Header image alt text

சங்கானை நிச்சாமம் சரஸ்வதி முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா-

Nichchamam saraswathi munpalli (1)Nichchamam saraswathi munpalli (2)Nichchamam saraswathi munpalli (3)யாழ். சங்கானை நிச்சாமம் சரஸ்வதி முன்பள்ளியின் 2014ம் ஆண்டுக்குரிய வருடாந்த விளையாட்டு விழா கடந்த 15.05.2014 அன்று வியாழக்கிழமை முன்பள்ளியின் தலைவர் செல்வன் இ.பிரதீப் தலைமையில் பி.ப 1.30 மணியனவில் ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் Nichchamam saraswathi munpalli (4)Nichchamam saraswathi munpalli (6)அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக சங்கானை கிழக்கு விக்னேஸ்வரா வித்தியாசாலை அதிபர் திரு.பொ.தயானந்தன் அவர்களும் சங்கானை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைவர் திரு.ம.கிருஸ்ணராஜா அவர்களும் வலிமேற்கு முன்பள்ளி இணைப்பாளர் செல்வி ந.நிறஞ்சனா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக முன்னாள் சரஸ்வதி முன்பள்ளி ஆசிரியை திருமதி.தே.தெய்வேந்திரம் அவர்களும் து-179 பிரிவு கிராம சேவகர் திரு.நா.மகிழ்ராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந் நிகழ்வில் கலந்துகொண்டு தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், முன்பள்ளிகள் இன்று எமது சழூதாயத்திலே முக்கிய இடம் வகிக்கின்றது. முன்பள்ளிகளில் வழங்கப்படுகின்ற கல்வி காத்திரமானதாக அமையும்போது மட்டுமே வளமான எதிர்கால சந்ததி உருவாக முடியும். இன்று முன்பள்ளிகள் பல சவால்களுக்கு மத்தியில் இயங்கும் நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக பௌதீக வளப்பற்றாக்குறை மிக முக்கியமான ஒன்றாகும். பல முன்பள்ளிகள் பழைய கட்டிடங்களிலும் மலசலகூட வசதியற்ற நிலையிலும் விளையாட்டு முற்றம் அற்ற நிலையிலும் இயங்குகின்றன. இது மட்டுமல்லாது போதுமான ஆளணி அற்ற நிலைமையும் இங்கு காணப்படுகின்றது. இவ் விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிக முக்கியமான ஓர் விடயம் ஆகும். இவ் விடயங்கள் தொடர்பில் பலமுறை பல இடங்களிலும் குறிப்பிட்டும் கூட இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில இடங்களில் முன்பள்ளிகளுக்கு முற்றுமுழூதாக பொருத்தமற்ற நிலையிலும் பாதுகாப்பற்ற நிலையிலும் முன்பள்ளிகள் காணப்படுவது வேதனைக்குரிய ஒர் விடயம் ஆகும். பொருத்தமான கட்டமைப்பு காணப்படும் சந்தர்ப்பத்தில் கல்விச் செயற்பாடுகளும் பொருத்தமானதாக அமைய வாய்ப்பு காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பம் காணாத பட்சத்தில் இந் நிலைப்பாடு மாணவர்களின் கல்விப்புலத்திலும் தாக்கத்தினை உருவாக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும். மாணவர்கள் உடல் உள ஆரோக்கியம் கொண்டவர்களாக காணப்பட்டபோதும் கல்வி நிலையில் பின் தங்கியவர்களாகவும் திறன் குறைந்தவர்களாகவும் மெல்லக் கற்பவர்களாகவும் காணப்படுவதற்கு இவ்வாறான பொருத்தமற்ற நிலையும் காரணமாக உள்ளமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இவ் விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்வேண்டியது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாகும். இலங்கையின் ஏனைய பகுதிகளில் இவ் முன்பள்ளிகள் உள்ளுராட்சி அமைப்புகளிடம் உள்ள நிலையில் இங்கு மட்டும் இவ் அமைப்பு எம்மிடம் இல்லாத நிலை மிக வேதனைக்குரிய ஒன்றாகும். இவ் விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதும் இன்றைய மிக முக்கியமான ஒன்றாகும். இது மட்டும் அல்லாது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வேதனம் தொடர்பிலும் உரிய நடவடிக்ழககள் மேற்கொள்ளப்படுவதும் மிக முக்கியமான ஒன்றாகும். மிக குறைந்த சம்பளத்தில் அர்ப்பணிப்புடன் அவர்களால் நிறைவேற்றப்படும் இவ் கல்விப்பணி காலத்தினால் போற்றப்படவேண்டிய ஒன்றாகும். இவ் முன்பள்ளியின் தேவைகள் தொடர்பில் இவ் நிர்வாகத்தினர் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இவ் விடயங்கள் தொடர்பில் என்னால் இயன்றவரை நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளேன். எமது பிரதேசத்தில் உள்ள முன்பள்ளிக்ள் தொடர்பில் வெகு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன் என குறிப்பிட்டார்.  

