வவுனியாவில் நடைபெற்ற  25 ஆவது வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள்.!!
(படங்கள் இணைப்பு)

IMG_0645தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர்  தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில்  முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) கொடியினை கழகத்தின் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

 

அதனைத்தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்துக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களினதும் திருவுருவபடத்துக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வன்னி பிராந்திய அமைப்பாளர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களினால் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டுஇதொடர்ந்து கழகத்தின் தோழர்களால் மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டது.

இவ் ஆரம்ப நிகழ்வுகளில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களான  யோகராஜன்இ குகன்இ ராஜாஇ மாலாஇ  மத்திய குழு உறுப்பினரும்இ வெங்கல செட்டிக்குள பிரதேச சபை உறுப்பினருமான ஜெகதீஸ்வரன்(சிவம்)இ வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் இராஜசேகரம்(சேகர்)இ பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதா வின்சன் கெனடிஇ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தர்களான சூரிஇ சிவாஇ சங்கர்இ தவம்இ குருஇ  நெப்போலியன்இ சுரேஷ்இ மயூரன்இ அனுஇ  சிறிஇ காண்டிஇசுகந்தன் ஆகியோருடன் கனடா வாழ் ஆதரவாளர் சத்தியசீலன்இ மற்றும் தேவா ஆகியோருடன் பொது மக்களும் நிகழ்வில்  கலந்து அஞ்சலி செலுத்தினர்.

IMG_0590 IMG_0591 IMG_0594 IMG_0598 IMG_0601 IMG_0605 IMG_0606 IMG_0607 IMG_0608 IMG_0609 IMG_0610 IMG_0611 IMG_0612 IMG_0613 IMG_0614 IMG_0616 IMG_0617 IMG_0618 IMG_0619 IMG_0620 IMG_0621 IMG_0622 IMG_0623 IMG_0624 IMG_0625 IMG_0626 IMG_0627 IMG_0628 IMG_0629 IMG_0632 IMG_0633 IMG_0634 IMG_0635 IMG_0645