Header image alt text

ஐ.நா. குழு அனுமதி கோரவில்லை-இலங்கை-

இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு வருவதற்கான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இருந்தபோதும், இந்த விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை எனவும், அதன் காரணமாக விசாரணைக்குழு இலங்கை வருவதற்காக நுழைவிசைவு கோரினால் அது நிராகரிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவென மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் 12பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அடுத்தமாத நடுப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்து செப்டம்பரில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களது படகில் 30 சடலங்கள் மீட்பு-

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்றில் பயணித்த  பயணிகளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிசிலி மற்றும் வட ஆபிரிக்க கடற்பரப்பிற்கு இடையே பயணத்தை மேற்கொண்ட குறித்த படகில் இருந்து 600 புகலிடக் கோரிக்கையாளர்களை இத்தாலியக் கடற்படையினர் மீட்கப்பட்டுள்ளதுடன் இதில் இருவர் கர்ப்பிணிப் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப் பகுதியில் இத்தாலியின் தென்பிராந்தியத்தை 60 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர் சென்றடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

மேலும் செய்திகளை வாசிக்க——-

Read more

கூழாங்குளம் இந்து மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய அனுமதி மறுப்பு-

koolankulam (2)koolankulamவவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் இன்றுகாலை சடலம் ஒன்றினை தகனம் செய்ய சென்றபோது இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இராணுவத்தினருடன் கலந்துரையாடியதை அடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பேயாடி கூழாங்குளம், கொக்குவெளி, பூனாமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்களின் பாராம்பரியமான இந்து மயானமே பேயாடிகூழாங்குளம் இந்து மயானம். யுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்று வேறுவேறு பகுதிகளில் வசித்துவரும் நிலையில் அப் பகுதிக்கு அண்மித்ததாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேயாடி கூழாங்குளத்தைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்தமையால் தமது பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி அப்பகுதி இந்து மயானத்தில் உடலை தகனம் செய்யவதற்கான ஆயத்த வேலைகளைச் செய்வதற்கு மரணமடைந்தவர்களின் உறவினர்கள் சென்றபோது பெரும்பான்மை இன மதகுரு ஒருவரும் அப்பகுதி இராணுவத்தினரும் இணைந்து இது பௌத்த மக்களின் பிரதேசம். இங்கு பௌத்த அடையாளங்கள் இருக்கின்றன என இராணுவ முகாம் இருந்த பகுதியில் உள்ள அடையாளங்களைக் காட்டி அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து அங்கு திரண்ட இளைஞர்களும் மக்களும் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வருகை தந்த வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், இது எனது பிரதேசம். இங்கு எனது உறவினர்களுக்கும் காணிகள் உண்டு. நாம் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வந்த நிலம். இங்கு தான் எமது மக்களின் தகனக் கிரியைகள் நடைபெற்று வந்தன. இதனை எப்படி தடுக்க முடியும் எனக் கூறி இராணுவத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்பின் இராணுவத்தினர் தகனக் கிரியை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இலங்கையிலிருந்து ஊடுருவல், கடலோர பாதுகாப்பை இந்தியா பலப்படுத்துகிறது-

imagesஇலங்கை ஊடாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக தொடர்ந்தும் கரையோர பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் கரையோர பாதுகாப்பு பிரிவினர், கியூ பிரிவினர், புலனாய்வுப் பிரிவினர், கரையோர காவல்துறையினர், வனத்துறையினர் உட்பட்ட பல அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர். இதன்போது இலங்கைக்கு ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்களை தடுப்பதற்காக தீவிரமான கண்காணிப்புகளை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் சகல பாதுகாப்பு பிரிவுகள் மத்தியிலும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனுஸ்கோடியில் உள்ள பாலம் என்ற இடத்தில் நான்கு பொலிஸ் அரண்களை அமைப்பதற்கு தீhமானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க——- Read more

