இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு-

Tamil_Daily_News_83483523131modi_0இந்தியாவின் 15 ஆவது பிரதமராக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். புதுடில்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நரேந்திர மோடி இன்றுமாலை சத்தியப் பிரமாணஞ் செய்து கொண்டுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு சுமார் 3,000 பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நரேந்திர மோடியுடன் புதிய மந்திரிகளும் பொறுப்பேற்றனர். கேபினட் மந்திரிகளாக ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, சதானந்த கவுடா, உமாபாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம் விலாஸ் பஸ்வான், கல்ராஜ் மிஸ்ரா, மேனகா காந்தி, ஆனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், அசோக் கஜபதி ராஜு, ஆனந்த் கீதே, ஹர்சிம்ரத் கவுர், நரேந்தர் சிங் தோமர், ஜூவல் ஓரம், ராதா மோகன் சிங், தவார் சந்த் கெலாட், ஸ்மிருதி இரானி, டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் பதவியேற்றனர். தவிர தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக வி.கே.சிங், ரவோ இந்தர்ஜித் சிங், ஸ்ரீமத் நாயக், சந்தோஷ் கங்வார், தர்மேந்திர பிரதான், சர்பானந்த சோனாவல், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், ஜிதேந்திர சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பொறுப்பேற்றனர். இவர்கள் தவிர இணை மந்திரிகளாக ஜி.எம்.சித்தேஸ்வரா, மனோஜ் சின்கா, நிகல் சந்த், உபேந்திரா குஷ்வாஹ், பொன் ராதாகிருஷ்ணன், கிரண் ரிஜிஜு, கிரிஷன் பால் குஜ்ஜார், சஞ்சீவ் குமார் பாலியான், மன்சுக்பாய் வாசவா, ராவ்சாகிப் தன்வீ, விஷ்ணுதேவ் சாய், சுதர்சன் பகத் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.