ஜனாதிபதித் தேர்தல் ஜனவரியில் வேண்டாமென இடதுசாரிகள் கோரிக்கை-

அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படுவதற்கு தீர்மானித்துள்ள ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பதவியில் இருக்க முடியும். அத்தோடு மூன்றில் இரண்டு பலம்கொண்ட அரசாங்கமும் இருக்கிறது. இவ்வாறிருக்கையில் அவசரமாக ஜனாதிபதி தேர்தலொன்றிற்கு செல்லத் தேவையில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் அந்த செய்திகள் மேலும் கூறுகின்றன. இலங்கை கம்யூனிச கட்சியின் செயலர் சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர, லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியபோதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பலம் கொண்ட அரசாங்கமொன்று இருக்கிறது. அத்தோடு இரண்டு வருடம் பதவிக்காலம் உள்ளது. எனவே அந்த 2 வருட காலத்தில் இரு வரவு – செலவுத் திட்டங்களை சமர்ப்பிக்க முடியும். எனவே அதனூடாக மக்களுக்கு நல்ல நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும். அதன் பின்னர் தேர்தலொன்றிற்கு செல்வதே சிறந்தது என அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…… Read more