18வது அரசியல் திருத்தத்தால் நீதித்துறைக்கு பங்கம்-வடக்கு முதல்வர்-

அரசுக்கு சார்பான வகையில் வழக்குகளில் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதனாலும் வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதனாலும் மக்களுக்கு நாட்டின் நீதித்துறைமீது சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தமது காணிகளைத் திருப்பித்தருமாறு கோரி வலி வடக்கைச் சேர்ந்த 2000 பேர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இருந்தும் அந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படாத காரணத்தினால் அவர்கள் நீதிமன்றம்மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் வடக்கு முதலமைச்சர் பிபிசியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றங்களையோ நீதிபதிகளையோ விமர்சனம் செய்ய முடியாது. அவர்களைக் குறைகூறுவதும் எமது நோக்கமல்ல என தெளிவுபடுத்திய அவர், 18வது திருத்தச் சட்டம் வந்ததன் பின்னர் பல வழிகளிலும் நீதித்துறைக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார். இந்தத் திருத்தச் சட்டத்தின் மூலம் நீதிபதிகளை நியமனம் செய்யும் அதிகாரம் அரசியல்வாதியாகிய ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அரசியல் காரணங்களுக்காக தனது அரசியல் செல்வாக்கை மேம்படுத்துவதற்காக அதற்கேற்ற வகையில் நீதிபதிகளை நியமிக்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருப்பதனால் நீதித்துறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் வடக்கு முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளங்கள் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம்-

இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களில் இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அரச உத்தியோகத்தர்களும் சில நிபுணர்களும் உள்ளடங்கவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அநோமா திஸாநாயக்க தலைமையின்கீழ் இயங்கும் மேற்படி அமைப்பின் புலனாய்வு பிரிவினரே இவ்வாறு 6 பேரை கைதுசெய்துள்ளனர். இது தொடர்பில் அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, இதுவரை 2000 பேர், இணையத்தளங்களின் மூலமாக சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர். இணையத்தளங்களுக்கூடாக  இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தள புலானாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறியவரும்போது 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் இவ்வமைப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்க முடியும். இச்சம்பவங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேணடும். இணையத்தளங்களின் வாயிலாக சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் தந்திரமிக்கவர்களாக காணப்படுவதால் சிறுவர்களும் இதுகுறித்து நிதானத்துடன் செயற்பட வேண்டும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் சிக்கிய 152 இலங்கை அகதிகள்-

153 இலங்கை அகதிகளுடன் சென்ற படகு கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 250 கிலோமீற்றர்  தொலைவில் நடுக்கடலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து படகில் சென்ற அகதிகளே நடுக்கடலில் சிக்கியுள்ளதாகவும், இவர்களில் 32 பெண்கள் மற்றும் 37 குழந்தைகள் உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் என கூறப்படுகிறது. படகில் வந்தவர்களுடன் பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டபோது அவர்கள் அகதிகள் என தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். அது தொடர்பில் ஒருவர் பத்திரிகையாளருக்கு விளக்கமளிக்கையில், தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவிலிருந்து புறப்பட்டதாகவும், படகில் சேதமேற்பட்டு, நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால் அபாயநிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தமக்கு உதவுமாறு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸி அரசிடம் கோரியுள்ளனர்.

 

யாழ் சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

DSCF1396யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் , நிறுவுநர் நினைவு நாளும் இன்று மதியம் 1 மணியளவில்  விவேகானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் றிசா தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும், ஏசியன் ரிபியுன்  இணையத்தின் பிரதம ஆசிரியர் க.த.இராஜசிங்கம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இதன் போது இப்பாடசாலையில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

DSCF1400DSCF1402DSCF1416DSCF1419DSCF1425DSCF1431DSCF1436DSCF1439DSCF1442DSCF1447DSCF1449DSCF1450DSCF1453DSCF1455DSCF1455DSCF1457DSCF1460

வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸாரால் கைது-

vaddarakka_thero_polic_001பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அண்மையில் தெரிவித்திருந்தார். மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நிறைவடைந்து வெளியேறிய நிலையில், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக  பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முஸ்லிம்கள்  மீதான தாக்குதலுக்கு துருக்கி கண்டனம்-

singala_ravaya_5முஸ்லிம்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு துருக்கி கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கை வாழ் அனைத்து இன சமூகங்களும் சமாதான சூழ்நிலையில் வாழ்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை வாழ் மக்களின் சமாதானத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. சிறுபான்மை இன மற்றும் மத சமூகங்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக துருக்கிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூர்வர் நியமனம்

2(3178)ஏற்கனவே இந்தப் பதவியை வகித்த பிரசாத் கரியவாசம், அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சுதர்சன் செனவிரத்னவுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரதேனியா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவராக பதவி வகித்து வந்த செனவிரத்ன, இலங்கையின் பாரம்பரியச் சின்னங்களைக் காக்கும் பணியை செய்து வந்தார். அத்துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, அமெரிக்க தொல்லியல் கழகத்தின் 2013ம் ஆண்டுக்கான ‘பாரம்பரிய மேலாண்மை” விருதைப் பெற்றுள்ளார்.

