13ஆவது திருத்த சட்டம் குறித்து கூட்டமைப்புடன் பேசத் தயார்: ஜனாதிபதி-

imagesCAEVMZZHஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுவார்த்தைக்கு தான் தயாhக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற தி இந்து பத்திரைகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின்போது இந்திய பிரதமரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியமிருப்பதாக வெளியாகும் செய்திகள் மறுப்பதற்கில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் வளத்தை நாசப்படுத்துகின்றனர்-ஜனாதிபதி-

ilankai india meenavar pechchuஇந்திய மீனவர்கள் இலங்கை கடல் வளத்தை நாசப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டிருக்கும் படகுகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் உடனே விடுவிக்கப்படுவதாகவும், அவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு மீண்டும் வராமலிருக்கவே, படகுகளை விடுவிடுப்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 2009 போருக்கு பின் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து 90 சதவிகித இராணுவத்தினர் வெளியேறிவிட்டனர்; மீதமுள்ளவர்கள், மக்களின் பாதுகாப்பிற்காக அங்கு உள்ளனர். இராணுவத்தினர் இலங்கையில்தான் இருக்க முடியும். அவர்களை இந்தியாவில் வைக்க முடியாது. இலங்கையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. வடக்கு பகுதியில் இருப்பவர்கள் சுதந்திரமாக தெற்கு பகுதிக்கு சென்று வருவதற்கு முடிகின்றது தமிழ் இளைஞர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் மீதான கண்ணோட்டம் மாறி வருகின்றது. கற்றுத்தந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு அளித்த 35 பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்றயவைகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more