திருமலையில் நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி-

thirumalaiyil neer kaakam koottu payitchiஇலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து நடத்தும் ‘நீர்க்காகம்’ கூட்டுப்பயிற்சி, எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதிமுதல் 23ஆம் திகதிவரை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. முப்படைகளையும் சேர்ந்த 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 6 நாடுகளைச் சேர்ந்த படைவீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். திருகோணமலையிலுள்ள காட்டுப்பகுதியில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது.

செப். 4, 5இல் ஊவா மாகாணசபை தபால்மூல வாக்களிப்பு-

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் ஊவா மாகாண சபைக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 30ஆயிரத்து 655 தபால் மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நவநீதம்பிள்ளை ஓய்வு – ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்-

navaneethampillai oyvuஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more