இந்திய மீனவர் 46பேர் விடுதலை

ilankai india meenavar pechchuஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 46 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட 24 மீனவர்கள், அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 22 மீனவர்கள் என 46 பேரையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மீனவர்களும், அவர்களுடைய 11 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டன. அவர்களை விடுதலை செய்யும்படி அதிபர் ராஜபக்சே உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஊர்க்காவல் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டன. 46 மீனவர்களைத் தவிர்த்து, மேலும் 18 மீனவர்கள் இலங்கை சிறையிலுள்ளனர். 36 விசைப்படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளது. இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறியதாக எழுந்த புகாரை இலங்கை கடற்படை மறுத்திருக்கிறது. சர்வதேச விதிகளின்படியே, தமிழக மீனவர்களைக் கைது செய்து, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக, கடற்படை செய்தித்தொடர்பாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

தீவிரவாதிகளை ஒடுக்கஅமெரிக்காவிடம் உதவிகோரல் – ஈராக் அரசு

US-Assessmentஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கிளர்ச்சி வலுத்து வருகிறது. தீவிரவாதிகளை கண்டு அரசு படை வீரர்கள் ஓட்டம் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் தீவிரவாதிகள் வசம் வந்து விட்டன. 3 வாரங்களாக அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வருகிற சண்டையில் குறைந்தது ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் படுகாயம் அடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். உள்நாட்டுப்போரில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு Read more

வவுனியா பரமேஸ்வரா வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை திறந்துவைப்பு-

SAM_1283வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு சிலை அமைக்கப்பட்டு நேற்று 23.06.2014 திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வவுனியா தெற்கு வலயத்தில் உள்ள அண்ணாநகர் பரமேஸ்வரா விதிதியாலயம் சிறப்பாக வளர்ந்து வரும் பாடசாலைகளில் ஒன்று. இப் பாடசாலையின் SAM_1288வளாகத்தில் இந்து சமய மாணவர்களினது வழிபாட்டுக்காகவும் தமிழ் பராம்பரிய கலாசாரத்தை பேணும் நோக்குடனும் சரஸ்வதி சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசிப்பவருமான புளொட் அமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட இச் சிலையினை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் SAM_1289தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். இதன்போது கடந்த வருடம் இப் பாடசாலையில் கல்விபயின்று நூறுவீத சித்திபெற்று உயர்தரத்திற்கு தகுதியாகி பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த எட்டு மாணவர்களுக்கும் SAM_1296SAM_1301SAM_1311SAM_1312SAM_1313SAM_1314SAM_1315 - CopySAM_1318SAM_1322SAM_1323SAM_1326பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. வறுமைக் கோட்டின்கீழ் இருந்த மாணவன் ஒருவருக்கான கல்விச் செலவும் தொடர்ச்சியாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு அதற்கான வங்கிக் கணக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவற்றுக்கான நிதிகள் யாவும் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்டது. இது தவிர, வறுமைக் கோட்டின்கீழ் தமது கல்வியைத் தொடரும் இம் மாணவர்களுக்கு பாதணிகளும் புளொட் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், வன்னிப் பிராந்திய அமைப்பாளருமான சிவநேசன் (பவன்), வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவும் புளொட் முக்கியஸ்தருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), அன்பர் தர்மலிங்கம் நாகராஜா, பாடசாலையின் முன்னாள் அதிபர் பூலோகசிங்கம், வலயக் கல்விப் பணிமனையின் செயற்திட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். 

