சங்கானை வர்த்தக சங்க அனுசரணையுடன் களியாட்ட விழா-

manippay police kaliyaatta nikalvu (1) manippay police kaliyaatta nikalvu (2) manippay police kaliyaatta nikalvu (3) manippay police kaliyaatta nikalvu (4) manippay police kaliyaatta nikalvu (5) manippay police kaliyaatta nikalvu (6) manippay police kaliyaatta nikalvu (7) manippay police kaliyaatta nikalvu (8) manippay police kaliyaatta nikalvu (9)யாழ். சங்கானை வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் மானிப்பாய் பொலிஸ்நிலைய களியாட்டவிழா நேற்று (27.04.2014) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சங்கானை கூடத்து மனோன்மனி அம்பாள் கோவிலுக்கு அருகாமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வின்போது மரதன் ஒட்டப்போட்டி, சைக்கிள் ஓட்டப்போட்டி மற்றும் தேசிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் சிவகுமார், பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், விளையாட்டுப் போட்டியினை பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பஹ்ரெயினுக்கு விஜயம்-

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றுகாலை பஹ்ரெயினுக்கு சென்றுள்ளார். பஹ்ரெயின் மன்னரை சந்தித்து ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறியுள்ளார். இந்த சந்திப்பை அடுத்து இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. ஜனாதிபதிக்கும் பஹ்ரெயின் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. பஹ்ரெயினின் வர்த்தக சமூகம் மற்றும் அந்த நாட்டில் வாழும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வேயில் நெடியவனை தேடும் நடவடிக்கை-

புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் எனக் கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரனை (நெடியவன்) கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்டதை அடுத்து நோர்வேயில் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடங்களிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நெடியவனை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் நோர்வே பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அச்செய்திகள் மேலும் கூறுகின்றன. மேலும் நோர்வேயின் அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் இடங்கள் அனைத்திலும் நெடியவனைத் தேடி பாதுகாப்பு தரப்பினர் வலைவிரித்துள்ளதாக மேற்படி செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத விவகாரங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு வசதி-

மத விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் விசேட பொலிஸ் குழு இன்று தனது பணியினை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி இவ் விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படவுள்ளது. இந்நிலையில் மத விவகாரங்கள் தொடர்பில் 011 2307674, 011 2307694 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 011 2307688 என்ற தொலை நகல் இலக்கம் மூலமாக முறைப்பாடு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபை முன்பாக ஆர்ப்பாட்டம்-

vada makana sabaimun aarpattam (1) vada makana sabaimun aarpattam (2) vada makana sabaimun aarpattam (3) வட மாகாணசபை பேரவை செயலகம் முன்பாக மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை வட மாகாணசபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரி மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் மகஜர் கையளித்தபின் ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

தேர்தல் சட்ட மாற்றம் தொடர்பில் பவ்ரல் அவதானம்-

தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்த பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் நிறைவுபெற்றதை அடுத்து தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்தல் சட்ட மாற்றம் கொண்டு வருவது குறித்து பெப்ரல் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.