Header image alt text

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை-

mahinda_hillary_003ஐக்கிய நாடுகள் சபையின் 69ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி இன்றுபிற்பகல் 6.30ற்கு ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தக் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியிருந்தது. ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளில் அநேகமான நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் இம்முறை பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்றும் பல அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

ஐ.தே.கட்சி பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச எம்.பி நியமனம்-

UNP pirathi thalaivarakaஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உதவித் தலைவராக கொழும்பு மாவட்ட எம்.பி ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைஞர் முன்னணி தலைவராக அண்மையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஹரேன் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக எரான் விக்ரமரட்ன எம்.பியும், கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளராக ரஞ்சித் மத்துமபண்டார எம்.பியும், கட்சியின் பிரதிப் பொதுச்செயலராக அகிலவிராஜ் காரியவசம் எம்.பியும் நியமிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் தேர்தல் செயலாளராக தலதா அதுகோரல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஒன்று கூடலும், கௌரவிப்பு நிகழ்வும்.

unnamed1 unnamed2 unnamed3 unnamedசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சுவிஸ் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும். புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும் நிகழ்வும். கடந்த சனிக்கிழமை (20.09.2014)சூரிச் அடில்ஸ்வில் சிவசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் இராசமாணிக்கம் ரவீந்திரன் அக்குடும்பத்தினரை வரவேற்று ‘புங்குடுதீவு மருத்துவமைனைக்கு அவர்கள் ஆற்றியபணி காலம் அறிந்து ஆற்றிய செயலென’ புகழ்ந்துரைத்தார். ‘அவர்கள் இப்புகழ்ச்சியினை விரும்பவில்லையெனினும், நாங்கள் இச்செயலை வெளிக்கொணர்ந்து காட்டினால் உங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஏனையோரும் உதவிட முன்வருவார்கள்’ எனக்கூறி தனதுரையை நிறைத்தார்.
செயலாளர் தர்மலிங்கம் தங்கராஜா அவர்கள்; ஒன்றியத்தின் சார்பில் வாழ்த்துப்பாவினையும் வழங்கி கௌரவித்து மனமாரப் பாரட்டுகின்றேன் என்றர்.  Read more