நாட்டில் மீண்டுமொரு சிவில் யுத்தத்திற்கு இடமளிக்ககக் கூடாது- முன்னாள் ஜனாதிபதி

chandrikaகடந்த சில தினங்களாக நாட்டில் காணப்பட்ட நிலைமைகள் தொடர்பில் கவலையடைவதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். உயிர்ச்சேதங்கள், மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகள் தமக்கு கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 18 மாதங்களில் சட்ட அமுலாக்கம் வீழ்ச்சியடைந்தமை, குரோதங்கள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் சட்டங்கள் மீறப்பட்டமை தமது வருத்தத்திற்கான காரணமெனவும் முன்னாள் ஜனாதிபதி தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இன வன்செயலுடன் அப்போதைய அரசாங்கம் கையாண்ட செயற்பாடுகள் காரணமாக நாடு 25 ஆண்டுகால கொடூர யுத்தத்தை எதிர்கொண்டது. அந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கை முன்னெடுத்தது.  இந்நிலையில் அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மன்னிப்பின்றி சட்டத்தை செயற்படுத்துவதன் தேவையை, அரசுகு சுட்டிக்காட்டுமாறு, நாட்டின் தலைவர்களிடமும், பொதுமக்களிடமும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுள்ளார். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கையை மீண்டும் சிவில் யுத்தம் ஒன்றுக்குள் தள்ளிவிட, அடிப்படைவாத சிறு குழுக்களுக்கு இடமளிக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருக்கள்மட மனித புதைகுழியை அகழ்வதற்கு அனுமதி-

mannar puthaikuli (1)மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் உள்ளதாக கூறப்படும் மனித புதைகுழியை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ஆடி மாதம் 01ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடி பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தி செல்லப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் கடற்கரை ஓரமாக புதைக்கப்பட்டிருப்பதாக ஒருவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியதை அடுத்து குறித்த இடத்தை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கமைய 2014 ஆடி மாதம் முதலாம் திகதி குருக்கள்மடம் பகுதியிலுள்ள குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் இவ்விடயம் தொடர்பில் இப்பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவில் விசாரணைகளை நடத்த ஏற்பாடு-

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அடுத்த மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது. இதன்படி அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பான பொதுமக்கள் யோசனை

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பொதுமக்களின் யோசனைகள் கிடைத்த வண்ணமுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரையில் சுமார் 200 மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் புலம்பெயர்ந்தவர்களிடம் இருந்தும் யோசனைகள் வந்திருப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உருப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிள்ளமை இங்கு குறி;ப்பிடத்தக்கது.

ஜம் இய்யத்துல் உலமா, பாதுகாப்பு செயலர் சந்திப்பு-

ஜம் இய்யத்துல் உலமா அமைப்பு உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராணுவு ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

யாழில் இளைஞனின் சடலம் மீட்பு-

யாழ். பருத்தித்துறை தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் தும்பளையைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதிகாலை மீன்பிடிக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதை அவதானித்தவுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போலி கடவுச் சீட்டுடன் ஆறு இலங்கையர்கள் கைது-

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 06 இலங்கையர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச் சீட்டுகளை தயாரித்தவரை சந்திப்பதற்காக காத்திருந்தபோது, இவர்கள் நேற்றுமாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் போலி கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, மூன்று கோடி ரூபா வழங்கியுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அலுக்கோசு பதவிக்கான புதிய பெயர்கள் தயார்-

alukosuஅலுக்கோசு பதவியின் புதிய பெயர்களுக்கான அர்த்தங்களை அறிந்ததன் பின்னர் அலுக்கோசு என்ற பெயரை மாற்ற மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அலுக்கோசு பதவி பெயரை மாற்றி வேறு பெயரை வைப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி புதிய பெயர்களை பரிந்துரை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய 180 பெயர்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் 8 பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். இந்த பெயர்களின் அர்த்தங்களை அறிவதற்காக மொழி வல்லுநர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அனுமதி கிடைத்தபின் புதிய பெயர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து சாட்சிப் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை-

UNஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு அடுத்தமாதம் முதல்வாரத்தில் சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இக்குழுவினர் ஓஸ்லோ, டோரோன்டோ மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் விசாரணைகளை நடத்தவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களிடம் ஐ.நா விசாரணைக் குழு சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குறித்த குழுவினர் இலங்கைக்கு வருகைதந்து விசாரணை நடாத்த முடியாது என இலங்கை பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, நாட்டிற்கு வருகை தந்து விசாரணை நடத்த முடியாது என அவர்கள் அறிந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூன்றாம் தரப்பு அனுசரணை அவசியம்;-கூட்டமைப்பு வலியுறுத்தல்-