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சர்வதேச புவிதினம்-

puvi1 puvi2 puvi3 puvi4 puvi5 puvi6யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சர்வதேச புவி தினம் கடந்த 16.05.2014 வெள்ளிக்கிழமை அன்று வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது தலைமையில் பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அனர்;த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு. சங்கரப்பிள்ளை ரவீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழவில் கௌரவ விருந்தினராக வலிமேற்கு பிரதேச சுற்றாடல் உத்தியோகஸ்தர் திருமதி திருச்செல்வி சிவானந்தன் அவர்களும் டயானா பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் த.தவராஜா அவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். இந் நிகழ்வில் ஆசியுரையினை வணபிதா செபஸ்டியன் அன்டனி அவர்களும் சபா.வாசுதேவ குருக்கள் அவர்களும் நிகழ்த்தினர். இவ் நிகழ்வில் தலமையுரையில் தவிசாளர் உரையாற்றும்போது, இன்று இவ் புவி தினத்தினை எமது பிரதேசத்திலே நிகழ்த்துவதை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று சுற்றுப்புற சூழல் பல்வேறு தாக்கங்களுக்கும் உட்பட்டிருப்பதனை நாம் உணரக்கூடிய ஒர் நிலை ஏற்பட்டு விட்டது. முன்னர் இவ் விடயங்கள் தொடர்பாக பேசினோம். ஆனால் இன்று அவற்றின் விளைவுகளை அனுபவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விட்டது. இதுவரை எத்தனையோ வகையினதான மாற்றம் ஏற்பட்டு விட்டது. இதன் விளைவுகள் பாரதூரமான தாக்கத்தினை மனித குலத்தின்மீது ஏற்படுத்தும். எம் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் என்ற எதிர்பாhர்ப்பில் பல நடவடிக்ழககளை நாம் மேற்கொள்கின்றோம். இவ் விடயம் தொடர்பிலும் எனது வீடு நான் என்ற வகையில் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றது. நாம் எமது என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் ஏற்படுவதில்லை. வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் நாம் பிரதேசம் தொடர்பில் அதிக கவனம் கொள்ளத்தவறி விடுகின்றோம். இவ் விடயத்தில் நாம் தொடர்ர்ச்சியாக கவனம் கொள்ள தவறும் போது சூழலின் தாக்கத்தினால் சூழல் அகதிகளாக மாறவேண்டிய நிலை வெகு விரைவில் உருவாகி விடும். பசுமை நகரங்கள் என்ற கருப்பொருளில் இவ் ஆண்டு உலகம் முழூவதிலும் இவ் புவி தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இக்கருப் பொருளின் தன்மையை உணர்ந்தவர்களாக நாம் அனைவரும் செயற்படுவது காலத்தின் கட்டாயம் ஆகும். இவ்வாறான விடயம் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படவே இவ்வாறான நிகழ்வுகள் இவ் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறிப்பாக இன்றைய மாணவர்களின் மத்தியில் இவ் விழிப்புணர்வு ஏற்படவே மாணவர்கள் மத்தியில் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டார், இந் நிகழ்வினை ஒட்டி நடாத்தப்பட்ட சித்திரப் போட்டிகள் 7 பிரிவுகளாக நடாத்தப்பட்டது அத்துடன் 7பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இத்துடன் 72 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக – இன்றைய நகராக்க செயல்முறைகள் நகர மீட்சித் திறனை வளர்த்தெடுக்கின்றனவா அல்லது வளர்த்தெடுக்க தவறி விட்டனவா எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக புவியியல் மற்றும் திட்டமிடல் மாணவர்களின் பட்டிமண்டபம் இடம்பெற்றது. இவ் நிகழ்விறிகு புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் நடுவராக கலந்து சிறப்பித்தார். இவ் நிகழ்வில் பிரதேச சபையில் மிக நீண்ட காலம் பனியாற்றி வரும் திரு பாரதி என்பவருக்கும் கௌரவிப்பு நடைபெற்றது  

