சர்வதேச விசாரணை குழுவுக்கு பான்கீ மூன் ஆதரவு-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீ முன் முழுமையான ஆதரவினை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரிக் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினால் இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின்மூலம் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழியேற்படும். அதனடிப்படையில் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என பேச்சாளர் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம்-
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நாளைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதன் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை இந்தியா செல்லவுள்ளதாகவும், அங்கு நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் விரிவாக பேசப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது.
மேலும் செய்திகளை வாசிக்க…………. Read more