1719856666tna3வடக்கில் முதலமைச்சர் தலைமையில் ஒரு நிர்வாகமும், ஆளுநர் தலைமையில் மற்றுமொரு நிர்வாகமும் காணப்படுவதனால் மக்களுக்கு சேவையாற்றுவதில் அதிகாரப் பிரச்சினை காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் எடுத்துக் கூறியுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்ணான்டஸ் தரன்கோ உள்ளிட்ட குழுவினருடன் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனைத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வு முக்கியம் என்று சொன்னால் நிச்சியமாக ஒரு மூன்றாம் தரப்பு அனுசரணை ஒன்று தேவை என்பதனை நேற்று வலியுத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸியில் தற்காலிக பாதுகாப்பு வீசா வழங்கும் நடவடிக்கை-

australiaஅகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு வீசாக்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசு கவனம் செலுத்தியுள்ளது. அகதி அந்தஸ்து நிரூபிக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிரந்திர வீச்சாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அவுஸ்திரேலியா தீர்மானித்திருந்தது. இதற்கமைய வருடமொன்றுக்கு 2,773 நிரந்தர வீசாக்கள் மாத்திரமே அகதிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசின் இக்கொள்கை தவறானது என அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் நீதிமன்ற தீர்ப்பு எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றென அவுஸ்திரேலிய குடிவரவமைச்சர் ஸ்கொட் மொரிசன் கூறியள்ளார். அகதிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தற்காலிக வீசா நடைமுறையை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளதாக  அவர் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்காலிக பாதுகாப்பு வீசாவைப் பெறும் ஒருவர் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் வரை ஆஸியில் 3 ஆண்டுகள் தங்கியிருக்கலாம்.

கோண்டாவில் சம்பவம் தொடர்பாக இருவர் கைது-

யாழ்ப்பாணம் உரும்பிராய் கோண்டாவில் பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையினை தூண்டிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோண்டாவில் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் வன்முறையை தூண்டிய குற்றசாட்டில் பேரில், சம்பவத்தில் பலியானவரின்  சகோதரர்கள் இருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்து அடுத்த மாதம் விசாரணை-

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதிவரை இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. ஜூலை மாதம் 5ஆம் திகதி மற்றும் 6ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இவ்விடயம் குறித்து இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொலீஸ் தரப்பின்மீது குற்றச்சாட்டு-

களுத்துறை மாவடட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலீஸார் தமது பொறுப்புகளை உரிய வகையில் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த சம்பவங்களின்போது பொலீஸாரின் பொறுப்புகள் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தவறான அவசர அழைப்புகள் விடுப்போர்மீது நடவடிக்கை-

பொலிஸ் அவசர அழைப்புக்கு தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். போலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் அவசர அழைப்புக்கு நாளொன்றுக்கு வரும் 100 அழைப்புகளில் 50க்கும் அதிகமானவை தவறான தகவலை வழங்கும் அழைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இவ்வாறான தவறான அழைப்புகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதங்களை ஒப்படைக்குமாறு யாழில் இராணுவம் அறிவுறுத்தல்-

ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழில் இராணுவத்தினரால் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ். அச்சுவேலி, வலி.கிழக்கு மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் இத் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆயுதங்களை தம்வசம் வைத்திருப்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள இராணுவ முகாமிலோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ ஒப்படைக்க முடியும். அவ்வாறு இல்லாமல் தம் வசம் வைத்திருந்து பிடிபட்டால் அவர்கள் பிணையில் வெளியில் வரமுடியாது தடுப்பில் வைக்கப்படுவர் என அந்தத் துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயுதங்களை எங்காவது கண்டெடுத்தால் அல்லது வைத்திருப்பவர்களை அடையாளங்கண்டால் அல்லது எங்காவது ஆயுதங்கள் இருப்பது கண்ணுற்றால் இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்க முடியும். தகவல் தெரிவிப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

unnamedதமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும்  ‘சுவிஸ்வாழ் தமிழ்; பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிகள் (2014)  சூரிச் மாநிலத்தில்…

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே! Read more

ஐ.நா பிரதிநிதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு-

1719856666tna3ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலர் ஒஸ்கார் பெர்ணான்டஸ் தரங்கோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையிலுள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்றுகாலை இந்தப் பேச்சு நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றிருந்தனர். இதன்போது இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, புனர்வாழ்வு வழங்கி, சுயமாக வாழ வசதி ஏற்படுத்திக் கொடுத்தல். போரின்போதான மீறல் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறல். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுதல் என்ற மூன்று முக்கிய விடயங்களும் அரசினால் பொறுப்பான வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வட மாகாணசபையை சுதந்திரமாக இயக்குவதிலுள்ள நெருக்கடிகள், காணிகள் அரசினால் கையகப்படுத்தல், தமிழர் பகுதிகளில் இராணுவத் ததலையீடுகள் என்பன பற்றியும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கினர்.