சுழிபுரம் கள்விளான் சனசமூக நிலையத்தில் சிறுவர்களுக்கான மகிழ்வகம் நிகழ்வு-

kalvilaan siruvar makilvagam (1)kalvilaan siruvar makilvagam (2)யாழ். வலிமேற்கு பிரதேச சபைத்தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கான மகிழ்வகம் நிகழ்வு கடந்த 16.05.2014 வெள்ளிக்கிழமை அன்று மாலை சுழிபுரம் கல்விளான் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான சிறுவர்கள் கலந்து பயன்பெற்றனர். இதேவேளை அன்று மாலை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளரால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 பஜனைப் பாடசாலைத் திட்டம் வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியிலுள்ள பிட்டியம்பதி பத்திரகாளி கோவிலில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இதேவேளை யாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளரால் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகத்தின் இரண்டாவது  நிகழ்வு சங்கரத்தை மாதர்சங்க மண்டபத்தில் தலைவர் திருமதி சந்திரசோதி நேசகுமாரி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டார். இங்கு வளவாளராக கலந்து கொண்ட திரு சிறிகஜன் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி மற்றும் உளவிருத்தி செயன் முறைகள் பற்றிய விளக்கங்களை முழூமையாக பல்லூடக எறிகருவி மூலமும் செயன் முறைகள் மூலமும் வழங்கினார். இந் நிகழ்வில் மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.  

வலிகாமம் மேற்கில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தெளிவுபடுத்தல் நிகழ்வு-

