வடமாகாணசபை நிதி நியதிச்சட்டம் ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டது 

northern-வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதிநியதிச்சட்டம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் அங்கீகரிக்கப்பட்டு வியாழக்கிழமை (18) தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அதனுடன் ஏற்கெனவே ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்த முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டமும் கையளிக்கப்பட்டதாக அவைத்தலைவர் குறிப்பிட்டார். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதிக்கு வியாழக்கிழமை காலை வருகை தந்த வடமாகாண ஆளுரின் செயலாளர் எல்.இளங்கோவன் இவற்றை தங்களிடம் ஒப்படைத்ததாக அவைத்தலைவர் தெரிவித்தார். மேற்படி இரண்டு நியதிச்சட்டங்களும் அங்கீரிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அது தொடர்பான சட்டத்தை அமுலாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவைத்தலைவர் மேலும் தெரிவித்தார். வடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம் மற்றும் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் ஆகிய உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்ட மூன்று நியதி சட்டங்களும் ஆளுநரின் சிபாரிசு பெறும் பொருட்டு, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு வடமாகாண சபை அனுப்பி வைத்தது. இதில் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆளுநர் அதனை ஏற்கமறுத்ததுடன், சட்டவல்லுநர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு, தொடர்ந்து ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். ஜனாதிபதி அதனை பரிசீலனை செய்து உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, நீதிமன்றத்தினூடாக தீர்மானம் எடுக்கப்படும் என கூறினார். அடுத்ததாக முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டதிற்கிணங்க வடமாகாண சபையினர் சில மாற்றங்களை செய்தததையடுத்து, அதனை ஆளுநர் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். இருந்தும், நிதி நியதிச்சட்டத்தில் பல சரத்துக்கள் சட்ட எல்லையை மீறியும், மத்திய அரசாங்கத்தினுடைய உரித்துக்களை பற்றி கூறுவதாகவும் இருப்பதாகவும், அதனை நீக்கி திருத்தங்கள் செய்யும் படி ஆலோசனை கூறி ஏற்க மறுத்து, வடமாகாண ஆளுநர் வடமாகாண சபையினருக்கு திருப்பி அனுப்பினார். இவ்வாறு இரண்டு தடவைகள் திருத்தங்கள் மேற்கொண்டு வடமாகாண சபையினர் ஆளுநரிடம் சமர்ப்பித்திருந்த போதும், தான் எதிர்பார்த்த திருத்தங்கள் இடம்பெறவில்லையென ஆளுநர் ஏற்கமறுத்தார். தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி திருத்தங்கள் செய்து அனுப்பப்பட்டதை நிதி நியதிச்சட்டத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட நியதிச்சட்டங்களை  வடமாகாண சபையினரிடம் கையளித்துள்ளார்

தமிழர்கள் யாரும் தூங்கிவிடக்கூடாது – மாவை

Untitled2இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா தெரிவு செய்யப்பட்டமையை பாராட்டி, காங்கேசன்துறை தமிழரசு கட்சி அலுவலகத்தால் வழங்கப்பட்ட வரவேற்பு கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது கூறினார். தமிழ் மக்களாகிய நாங்கள் யாரும் தூங்கிவிடக்கூடாது. எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அவசியமாகும்.’நாங்கள் பாண்டவர்களைப் போன்றவர்கள். எங்களால் வெற்றி பெற முடியும். அறம் பிழைப்போரே கஸ்டங்களை அனுபவிப்பார்கள என்றம்;. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷாவினால் எமது பிரதேசங்களில் எந்தவொரு வெற்றியையும் பெற முடியாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டார் சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாட்டின் தூதுவர் என்னுடன் தனியாக பேசினார். உள்நாட்டு பிரச்சினைகளில் உங்கள் தலையீடுகள் இருப்பதை இலங்கை அரசு விரும்பவில்லை என எனக்கு அவர் குறிப்பிட்டார். இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன. போராடுவதற்கான ஒரு தூண்டுதலாகவே அவை அமைக்கின்றன. எமது சிறு பிள்ளைகள் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்கு செல்லும் நிலைமைக்கு செல்லவிடாது நாம் இந்த போராட்டத்தை நடத்தி அவர்களை நல்ல முறையில் வாழ வழி செய்ய வேண்டியது அவசியமாகும்’ என்றார். ‘எமக்கு கிடைக்கப்போகும் தமிழீழம் எமது மண்ணில் தான் கிடைக்க வேண்டும். இதனை விடுத்து எங்கள் மொழியை இழந்து மண்ணை இழந்து வேறு எங்கும் செல்ல முடியாது. எமது மண்ணை இராணுவம் ஆளுகின்றது. இராணுவத்தினரின் உல்லாச வாழ்க்கைக்காக இதனை நாம் அங்கீகரிக்க முடியாது. இதனை தடுக்க வேண்டியது எமது கடமையாகும்.  நாங்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல. இன்று நாங்கள் அஹிம்சை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அஹிம்சை போராட்டம் எப்போதும் தோற்றுப்போனதில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.