Posted by plotenewseditor on 15 July 2014
Posted in செய்திகள்
புளொட் தலைவர் புளொட் நோர்வே அமைப்பாளர் – நோர்வே அதிகாரிகளுடன் சந்திப்பு-
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் நோர்வே நாட்டு அமைப்பாளர் ராஜன் ஆகியோர் கடந்த 11.07.2014 வெள்ளிக்கிழமை அன்று நோர்வே நாட்டின் பிராந்திய அலுவல்கள் மற்றும் அபிவிருத்திக்கான மூத்த ஆலோசகர் ரூடில் லங்க லெட்டா மற்றும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் உதவி இயக்குநர் நாயகம் தூண அலோஸ் ஆகியோருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
ஓஸ்லோவில் அமைந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின்போது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. Read more