Header image alt text

ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை-

Tamil_News_476707100869சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி அவர் தமிழக முதல்வர் பதவியை இழப்பார் எனத் தெரியவருகிறது. 

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் திகதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996-ம் திகதி தமிழக இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். Read more

சர்வதேச விசாரணைகளை இலங்கை நிராகரித்தமை வருத்தமளிக்கிறது-

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது. இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கான, ஐ.நா சபையின் அழைப்பை இலங்கையின் மூத்த அதிகாரிகள் நிராகரித்தமை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது, இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சுதந்திரமாக விசாரணை செய்ய, 2014ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை மறுப்புத் தெரிவித்துள்ளது வருத்தமளிப்பதாக சர்வதேச கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோர் சாட்சியமளிப்போர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றார்களா என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. Read more

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தனது பதவியை இழக்கும் நிலை-

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களுரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்றுகாலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். Read more

புலிகள்மீதான தடை நியாயமானது – இந்தியா-

Indiaஇந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது தடை விதிக்கப்பட்டுள்ளமையை நியாயப்படும் வகையிலான ஆவணங்களை இந்திய அரசாங்கம், இந்த தடை குறித்து ஆராயும் தீர்ப்பாயத்திடம் கையளித்துள்ளது. புலிகள் மீது இந்திய விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நீதிபதி ஜீ.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இந்த தீர்ப்பாயம் நேற்று சென்னையில் தமது அமர்வை நடத்தியிருந்தது. இதன்போது இந்தியாவின் பிரதி மன்றாடியார் நாயகம், புலிகள் தடை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தும் வகையிலான ஆதாரங்களை தீர்ப்பாயத்தில் முன்வைத்தார். கடந்த 2012ம் ஆண்டு மூன்று புலி உறுப்பினர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டமை, இந்த தடை நீடிப்புக்கான காரணங்களில் ஒன்றாக இந்திய அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் புலிகளின் சார்பில் வாதாடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொது செயலாளர் வை.கோ. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறினார். அதேநேரம் புலிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இயக்கம் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியது. இதனை மறுத்துள்ள வை.கோ. புலிகள் இலங்கையில் தமிழீழத்தை கேட்டார்களே தவிர, இந்தியாவில் ஒரு அங்குலத்தையேனும் கேட்டிருக்கவில்லை என்று கூறினார். இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் சென்னையில் இடம்பெறுகின்றது.

ஜனாதிபதி- ஆஸி. பிரதமர் சந்தித்து கலந்துரையாடல்-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோர் நியூயோர்க் நகரில் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.நா பொதுச்சபையின் 69ஆவது அமர்வின் ஓரமாக இடம்பெற்ற இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது இருதரப்புச் சம்பந்தமான பல விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். பொருளாதார, அபிவிருத்தி துறைகளில் இலங்கையின் அண்மைய விருத்திநிலை தொடர்பாகவும், இலங்கையின் நல்லிணக்கப் பணிகள் தொடர்பாகவும் பிரதமருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கியுள்ளார். மேலும் நல்லிணக்க ஆணைக்குழு சிறப்பாக செயற்படுவதாகவும் இலங்கையின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பது சிறப்பான ஒரு விடயம் எனவும் டோனி அபோட் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் மனிதக் கள்ளக்கடத்தலை எதிர்கொள்ள இலங்கை வழங்கிய உதவிக்கு மிக நன்றி தெரிவிப்பதாகவும் டோனி அபோட் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க… Read more