Header image alt text

ஜெர்மன் வாழ் புலம்பெயர் உறவுகளின் ‘கல்விக்கு கைகொடுப்போம்’ நிகழ்ச்சித் திட்டம்-

arali maththi (12)arali maththi (11)arali maththi (9)arali maththi (8)arali maththi (7)arali maththi (10)arali maththi (2)arali maththi (13)arali maththi (14)arali maththi (5)arali maththi (3)ஜேர்மனி வாழ் தோழர் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் ஜேர்மன் வாழ் புலம்பெயர் உறவுகள் வழங்கும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (26.04.2014) காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியில் காரைநகர் பிரதேசசபை தவிசாளர் திரு ஆனைமுகன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், திருமதி சித்தார்த்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான திரு. க.சபாநாயகம், திரு. ச.சசிதரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.  

இந் நிகழ்வின் தலைவர் ஆனைமுகன் அவர்கள் உரையாற்றும்போது, இன்றைய காலத்தினுடைய தேவையை உணர்ந்து மேற்கௌ;ளப்படும் இவ் உதவி போற்றத்தக்கது. ஜேர்மனியிலிருந்து செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெறும் இச் செயற்பாடு ஏனையவர்களுக்கு ஒர் முன் உதாரணமாக அமைய வேண்டும். இவ் உதவிகளை எமது பிரதேசத்திற்கும் பெற்றுத்தந்த அண்ணண் சித்தார்த்தன் அவர்களுக்கு இந்த இடத்திலே நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என குறிப்பிட்டாh. அத்துடன் எமக்கு இங்கு பாரிய தேவைகள் உள்ளன குறிப்பாக எமது இந்த பிரதேசத்திற்கு முன்பள்ளி மிக அவகியமான ஒன்றாகும் அதனை அமைப்பதற்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் தொடர்ந்து புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும்போது, போருக்கு பிந்திய இன்றைய சூழலில் Read more

ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களுக்கு அஞ்சலி, கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

karainagar (14)karainagar (15)karainagar (1)karainagar (17)karainagar (6)karainagar (16)karainagar (11)karainagar (2)karainagar (5)மறைந்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (25.04.2014) வெள்ளிக்கிழமை பி;ற்பகல் 4.00 மணியளவில் யாழ். அராலி மத்தி ஊரத்தி கிராமத்தில் உள்ள அம்பாள் கடற்தொழிலாளர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. செந்தமிழ் விளையாட்டுக்கழக தலைவர் திரு.நா.ஜெயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ந இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் – சுடரொளி பத்திரிகை நிர்வாக பணிப்பாளருமான ஈ. சரவணபவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்;தார்தன் மற்றும் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் திரு எஸ்.ஜெ.செபரட்ணம் மற்றும் சுரேஸ் கல்விநிலைய இயக்குனர் திரு.எஸ்.சின்னையா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக, மறைந்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபன் அவர்களது Read more

மத விவகார பொலீஸ் பிரிவின் சேவை ஆரம்பம்-

மதப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலீஸ் பிரிவு நாளை முதல் இயங்கவுள்ளது. மதவிவகார அமைச்சின் கீழ் உருவாக்கப்படும் இந்த காவற்துறை பிரிவு, சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் செயற்படும் என்று பொலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இடம்பெறுகின்ற மதங்கள் சார்பான பிரச்சினைகளை இந்த விசேட பொலீஸ் பிரிவினரே விசாரணை செய்யவுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதற்கான யோசனையை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தார்.

வில்பத்தில் குடியேறியோர்க்கு மாற்றுக் காணிகள்-

unnamedyவில்பத்து சரணாலயத்தில் அனுமதி இன்றி குடியேறியுள்ள 73 முஸ்லிம் குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார், மரிச்சிகட்டு பிரதேசத்தில் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கடந்த வாரங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் அவர்கள் தற்போது குடியேறியுள்ள சரணாலய பிரதேசத்திலிருந்து, ஒரு மைல் தொலைவில் காணப்படும் 50 ஏக்கர் காணிப் பரப்பில் குடியேற்றவிருப்பதாக கூறப்படுகிறது. மன்னார் மாவட்ட செயலகம் இதனைத் தீர்மானித்துள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்கும் வகையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது,

ஐ.நா. பிரதிநிதி இலங்கை வருகை-

ஐக்கிய நாடுகள் சபையின் குடிப்பெயர்வு தொடர்பான விசேட பிரதிநிதி பிரான்சுவா க்ரீபே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடகத் தகவல்படி எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி மதல் 26ம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த திகதி குறித்த உறுதியான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அவர் இலங்கையில் குடியேற்றங்கள் மற்றும் இடப்பெயர்வுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

லிபியாவிலிருந்து இலங்கையர்களை மீளழைக்க நடவடிக்கை-

unnamedxலிபியாவில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக அங்கிருக்கும் 14 இலங்கையர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை நாட்டிற்கு மீள வரவழைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார். லிபியாவிலுள்ள இலங்கையர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வராத்திற்குள் அவர்களை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மங்கள ரன்தெனிய மேலும் கூறியுள்ளார்.