2014
Posted in செய்திகள்
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமை யாக்கப்படும் – கோத்தபாய
பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாகவும். தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும் எனவும், தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளலளர் கோத்தபாய ராஜபக்ச கடுமையான தொனியில் அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை அடத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் நபர்களின் தராதரத்தைப் பாராது சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
மீண்டும் பபயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு உதவுவோரை கைதுசெய்ய நடவடிக்கை
அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும், மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க உதவிகளை வழங்கியது தொடர்பாகவும். சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும். இதேவேளை விநாயகம் மற்றும் நெடியவன் போன்றோறைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும்
புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.