hinduhindu1unnamedhindu2யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் கடந்த 15.05.2014 வியாழக்கிழமை அன்று வலிகாமம் மேற்கு பகுதி பாடசாலைகளில் கா.பொ.த உயர்தரத்தில் அரசியல் விஞ்ஞானத்தினை ஒர் பாடமாக கற்கும் மாணவர்களுக்கு சட்டக்கல்லூரி மற்றும் சட்டத்துறை சார்ந்த விடயங்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு சித்தன்கேணியில் அமைந்துள்ள வட்டு இந்து நவோதய பாடசாலை வள்ளியம்மை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் தலைமை உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு சிவஞானபோதன் தனஞ்சயன் இச் செயற்பாடு இன்றைய காலத்தின் கட்டாய தேவை ஆகும் மாணவர்கள் தமது எதிர்காலத்தினை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு சரியான தெரிவு அவசியமான ஒன்றாகும். சட்டத்துறை சார்ந்து மாணவர்கள் தமது கல்வியை முன்னெடுக்கும் போது உயரிய நிலையினை பெறமுடியும் என குறிப்பிட்டார். இந் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்றைய மாணவர்கள் மிகுந்த சிரத்தையுடன் கல்வியை பயில்கின்றனர் பல்கலைக்கழகமும் செல்கின்றனர் அதன் பின்னர் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் பல இடர்பாடுகளை எதிர்நோக்கு கின்றனர். இந் நிலை அவர்களை விரக்தி நிலைககு இட்டுச் செல்கின்றது. மாணவர்கள் தமது துறைகளை தெரிவு செய்யும் போது தமக்குரிய வாய்ப்புக்களை முதலிலி ஆராய வேண்டும். சட்டத்துறை சார்ந்து இன்று பல தேவைகள் காணப்படுகின்றது. மாணவர்கள் சட்டத்துறையில் ஆர்வமானவாகளாக வரவேண்டும் என்பதற்காகவே இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்தேன். இக் கருத்தரங்கின் வாயிலாக உங்களுக்கான சந்தர்ப்பங்கள் எவை என்பதனை நீங்களே கண்டுகொள்ள முடியும் என குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய வளவாளர் சட்டத்தரனி சுகாஸ் தவிசாளரின் இச் செயல்பாடு நல்லதோர் முன் உதாரணம் ஆகும். அவரது முயற்சி பாராட்டத்தக்கது எமது பிரதேசத்திற்கு ஒர் அரிய சொத்தாகவே தவிசாளர் காணப்படுகின்றார். இவரது இந்த முயற்சி மாணவர்களுக்கு மிகுந்த பயன் வாய்ந்த செயலாகும் என குறிப்பிட்டதோடு தொடர்ந்து கருத்தரங்கினை நடாத்தினர் இக்கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர்  

வடக்கு மார்க்க ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது-

வடக்கு ரயில் மார்க்கத்தில் தடைப்பட்டிருந்த போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக   ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. பொத்துஹரவுக்கும் பொல்கஹவெலவுக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயிலொன்றில் இன்றுகாலை இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் வடக்கு ரயில் மார்க்கத்தின் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. பொத்துஹரவில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ரயிலின் பாகங்களை, அனர்த்த நிவாரண ரயிலில் கொண்டு வந்த வேளையில் குறித்த ரயிலில் இன்றுகாலை இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டது. இதனால் கொழும்பிலிருந்து பளை மற்றும் மட்டக்களப்பு வரையான ரயில் சேவைகள் தடைப்பட்டதுடன் வடக்கு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து  கொழும்பிலிருந்து பொல்கஹவல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயனாளிகள்; தெரிவு-

இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தியன் வீட்டுத்திட்டத்திற்கு இதுவரை வடக்கு மாகாணத்தில் 26931 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதரக தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்துள்ளார். மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய வீட்டுத்திட்டத்தில் முதல் 1000 வீடுகள் 5 மாவட்டங்களிலும் உள்ள 25 இடங்களில் கட்டப்பட்டன. அதனையடுத்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் 43 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து கைச்சாத்திடப்பட்டது. அதன்படி கடந்த முதலாம் திகதி வரைக்கும் 26931 பயனாளிகள் வடக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 11227 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 16654 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. எனினும் மிகவிரைவில் பூர்த்தியாக்கப்படும் என்றும் மகாலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமலை வைத்தியசாலையின் வைத்திய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை-

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு புதிதாக 8வைத்தியர்களும், 7தாதியர்களும் இன்றுமுதல் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், திருகோணமலை வைத்தியசாலையில் சுமார் 100 தாதியர்களுக்கும், 30 – 40 வரையிலான வைத்தியர்களுக்கும்  பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக வெளிநோயாளர் பிரிவுக்கு போதுமானளவு வைத்தியர்கள் இல்லை எனவும் திகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.    ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பில் விசாரணை- காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, மட்டக்களப்பு பகுதிக்கான தமது விசாரணைகளை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியு. குணதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, மண்முனை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, 3 மாவட்டங்களில் அடிப்படை விசாரணைப் பணிகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மட்டக்களப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய அரசாங்க அதிபரினதும், அதிகாரிகளினதும் பங்களிப்புடன் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியு. குணதாச மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த காலத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை விசாரணை நடவடிக்கைகள் வரையறுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளன.   இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் இராஜதந்திர பேச்சு- இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு இராஜதந்திர முறையில் தீர்வுக்காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்புகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை இந்திய மீனவர் சங்க அமைப்பின் தமிழக தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நரேந்திரமோடி தலைமையிலான இந்திய புதிய அரசாங்கத்தின் ஊடாக இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான அடுத்தகட்ட பேச்சு வார்த்தை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.               

யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு-

இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேர்முகத் தேர்வு யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இன்றுகாலை இடம்பெற்றது. இந்த நேர்முகத் தேர்விற்கு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த  32 பேர் அழைக்கப்பட்டு அவர்கள் 32பேரும் இன்றுமுதல் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கான பயிற்சிகள் காங்கேசன்துறையில் அமைந்துள்ள பெண்கள் பயிற்சிக் கல்லூரியில் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும்  யாழ். மாவட்ட இராணுவ ஊடகப்போச்சாளர் ரஞ்சித் மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.  

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை-

பாதுகாப்புச் செயலர்- சர்வதேச அழுத்தங்களுக்கு எந்த வகையிலும் அடிபணியப் போவதில்லை என்றும், பயங்கரவாதத்தை இல்லாதொழித்தமை குறித்த கொண்டாட்டங்களில் ஈடுபட இலங்கைக்கு எல்லா வகையிலான உரிமைகளும் காணப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை கைவிட முடியாது எனவும் தொடர்ச்சியாக கொண்டாட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாத்தறையில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளின் பின்னர் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், புலிகளினால் ஏற்பட்ட பாதிப்புக்களை கனடா விளங்கிக்கொள்ள முடியும். புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக சொற்பளவிலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களே நாட்டுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இராணுவத்தின் அளவு படையினர் நிலைநிறுத்தம் தொடர்பில் உலக நாடுகள் தீர்மானம் எடுக்க முடியாது. அதனை தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

கைத் தொலைபேசியில் புலிகளின் பாட்டு வைத்திருந்தவர் கைது-

புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் பதிவேற்றம் செய்து வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

உலக சுகாதார அமைய உப தலைவராக மைத்திரிபால நியமனம்-

உலக சுகாதார அமையத்தின் உப தலைவராக இலங்கை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உலக சுகாதார அமையத்தின் 67வது மாநாட்டில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 பார்வையற்றவர்களுக்கான கையடக்கத் தொலைபேசி அறிமுகம்-

பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறையிலான கையடக்க தொலைபேசிகளை பிரிட்டன் நிறுவனமான ஓன்போன் தயாரித்துள்ளது. இதன் விலை 5900 இந்திய ரூபாய்களாகும் பார்வையற்றவர்கள் எளிதில் மற்றவர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளனர். தற்போது பிரிட்டனில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இந்த போனின் முன், பின் பக்கங்களில் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் அவற்றை விருப்பப்படி மாற்றியமைத்துக் கொள்ள முடியும். பிரெய்லி முறை தெரியாதவர்களும் இந்த போனில் வழக்கமான முறையில் தகவல்களைப் படிக்க முடியும்.’முப்பரிமாணத் தொழில் நுட்பத்துடன் அச்சடிக்கப்பட்ட கீ போடுகளைக் கொண்ட முதல் பிரெய்லி போன் இதுவென கூறப்படுகிறது. இந்தப் போனில் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டிருக்கும் பிரெய்லி எழுத்துகளை நாம் தேவைப்பட்டால் அதிகரித்துக் கொள்ள முடியும் இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என இந்த மொபைல் போனைக் வடிவமைத்த டாம் சுந்தர்லேண்ட் தெரிவித்துள்ளார். சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள முதல் பிரெய்லி போன் இதுவெனக் கூறப்பட்ட போதிலும் ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் கிரியேட் நிறுவனம் பிரெய்லி வசதி கொண்ட ஸ்மார்ட்போனை தயாரித்தது பிரெய்லி எழுத்துகளைத் திரையில் காட்டும் வசதியும் அந்த போனில் இணைக்கப்பட்டிருந்தது.  

