புங்குடுதீவு வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணம் அன்பளிப்பு

unnamedபுங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான சுவிஸில் வசிக்கும் அருள், ரவி மற்றும் இலங்கையில் வசிக்கும் ரகுநாதன் ஆகியோர் இணைந்து சுமார் பத்தொன்பது (19) இலட்சம் ரூபா பெறுமதியான ‘மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவியினை  (Scanning Machine) புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கடந்த 15.08.2014 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பாக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்வில் திரு.ரகுநாதன் பாரியார் உஷா ரகுநாதன் உயிரியல் வைத்தியப் பொறியியலாளர் திருமதி சாந்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவவியல் நிபுணர் டொக்டர் சரவணபவன், மகப்பேற்று வைத்திய அதிகாரி டொக்டர் குமாரவேல் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் குணதாசன் ஆகியோர் உட்பட புங்குடுதீவு வைத்தியசாலையின்  பொறுப்பதிகாரி, தாதிமாரும் கலந்து கொண்டனர்.

unnamed2unnamed1