Header image alt text

வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ

வடமாகாணசபை வைக்கோல் பட்டடை நாய் ஜயாதிபதி

முட்டாள் விக்னேஸ்வரன் கிண்டல் டக்களஸ் தேவானந்தா

mahinda_bodhi_002வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போகும் வழியில் இன்று அனுராதபுரத்தில் மஹா போதி விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டடு அங்குள்ள புனித போதி மரத்தை வழிபட்டார். இதன் பின்னர் கிளிநொச்சி புறப்பட்டுச் சென்றார்.

இலங்கையின் வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன். புலிகள் நடத்திவந்த வங்கியில் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு தொகுதியை உரிமையாளர்களான 25 பேரிடம் கையளித்துள்ளார்.

புலிகள் கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு நடத்திவந்த நிர்வாகத்தில் நடத்திய வங்கியில், அரச mahinda_kilinochchi_002வங்கிகளைப் போன்று சேமிப்பு, தங்க நகை அடகு வைத்தல், கடன் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இறுதி யுத்தத்தின்போது அந்த வங்கியில் இருந்த நகைகள், ஆவணங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தன. ஆயினும், அந்த தங்க நகைகள் பற்றிய விபரங்கள் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்த mahinda_kilinochchi_005நிலையிலேயே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை ஐந்து ஆண்டுகளின் பின்னர் உரியவர்களிடம் வழங்குவதாகக் குறிப்பிட்டு, 25 பேருக்கு தங்க நகைகளை வழங்கியிருக்கின்றார். அத்துடன் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 1,218 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக 115 மில்லியன் ரூபாவையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

mahinda_kilinochchi_004புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கான அரச செயலகக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். ‘வட மாகாணசபை வைக்கோல் பட்டடை நாய்’ ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் விசேடமாக mahinda_kilinochchi_017அமைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ, வபுலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றி, முப்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். பயங்கரவாதிகளுக்கும் பயங்கர ஆயுதங்களுக்கும் எதிராகவே நாம் போராட்டம் நடத்தினோம். உங்களுடைய எதிர்காலத்துக்காகவும் உங்களுடைய பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவுமே நாம் போராட்டம் நடத்தினோம். 2009 மே 19ஆம் திகதி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் நீங்கள் விமோசனம் பெற்றுள்ளீர்கள். உங்களுடைய பிரச்சினைகள், எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கியிருந்த நீங்கள், இப்போது அதிலிருந்து மீண்டுள்ளீர்கள். போர்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள் காரணமாக நீங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளீர்கள். இப்போது அந்த ஆபத்து இல்லை.

mahinda_kilinochchi_006அவர் மேலும் உரையாற்றுகையில்:- அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்திருந்தும் தேர்தலை நடத்தியதாகவும், ஆயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் போதிய அளவு நிதியை வழங்கியுள்ள போதிலும், அதனை மக்களுக்குப் பயன்படுத்தத் தவறியுள்ளதுடன், அரசாங்கமாகிய தாங்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களையும் அவர்கள் செய்ய விடுவதில்லை என்றும் குற்றம் சுமத்தினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ‘வைக்கோல் பட்டடை நாயைப் போன்று’ மக்களுக்குரிய நலத் திட்டங்களைத் தாங்களும் செய்யாமல் மத்திய அரசையும் செய்யவிடாமல் தடுத்திருப்பதாக அவர் சாடியிருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழீழ அரசாங்கம் பற்றி குறிப்பிட்ட அவர், அவர்களுடன் எதிர்க்ட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்று பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகத் தெரிவித்ததுடன், இந்த நாட்டில் தனிநாடாக ஈழம் அமைப்பதையோ, நாட்டைப் பிரிப்பதையோ ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே, வடபகுதி மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, ஒன்றுபட்ட நாட்டில் வாழ முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முட்டாள் விக்னேஸ்வரன் கிண்டல் டக்களஸ் தேவானந்தா

mahinda_kilinochchi_013மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு அழைத்தோம். அவர் வருகை தருவார் என நினைத்தோம். ஆனால் வரவில்லை. மு விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூறவந்தேன். நீங்கள் அப்படி நினைத்தீர்களா? என அமைச்சர் டக்ளஸ் நையாண்டி செய்து சிரித்தார். டக்ளஸ் தேவானந்தா, மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனை நையாண்டி செய்து நகைத்துச் சிரித்தது அரசியல் கோமாளித்தனமும், நாகரீகம் அற்ற செயலும், அறிவீலித்தனமும் என பலரும் விசனப்பட்டுக் கொண்டனர்.

கொழும்பு கரையோரப் பகுதிகளில் விஷேட போக்குவரத்துத் திட்டம்-

Colombo karaiyora paguthikalilவெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிகளில், நாளை முதல் விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வார நாட்களில் மாத்திரம் மீள அறிவிக்கப்படும் வரை இந்நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி காலை 07.00 மணி முதல் 09.30 வரை வெள்ளவத்தை கடற்கரைப் பகுதிகளில் நெல்சன் வீதி சந்தியிலிருந்து சார்லிமன்ட் சந்திவரை கொழும்பு நோக்கி மட்டும் வாகனப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது. அதேபோல் மாலை 04.00 மணிமுதல் 06.30 வரை வெள்ளவத்தை கடற்கரை வீதியின் சார்லிமன்ட் சந்தியில் இருந்து நெல்சன்வீதி சந்தி வரை தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரச விடுமுறை தினங்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்நடவடிக்கை நடைமுறையில் இருக்காதென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய தேருக்கு தீவைப்பு-

unnamedவவுனியா, இறம்பைக்குளம், n ஹாரோவப்பத்தானை வீதியில் அமைந்துள்ள அந்தோனியார் தேவாலயத்தின் தேர் இனந்தெரியாதோரால் இன்று அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தேவாலய நிர்வாகம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் கதவு திறந்திருப்பதையும் அங்கிருந்து புகை வருவதையும் பிரார்த்தனைக்காக தேவாலயத்துக்கு இன்று அதிகாலை வந்தவர்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில், தேர் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது, தேர் எரிந்து கொண்டிருப்பதை கண்டுள்ளனர். உடனடியாக தண்ணீரினால் தீயை இவர்கள் அணைத்தபோதிலும், தேரின் கீழ்ப்பகுதி எரிவடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more