இந்திய புலனாய்வு முகவர் என சந்தேகிக்கப்படுபவர் கைது-

இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவெள பகுதியிலுள்ள பரசங்கஸ்வெள எனுமிடத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து பல்வேறுப்பட்ட ஆவணங்கள், படங்கள் மற்றும் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர், விசேட துப்பறியும் பிரிவினரினாலேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 44வயதான சந்தேகநபர் இலங்கையில், ஹமாஸ் ஜமால்டீன் என்ற பெயரிலேயே இருந்துள்ளார். அவர் வடக்குக்கு அடிக்கொரு தடவை பயணித்துள்ளதாகவும் அவர் இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் புலனாய்வு அதிகாரியாக கடமையாற்றியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், போலி கடவுச்சீட்டுடன் வெளிநாடுகளுக்கும் பல தடவைகள் சென்றுள்ளார். தனது முன்னைய கடவுச்சீட்டு தொலைந்து போனதாகக் கூறி இலங்கையில் இவர் கடவுச் சீட்டைபெற்றுள்ளார். இந்தியாவில், கேரள மாநிலத்திலிருந்து 1995ஆம் ஆண்டு இவர் இலங்கை வந்தததாகவும் கொழும்பு டெக்னிக்கல் சந்தி, வவுனியா, அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் பரஸன்கஸ்வெள ஆகிய இடங்களில் ஹோட்டல்களில் வேலைசெய்ததாகவும் விசாரணைகளின் போது தெரிவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

சர்வதேச விசாரணையை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்-ராஜித-

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக  நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு  கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போரை வெற்றி கொள்வதற்கு பலமும் புத்திசாலித்தனமும் தேவைப்பட்டது. ஆனால் தற்போது எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களையும் சவால்களையும் வெற்றிகொள்ள புத்திசாலித்தனமே தேவை. சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோரி வந்த தமிழ் தரப்பினர் போர் முடிவடைந்ததும் முதல் தடவையாக ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்துக்கு இணங்கினார்கள். ஆனால் அரசு அதனைக் கருத்தில் கொள்ளாமல் காலதாமதமாகியதால் அவர்கள் மீண்டும் தமது பயணத்தை மாற்றியுள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எமது அரசியல் தலைவர்கள் கைநழுவ விட்டனர். சிலர் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போர் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் உரிய முறையில் பேச்சுக்களை நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைத்திருக்கலாம்.  அவ்வாறு செய்திருந்தால் இன்று இவ்வாறான சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இன்று சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இலங்கைக்குள் எந்தவொரு விசாரணைக் குழுவையும் அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது மிகவும் முட்டாள் தனமான வாதமாகும். இந்த விசாரணையில் பிரதிவாதிகளே நாம் தான். எனவே நாம் இந்த விசாரணையில் கலந்து கொள்ளாமல் விசாரணைகள் நடக்குமானால் முடிவு பயங்கரமானதும் பாரதூரமானதுமாக இருக்கும். எனவே இந்த விடயம் தொடர்பில் நன்றாகச் சிந்தித்து இராஜதந்திர ரீதியில் தான் அணுக வேண்டும். எமது நாட்டுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படுமானால் பொருளாதாரம் பாதிப்படையும்.  லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்க வேண்டிவரும். இவ்வாறான சவால்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் போது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அப்பொழுது சர்வதேசம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மே 18 முள்ளிவாய்கால் தமிழர் நினைவுகளும் – அரச கொண்டாட்டங்களும்

_nocredit (1)Banner1_CIஇலங்கையின் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களை நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஆனாலும், பலத்த இராணுவ பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பதட்டமான சூழலிலும் இறுதி யத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. Read more