யாழில் பிரதான ரயில் நிலையங்கள் புனரமைப்பு-
யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்ரோபர் மாதம் கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கை-
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் காணால் போனதாக கூறப்படும் நான்கு தமிழக மீனவர்கள் குறித்த இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை முதல் குறித்த மீனவர்கள் நான்கு பேரும் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன மீனவர்களின் படகில் நீர் புகுந்த நிலையில், அவர்களை மீட்பதற்கு ஏனைய மீனவர்கள் முயற்சித்திருந்த போதும், குறித்த மீனவர்கள் மூழ்கும் படகினை கைவிட்டு வர மறுப்பு தெரிவித்திருந்தனர். எனினும் அவர்கள் இதுவரையில் கரை திரும்பாத நிலையில் தொடர்ந்தும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் செய்திகளை வாசிக்க….. Read more