Header image alt text

புன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டுப் போட்டி-

யாழ். புன்னாலைக்கட்டுவன் கலைவாணி சனசமூக நிலையமும், கலைவாணி முன்பள்ளி மாணவர் சங்கமும் இணைந்து நடாத்திய கலைவாணி முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுப் போட்டி இன்று (04.10.2014) சனிக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு எஸ். நேசராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் நிகழ்வில் பங்குகொள்ளாமையால் வட மாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். புன்னாலைக்கட்டுவன் கிராம சேவையாளர் திரு. பரமநாதன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தியாகராஜா பிரகாஸ், நல்லூர் பிரதேச சபைத் தலைவர் திரு வசந்தகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். வட மாகாணசபை உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் சார்பில் அவரது செய்தியினை புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த திரு லோகன் அவர்கள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாலை 6மணியளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பெரியோர்கள், இளைஞர்கள், பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

20141004_16564620141004_17034020141004_17084820141004_17223820141004_17213220141004_160055

13ஆம் திகதி முதல் யாழ். வரையான தொடருந்து சேவை-

வடக்குக்கான தொடரூந்து சேவையின் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையான சேவைகள் இந்த மாதம் 13ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் முகாமைத்துவ அதிகாரி பீ.எச்.பி.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்த சேவைக்கான கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தொடரூந்து பாதை நிர்மாணங்களுக்கு இந்தியா நிதிவழங்கலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் தமிழகத்திற்குமிடையிலான படகு சேவை-

இலங்கைக்குக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான கப்பல்சேவை அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்து வரும் நிறுவனம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிதி உதவியின்கீழ், தலைமன்னாருக்கான தொடரூந்து பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணிகள் எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த வருடம் முதல் தலைமன்னாருக்கும், ராமேஸ்வரத்துக்குமான கப்பல் சேவையை ஆரம்பிக்க கூடியதாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பௌரூஸுடன் இலங்கை நீதி ஒப்பந்தம்-

இலங்கைக்கும், பௌருஸ்க்கும் இடையிலான சட்ட மற்றும் நாடுகடத்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள இணங்கப்பட்டுள்ளது. பௌரூஸின் ஜனாதிபதி எலசாண்டர் லுகசென்கோ இதற்கான அனுமதியை வழங்கி இருக்கிறார். குற்றச் செயல்கள் தொட்ட தகவல் பரிமாற்றங்களின் பொருட்டு இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. ஏற்கனவே ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடம் இலங்கையுடன் இவ்வாறான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள இணங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்நுழைவு-

கட்டுநாயக்க அதிவேக வீதியில் நீர்கொழும்பு மற்றும் கண்டி வீதியில் வாகனங்கள் உள்நுழைதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் வார நாட்களில் காலை 7மணி தொடக்கம் 9மணிவரை கட்டுநாயக்க அதிவேக வீதிக்குள் நீர்கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் வாகனங்கள் உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more