Header image alt text

வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாளரால் பஜனைப்பாடசாலைத்திட்டம்

untitled3untitledவலிமேற்கு பிரதேச சபைத்தவிசாளரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 பஜனைப்பாடசாலைத்திட்டம் நேற்றய தினம்  30.05.2014 அன்று பொன்னகலை பிள்ளையார் கோவில் மற்றும் சுழிபுரம் குடாக்கனை பேச்சியம்மன் கோவில் ஆகிய வற்றில் வலிமேற்கு பிரதேச சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பஜனைப்பாடசலை நிகழ்வினை சிறப்பித்தனர்

வலிமேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நெல்சிப் மதிப்பீட்டுக் குழு

untitled130.05.2014 அன்று வலிமேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நெல்சிப் மதிப்பீட்டுக் குழு ஏற்கனவே நiபெற்ற  வேலைத்திட்ங்கள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டது. இதன் போது ஒவ்வோர் வேலைத்திட்டத்திலும் பங்கேற்றுக் கொண்ட சமூக கண்காணிப்பு குழு உறுப்பினர்களும் பங்கேற்று தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் பேசும் போது மாவை மயங்கிவிட்டார்.

mavai_mp_002ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுத்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் ஐ நா வின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் படி விசாரணைகள் தொடங்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அது குறித்து மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தவும், அவரகள் சாட்சியங்கள் அளிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகளை எடுத்துக் கூறுவதும் இதன் நோக்கம்- ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களாகின்ற நிலையில் இந்தத் தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களையும் சிலரால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களையும் நீக்குவதே தமது நோக்கம் எனவும்,  விசாரணை தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கை வர வேண்டும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும் அப்படி நம்பிக்கை வந்தால் தான் அவர்களும் அதில் பங்கு பற்ற முன் வருவார்கள், இல்லையேல் அது அர்த்தமற்றது என ஓதுங்கி கொள்வார்கள் என்று த.தே.கூ பா.உ சுமந்திரன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

nocreditmavai_mp_004இன்று மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ‘அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் – ஒரு சமகால பார்வை’ எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது மயங்கி விட்டார். மாவை சேனாதிராஜா மயங்கி வீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிது நேரத்தின் பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பிய பின்னார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா , பா. அரியநேத்திரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டானர்.

இலங்கையில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வீழ்ச்சிகண்டுள்ளது வட-கிழக்கில் அதிகரித்துள்ளது.

_smokingஇலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது. ஆனால், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னைய காலங்களைவிட புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ஆய்வை நடத்திய அடிக் என்ற மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தொண்டுநிறுவனம் கூறுகின்றது.

நாடளாவிய ரீதியில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 2003 முதல் 2013-ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்.  இதேவேளை, தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த 10 ஆண்டு காலத்தில் சிகெரட் விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளதையும்  வடகிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் சிகரெட் பாவனை வீழ்ச்சியடைவதற்கு சிகரெட் கம்பனிகளின் உத்திகள் பற்றியும் சிகரெட் பாவனையினால் ஏற்படுகின்ற சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியே காரணம் என்றும்.

பொதுவாக இலங்கையில் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஒரு புது சந்தை உருவாகியிருப்பதனால் அவர்கள் வடக்கு கிழக்கை பிரதான இலக்காகக் கொள்கிறார்கள், சிகரெட் கம்பனிகளின் வியாபார உத்திகள் காரணமாக சிகரெட் பாவனை வீதம் அங்கே அதிகரித்துள்ளதாகவும். புதிய தகவல்களின்படி, இலங்கையில் புகைத்தல் காரணமாக சராசரியாக ஒரு நாளைக்கு 72 பேர் உயிரிழப்பதாகவும்;, நாள் ஒன்றுக்கு சுமார் 24 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக மக்கள் செலவிடுவதாகவும் ஏ.சி. ரஹீம் சுட்டிக்காட்டினார். இதே நேரம் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கைப் படங்களை கட்டாயப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக சிகரெட் கம்பனி வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அதிகரிக்கும் பொருள்விலைகளுக்கு ஏற்ப சிகரெட்டுக்களின் விலைகள் அதிகரிப்பதில்லை என்றும் இதனால் அரசாங்கத்திற்கு பெருமளவு வரிவருமானம் இழக்கப்படுவதாகவும் அந் நிறுவனம் மேலும் கூறியுள்ளது. உலகில் புகைத்தல் காரணமாக ஒவ்வொரு 6 செக்கென்டுகளுக்கும் ஒருவர் உயிரிழப்பதாகக் கூறியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் புகைபொருட்கள் மீதான வரியை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என்று நாடுகளைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

kili_meet_008KilinochchiWatertank_CIகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் இரண்டாம் நாள் இன்று இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தலைமையில் காலை 9மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது நேற்று நடந்த இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை கற்றல் செயற்பாடுகள் செயற்பாடுகளுக்கு இடையூறாக இராணுவம் மற்றும் வெளியார் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை விடுத்த வேண்டுகோளை அடுத்து. கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்த, இனிமேல் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி கோரப்பட்டால் ‘எனது கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.’ – எனவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு பிறப்பித்து உள்ளார். நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை ஒரு நல்ல காரியம் நடக்க ஒத்துழைக்க வேணடும்’ டக்ளஸ்:- கிளிநொச்சியில் காக்கா கடைச்சந்திக்கு அண்மையாக ஏ-9 வீதியோரம் இருந்த பெரிய நீர்தாங்கி 2009 போரின் போது குண்டுவவைத்து தகர்க்கப்பட்டது. வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியை சுற்றி மதில் கட்டிய இலங்கை இராணுவம் அந்த நீர்தாங்கியை தென்னிலங்கையில் இருந்துவரும் மக்களை ஏமாற்றுவதற்கும் தமது வீரப்பிரதாபங்களை சொல்லவும் இந்த உடைந்து வீழ்ந்த நீர்த்தாங்கியை காட்சிப் பொருளாக்கியுள்ளனர். கிளிநொச்சியில் வடுவாக இருக்கும் அந்த நீர்த்தாங்கியை அகற்றுமாறு வடமாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கோரியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த நீர்த்தாங்கிக்காணி நீர்ப்பாசன திணைக்களத்துக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இதன் காரணமாக அங்கு அமைக்கப்படவேண்டிய புதிய கிளிநொச்சிக்கான புதிய நீர்தாங்கியை இரத்தினபுரம் வீதியில் ஒரு பள்ளக்காணியில் பாடசாலைக்கு சொந்தான நிலத்தில் அமைக்கப்படுகின்றது. அக்காணியில் ஒரு மாவட்ட நூலகம் அமைப்பதற்கான ஆலோசனை முதலில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படியான கூட்டங்களில் எடுப்பட்ட முடிவுகள் பல நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக இராணுவத்தோடு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி நகரின் மத்தியில் உடைந்து கிடக்கும் நீர்த்தாங்கியை போர்ச்சின்னமாக காட்சிப்பொருளாக மாற்றி இருக்கும் நிலையை தவிர்த்து அதை வேற அபிவிருத்தி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமென ஈ.பி.டி.பி பா.உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா ஆகியோரும் வலியுறுத்தியதையும் அவரும் சுட்டிக்காட்டியுள்ளார்.