வலி மேற்கு பிரதேசசபை தவிசாளரின் பஜனைப் பாடசாலைத் திட்டம்-

01.08.2014 வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பஜனைப் பாடசாலைத் திட்டம் வட்டுக்கோட்டை கண்ணகாம்பா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் (கண்ணகை அம்மன் ஆலயத்தில்) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் மேற்படி ஆலய பரிபாலன சபைத் தலைவரும் சமூக சேவகருமான கலக் விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் உரையாற்றும்போது, பிரதேச சபைத் தவிசாளரது சேவையைப்பாராட்டிய ஆலய பரிபாலன சபைத் தலைவர் பிரதேச சபைத் தவிசாளரது முயற்சியால் நாம் பல நன்மைகளை பெற்றுள்ளதாகவும் இதேவேளை தவிசாளர் தனது 6 மாத மாதாந்த கொடுப்பனவின் வாயிலாக ஆலய பூசகரது இல்லத்தினை புனரமைத்து வழங்கியமையையும் இவ் இடத்தில் குறிப்பிட்டு பாராட்டினார். இவ் நிகழ்வினைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் தவிசாளரால் மாணவர்களுக்கு சுவாமி விவேகாணந்தரது நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி ஆலயமானது வரலாற்று பெருமைவாய்ந்த ஆலயம் ஆகும் இவ் ஆலயத்தினை மாதா ஆலயம் எனவும் அழைப்பர் இதேவேளை 01.08.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பஜனைப் பாடசாலைத் திட்டம் தொல்புரம் பத்தானைகேணியடி வைரவர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் தவிசாளரால் மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரது நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி ஆலயமானது வரலாற்று பெருமைவாய்ந்த ஆலயம் ஆகும் இவ் ஆலயத்தினை அடுத்துள்ள பகுதியில் யானைகள் கட்டப்பட்டு பரிபாலிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.