Header image alt text

புலிகளுக்கு 5 வருட தடை – இந்தியாவில்.

Indiaதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியிடப்பட்டு வந்தன.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசு புலிகள் இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாக மேமாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகாலமாக இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவும் இல்லை.
ஆனால் இலங்கை அரசு அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்குவதாக கூறி அதன் ஆதரவு அமைப்புகளையும் தடை விதித்தது. இப்படியான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருமா? வராதா என்ற நிலையில் அதுவும் நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஒரேயடியாக எதிர்பாராத விதமாக 5 ஆண்டுகாலத்துக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பிராபாகரனுக்கு அஞ்சலி செலுத்தவேண்டாம் – இந்திய அதிகாரிகள் ஆலோசனை

imagesCA47OAWZதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தமிழ் அகதிகள் வாழ்ந்து வரும் முகாம்களில் இவ்வாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களை சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முயற்சிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விடயங்கள் குறித்து இலங்கை அகதிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் மே 18 முள்ளிவாய்கால் நினைவுதினம் அனுஸடிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

காணாமல்போனோர் பட்டியலிலிருந்து 90 வீதமானோரை நீக்க நடவடிக்கை – ருவன் வணிகசூரிய

ruwan wanigasuriyaஇலங்கையில் காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலிலிருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள், வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளிடத் விபரம் கோரியுள்ளோம். அந்த விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் 90 சதவீதமானவர்களின் பெயர்கள், காணாமற்போனோர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கே.தயாபரராஜா, தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் காணாமற்போனோர்கள், வெளிநாடுகளில் தங்கியிருக்கின்றமை உறுதியாகியுள்ளது. Read more

உலகில் பலகோடி மக்கள் தம் சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கிறார்கள்-

untitledஉலகக நாடுகளில் மொத்தம் மூன்று புள்ளி மூன்று கோடி மக்கள் தம் சொந்த நாட்டிலேயே இடம் பேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், கடந்த வருடத்திலும் பார்க்க இவ் வருடம் தம் சொந்த நாடுகளில் புலம் பேர்ந்து வாழும் மக்களின் தொகை 45 லட்சத்தால் அதிகரித்துள்ளது என்றும்
குறிப்பாக 65 லட்சம் மக்கள் சிரிய நாட்டுக்குள் மட்டும், அங்கு இடம் பெறும் மக்கள் போரால், அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும், 25 லட்சம் மக்கள் பிற நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,  UNHCR தெரிவித்துள்ளது. Read more