அளுத்கம வன்முறை குறித்து ஐ.நா அறிக்கை கோரல்-

ainaa pirathinithiyudan (2)அளுத்கமவில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச உயர் மட்டத்தினரிடம், இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் உதவிச் செயலர் எழுத்துமூல அறிக்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு நான்கு நாள் விஜயமாக வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ் தரங்கோ, பல தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். கடந்த 15ஆம் திகதி அளுத்கம நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த வன்முறைகளில் மூவர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் எழுத்துமூல அறிக்கையை, அரச உயர்மட்டத்திலிருந்து ஐ.நா. உதவிச்செயலர் கோரியுள்ளார். இருப்பினும் அறிக்கையை வழங்குவது தொடர்பில் இலங்கை அரச உயர்மட்டம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என கூறப்படுகின்றது. இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் பல தரப்பட்டவர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி வரும் ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் ஐ.நா பொதுச் செயலாளருக்கும், பாதுகாப்புச் சபைக்கும் விசேட அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொலநறுவை விகாராதிபதி கொலை-

imagesமாத்தளை,எலஹேர பிரதேசத்தில் எலஹேர பக்கமுன ஹீரடியே புண்ணியவர்தன விஹாராதிபதி அலகொலமட தம்மரத்ன(வயது 47 படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவம் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் பாதணி ஜோடி, சிகரெட் மற்றும் மதுபான போத்தலொன்று விஹாரை வளாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆஸியில் மற்றுமொரு இலங்கையர் தற்கொலை முயற்சி

australiaஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியா சென்று தஞ்சமடைந்த மற்றுமொரு இலங்கையர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகளுக்கான சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு மீண்டும் திரும்பிச்சென்றால் சித்திரவதை அடையவேண்டும் என்ற அச்சத்தினாலேயே இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் 2012ஆம் ஆண்டு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து தஞ்சமடைந்தவர் என்றும் ஆஸி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் இலங்கை மாணவி மருத்துவம் கற்பதற்கு மறுப்பு-

thamilakaththil ilankai maanavi (2)தமிழக அகதி முகாமில் உள்ள இலங்கை மாணவி ஒருவருக்கு தமிழ் நாட்டின் மருத்துவ கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பிளஸ் டு தேர்வில் 1170 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும், அவர் அகதி மாணவி என்பதை காரணம் காட்டி அரசாங்க மருத்து கல்லுரி அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது தொடர்பில் அரச அதிகாரி ஒருவரிடம் த ஹிந்து பத்திரிகை வினவியபோது. இலங்கையைச் சேர்ந்த அகதி மாணவர்களுக்கு பொறியியல் துறையில் கல்லூரி அனுமதி வழங்கப்படுகின்ற போதும், மருத்து கல்வி அனுமதிக்கான ஒதுக்கீடு இன்னும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவரை நாடுகடத்த முடியும்-சூலாநந்த பெரேரா-

velinaattavarai naadu kadaththaஇலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கு இலங்கைக்கு எந்த தடையும் இல்லை என குடிவரவு மற்றும் குடியழ்வு கட்டுப்பாட்டு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் அஹமதியா சமூகத்தைச் சேர்ந்த அகதிகளும், அங்கு சிறுபான்மையாக வாழ்கின்ற கிறிஸ்த்தவர்களும் இலங்கையில் அகதி அந்தஸ்து கோரியுள்ளனர். இவ்வாறு 142 பாகிஸ்தானியர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியுள்ளனர். இவர்களை நாடு கடத்துவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஐ.நா அகதிகள் பேரவை தெரிவித்திருந்தது. எனினும் பாகிஸ்தானிய அகதிகள் நாட்டில் பதிவு செய்யப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கயிருக்கவில்லை எனவும், இதனடிப்படையில் அவர்களை நாடுகடத்த இலங்கைக்கு அதிகாரம் இருப்பதாகவும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கல்வியற் கல்லூரியில் ஆயுதங்கள் மீட்பு-

thesiya kalviyiyat kalloori (2)யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கல்வியற் கல்லூரியில் உள்ள கிணற்றினை துப்பரவாக்கும்போது ஆர்.பி.ஜி ஷெல் -01 கைக்குண்டு -01 அமுக்கவெடி 01 ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கல்லூரி அதிபரால் கோப்பாய் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து இன்றுகாலை அவை இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.