Header image alt text

சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

china_sl_president_0032(3883)சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார். தனது பாரியாருடன் வருகைதந்த அவரை, விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்துக்கு இரு பக்கங்களிலும் நடனக்கலைஞர்கள் நடமாட, பாடசாலை மாணவர்கள் சீன, இலங்கை ஆகிய இருநாடுகளின் தேசிய கொடிகளையும் அசைத்து வரவேற்றனர். விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வீதியின் ஒரு பக்கத்திலும்; அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவரை வரவேற்கும் முகமாக விமான நிலையத்தை சுற்றி இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுநாயக்க- கொழும்பு  அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கொழும்பில் அவர், பயணிக்கும் இடங்களிலும் இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன

இந்திய துணைத் தூதுவரின் கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் – இந்தியா

ilankai inthiya koottukulu kootamயாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ‘மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின்  தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும்’ என்று கூறினார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது சாத்தியமற்றது என்று கூறியிருந்தார். இது குறித்தும் அக்பருதீனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும். இந்த விடயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்’ என்றார்

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (EPDP) கந்தசாமி கமலேந்திரன் பிணையில்

kamalenthiran_free_001நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன், கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பில், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்தனர். அத்துடன் றெக்ஷிசனின் மனைவி அனிடா மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்ற நிலையில், கடந்த 9 மாதங்களாக இடம்பெற்று மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அனுமதி வழங்கினார. பிணை வழங்கப்பட்டு இதுவரை காலமும் பிணையெடுப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்த கமலேந்தினை அவரது உறவினர் ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை இந்நிலையில், 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில பிணையில் எடுத்தார். இந்த வழக்குடன் தொடர்புடைய றெக்ஷிசனின் மனைவி அனிடா, கடந்த 9ஆம் திகதி பிணையில் விடுதலையானார். அத்துடன், வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.  .

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட சிறப்பு பட்டங்கள் பெறுவதற்கான பாடத் தெரிவில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஈடுபட்டனர். கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைபவர்கள் 3.0 ஜி.பி.ஏ அடைவு மட்டத்தை பெற்றால் இரண்டாம் வருடத்தில் இருந்து சிறப்பு கலை பட்டம் (4 வருடங்கள்) பெறுவதற்கு விரும்பிய பாட தெரிவுகளை மேற்கொள்ள முடியும். 3.0 ஜி.பி.ஏ பெறாதவர்கள் பொது கலைமாணி பட்டத்துடன் (3 வருடங்கள்) வெளியேற வேண்டும். Read more

யாழ் ஜம்புகோளபட்டினத்தில் மீன்பிடிக்க தடை – கடற்படை

index(1027)யாழ்ப்பாணம், ஜம்புகோளப்பட்டினம் (மாதகல்) கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் முற்றாக தடை விதித்துள்ளனர் என்று கங்காதேவி மீன்பிடி சமாசம் தெரிவித்தது. சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த 115 மீனவக் குடும்பங்கள், ஜம்புகோளப்பட்டினம் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். எனினும், ஜம்புகோளப்பட்டினம் பகுதியில் சங்கமித்தை வந்திறங்கிய அடையாளமாக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி புனித பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, பௌத்த ஆலயம் அமைந்துள்ள இடத்தை சூழவுள்ள 2 கிலோமீற்றர் தூரத்திற்கு மீன்பிடிப்பதற்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, புனித பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்டுப்புலம் மீனவர்கள், மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொன்னாலை பகுதியிலிருந்த கடற்படை முகாம் ஒன்று தற்போது ஜம்புகோளப்பட்டினத்தை அண்மித்த திருவடிநிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பிரதேசமெங்கும் மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு கடற்படையினர் அறிவித்துள்ளதுடன், மீனவர்கள் கடலில் போட்டிருந்த மீன்பிடி படுகைகளையும் அகற்ற உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் ஆனால் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், குறித்த பிரதேசத்தை புனித பிரதேசமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அது தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்த கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய, ஜம்புகோளப்பட்டின கடற்பரப்பில் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.  

சமாதான நீதவானை கடத்த முயற்சி – சுவிஸ்வாழ் தமிழர்

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவானான சி.சிதம்பரம் (வயது 63) என்பவரை, வானில் வந்தவர்கள் கடத்த முற்பட்டுள்ளதாகவும். ஊர் மக்கள் ஒன்று கூடியதையடுத்து வானில் வந்தவர்கள் தப்பி ஓடியதாகவும். பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசிக்கும் தனது தூரத்து உறவினர்களில் ஒருவரே வானில் ஆட்களுடன் வந்து தன்னை கடத்த முற்பட்டதாக அவர் சமாதான நீதவான் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்ட போது, பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்திலேயே கடத்தல் முயற்சி இடம்பெற்றிருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட முனைந்தவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளார்

மட்டக்களப்பு சிவன் கோவில் தேர் திருவிழாவிலன்று மேலும் விபத்து

pati_accident_002கொக்கட்டிச்சோலை தான்றோன்றீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த  முச்சக்கரவண்டியொன்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொக்கட்டிச்சோலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 04  பேர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த  நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். காயமடைந்தவர்களில் 03 பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களெனவும். காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரதேசத்தில் திங்கட்கிழமை (15) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து நடத்துனர் பலி – முறிகண்டி

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, முறிகண்டி பகுதியிலுள்ள  வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்ட வேளையில் முன்வாசலில் நின்றிருந்த நடத்துனர் தவறி கீழே விழுந்தார் இதன்போது, பஸ்ஸின் முன் சில்லு, நடத்துனர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பலியான சம்பவம் இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளது.  வவுனியா, கோவில் புளியங்குளத்தைச் சேர்ந்த சந்திரன் தனுசன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் கூறினர்.

இரண்டு பேருந்துகள் மோதி பலபேர் காயம் – காலியில்

காலி, தடல்லை எனும் இடத்தில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரா.சம்பந்தன், மாவை, அனந்தி ஆகியோரை கேலி செய்து சுவரொட்டிகள் – யாழில்

tna_poster_001தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சசிதரன் ஆகியோரை கேலி செய்து, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சர்வதேச ஜனநாயக தினம் இன்று திங்கட்கிழமை(15) கொண்டாடப்படும் நிலையில், அன்றைய ஜனநாயகம் – இன்றைய ஜனநாயகம் என பிரசுரிக்கப்பட்டு இரண்டு விதமான கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அதன் கீழ் மேற்படி மூன்று அரசியல்வாதிகளும் செல்வ செழிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு அவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் – இந்திய பதில் துணைத்தூதர்

india_moorthy_001இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதமானோர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி பயன்பாட்டை இந்தியாவில் பரப்பும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி கடைபிடிக்கப்படும் ஹிந்தி திவாஸ் என்கிற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் மினிசூறாவளி

miniஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில்  வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் மினிசூறாவளி போன்று பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுளது. ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள கெருடமடு மற்றும் மண்ணாங்கண்டல் கிராமத்தை சேர்ந்த மக்களதும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள வசந்தபுரம் கிராம மக்களதும் 42 வீடுகள் சேதமடைந்துள்ளது. பலத்த காற்றுக்கு கூரைகள் மற்றும் கூரைத்தடிகள் தூக்கி வீசப்பட்டமையாலும் மரங்கள் முறிந்து கூரைகளின் மீது வீழ்ந்ததாலும் இவற்றில் 10 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. Read more