மலேஷிய விமானத்தில் 295 பேரும் உயிரிழப்பு, யுக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மீது குற்றச்சாட்டு-

malaysia vimaanaththail (4)நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு 15 விமானப் பணியாளர்கள் உட்பட 295 பேருடன் பயணித்த மலேசியன் எயார் லைன்ஸுக்கு சொந்தமான ஆர்17 விமானம், ரஷ்ய எல்லைக்கு அருகே உக்ரைனில் நேற்று ஏவுகணை தாக்குதலுக்கு இலக்காகியதில் அதில் பயணித்த அனைவரும் உயிரழந்துள்ளனர். இந்நிலையில் தமது விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டுமென மலேஷிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமது விமானத்துக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் மலேஷிய பிரதமர் நஜீப் ரசாக் கோரியுள்ளார் மேற்படி எம் எச் 17 என்ற போயிங் 777 ரக மலேஷிய விமானம் யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமையானது ஒரு தீவிரவாத செயல் என யுக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இதேவேளை விமானம் யுக்ரைன் படையினராலேயே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். குறித்த விமானத்தில் 154 நெதர்லாந்து நாட்டவர்களும் 27 அவுஸ்திரேலியர்களும் 23 மலேஷியர்களும் 11 இந்தோனிஷியர்களும் பயணித்துள்ளதாகவும், மேலும் 14 ஐரோப்பியர்கள் 3 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மற்றும் ஒரு கனேடிய பிரஜையும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுவரை 100 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யுக்ரைனிய அதிகாரிகள் தெரவிக்கின்றனர்

யுக்ரைனின் கிழக்கு வான் பரப்பை விட்டு விலகி பயணிக்குமாறு அறிவுறுத்தல்-

ukrain kilakku vaan parappaiயுக்ரைனின் கிழக்கு வான் பிராந்தியத்திலிருந்து விலகி பயணத்தை முன்னெடுக்குமாறு இலங்கை விமான சேவைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று யுக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சீ. நிமல்சிறி கூறியுள்ளார். ஆயினும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இலங்கை விமானங்கள் அந்த வான் பரப்பைவிட்டு விலகியே பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். யுக்ரைனின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தமாகவே ஒரு மாதத்திற்கு முன்னர் அந்த வான் பரப்பிலிருந்து விலகி பயணிப்பதற்கான வரையறையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இலங்கை விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச். 17 என்ற பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதை அடுத்து, அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் 283 பயணிகளும், 15 பணியாளர்களும் இருந்ததுடன், இவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து நாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசே தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கு! யாழில் போராட்டம்-

dgfgfgfgfdfdfdCaptureயாழ். காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் கடற்படை சிப்பாயால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிப்புத் தெரிவித்து கண்டன போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. பிரதேச மக்களால் காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை 11 மணியளவில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காரைநகர் ஊரி பிரதேசத்தினை சேர்ந்த 11 வயதுடைய மாணவி ஒருவரை கடற்படை சிப்பாய் ஒருவர், 11 தினங்களாக பாடசாலை நேரத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய தினம் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சி.சிவமோகன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆ.ஆனைமுகன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ஆ.சிவதட்சணாமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டது. அதில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய கடற்படை சிப்பாய் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 07 கடற்படைவீரர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more