Header image alt text

யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின் பரிசளிப்பு விழா-2014-

kondavil hindu price giving 17.10 (12.)யாழ். கோண்டாவில் இந்துக்கல்லூரியின பரிசளிப்பு விழா-2014 இன்றுமுற்பகல் 10 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. தவகீஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சுவாமிஜீ பிரமச்சாரி ஜாக்ரத சைதன்ய (சின்மயா மிஷன்) ஆச்சாரியார் அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. கந்தையா கேதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்ததுடன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களும் பெருமளவாக இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்றைக்கு பல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பெரிய பாடசாலைகளை நோக்கி அனுப்புகின்ற ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள் இதனால் சிறிய பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் தொகை குறைந்துகொண்டே வருகி;ன்றது. சமுதாயம் இன்று இருக்கின்ற நிலையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளை பெரிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்காக வெகு தொலைவிற்கு அனுப்பிவிட்டு பிள்ளைகள் திரும்பி வரும்வரையில் நீங்கள் பயந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது ஒரு விடயமாகும். மற்றையது உங்கள் சொந்த ஊர்ப் பாடசாலைகளினுடைய வளர்ச்சியினையும் அது தடுக்கின்றது. ஆகவே இதைவிடுத்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் ஊர்ப் பாடசாலைகளிலேயே கல்வி கற்பிப்பதன்மூலம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி, பாடசாலைகளின் வளர்ச்சி, கிராமத்தின் கல்வி வளர்ச்சி என்பவற்றை உறுதிசெய்து கொள்ள முடியும். இப்போது கிராமிய பாடசாலைகளில் இருக்கின்ற அதிபர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பிள்ளைகளின் கல்வியிலே மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்கள். ஆகவே நீங்கள் கூடுமானவரையில் உங்கள் பிள்ளைகளை உங்களுடைய கிராமத்துப் பாடசாலைகளுக்கு அனுப்புவதன்மூலம் உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியையும், இந்தப் பாடசாலைகளின் வளர்ச்சியினையும் உங்கள் கிராமத்தின் கல்வி வளர்ச்சியினையும் உறுதிசெய்யுங்கள் என்று தெரிவித்தார்.

kondavil hindu price giving 17.10 (41)kondavil hindu price giving 17.10 (43)kondavil hindu price giving 17.10 (3)kondavil hindu price giving 17.10 (8)kondavil hindu price giving 17.10 (4)kondavil hindu price giving 17.10 (14)kondavil hindu price giving 17.10 (10)kondavil hindu price giving 17.10 (11.)kondavil hindu price giving 17.10 (2)kondavil hindu price giving 17.10 (12.)kondavil hindu price giving 17.10 (23)kondavil hindu price giving 17.10 (22)kondavil hindu price giving 17.10 (21)kondavil hindu price giving 17.10 (20)kondavil hindu price giving 17.10 (18.)kondavil hindu price giving 17.10 (17.)kondavil hindu price giving 17.10 (39)kondavil hindu price giving 17.10 (37)kondavil hindu price giving 17.10 (34)kondavil hindu price giving 17.10 (32)kondavil hindu price giving 17.10 (24)

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிணையில் செல்ல அனுமதி-

Tamil_News_884116768837தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு, இந்திய உயர் நீதிமன்றம் இன்றுபகல் நிபந்தனையுடனான பிணையை வழங்கியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு பிணை கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே பெங்களுர் மேல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மீள்முறையீடு செய்யப்பட்டது. இதனை இன்று விசாரணை செய்த இந்திய உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் தரப்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ காரணங்களை கருதி, அவரை நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்தமை தொடர்பான வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க பொதுச்செயலளருமான ஜெயலலிதா ஜெயராம், அவரின் தோழியான சசிகலா, சசிகலாவின் உறவினர்களான வி.சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றவாளிகளாக காணப்பட்டதுடன் இவர்கள் நால்வருக்கும் 4 வருட சிறைத்தண்டனை விதித்து பெங்களுர் தனி நீதிமன்ற நீதிபதி ஜோன் மைக்கல் டி குன்ஹா கடந்த மாதம் 27 திகதி தீர்ப்பளித்திருந்தார். ஜெயலலிதாவுடன், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் இன்று பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு நீதிபதி அளித்த தீர்ப்பையும் இந்திய உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வாக்காளர் இடாப்பில் இருந்து பொன்சேகா பெயர் நீக்கம்-

untitledஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை 2014 வாக்காளர் இடாப்பிலிருந்து அகற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல்கள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ இதனை ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கு மற்றும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் 3 வருட சிறைத்தண்டனையும், அதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் அவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இத் தீர்ப்புகளின் காரணமாக சுமார் 3 வருடங்கள் சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார். எனினும் அவரது சிறைத்தண்டனை முடிவடைவதற்கு இரு மாதங்கள் இருக்கையில் அரசியலமைப்பின் 34வது பிரிவின்மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி, பொதுமன்னிப்பின்கீழ் சரத் பொன்சேகாவை விடுதலை செய்திருந்தார். Read more

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலி மேற்கு பிரதேச மாணவர்களுக்கு உதவி-

ilavalai varuththapadaatha vaalipar sankam (8)கடந்த 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய வலி மேற்கு பிரதேசத்திகு விஜயம் மேற்கொண்ட இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க பிரதிநிதிகள் 10 கல்வி பயிலும் மாணவர்கட்கு மிக பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்விக்கு ஒத்துழைப்பை வழங்கினர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறான துடிப்புமிக்க இளைஞர்களின் பணி முக்கியமான ஒன்றாகவே இன்று காணப்படுகின்றது. இளவாலையை சேர்ந்த இவ் இளைஞர்கள் தமது பிரதெசத்திற்கப்பாலும் சேவையாற்ற வேண்டும் என்ற மனப்பாங்கில் எமது பிரதேசத்திற்காற்றிய இவ்; உதவி தொடர்பில் பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன். நடைபெற்று முடிந்த கோர யுத்தத்தின்பின் நாம் எதிர்நோக்கும் சவால்கள் ஏராளமானவை. வெறுமனே வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொட்பில் வாழ்வாதரத்தினை கட்டி வளர்க்க முடியத நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உதவும் என கூறியதோடு இவ்வாறான இளைஞர் சமூகத்தினை பாராhட்டுவதாகவும் உதவி புரிந்தவர்களை பாராட்டுவதாகவும் கூறினார்.

vaalipar sankam (5) vaalipar sankam (6) vaalipar sankam (7) vaalipar sankam (10) vaalipar sankam (11) vaalipar sankam (12)

வலிமேற்கு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர்தின நிகழ்வு-

கடந்த 11.10.2014 சனிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சர மண்டபத்தில் வலி மேற்கு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களின் ஆசிரியர் தின நிகழ்வுகள் வலி மேற்கு பிரதேச முன்பள்ளி இணைப்பாளர் நிரஞ்சனா ஆசிரியை தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான முன்பள்ளி ஆசிரியைகள் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் தலைமை உரையின்போது பிரதேச முன்பள்ளிகள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாகவும் தெரிவித்த தலைவர் அவர்கள், வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் இவ் மண்டபத்தை முன்பள்ளி நிகழ்வுகளுக்கு வழங்கியமை தொடர்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இதேவேளை வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் எமது முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி ஒவ்வொரு ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தி சான்றிதழ் வழங்கியதோடு மட்டும் அல்லாமல் இவ் விழாவை நிகழ்த்துவதற்கு எம்மிடம் போதுமான வசதி காணப்படவில்லை என குறிப்பிட்போது தனது மாதாந்த ஊதியத்தினை வழங்கி எமது விழாவை நடாத்துவதற்கு போதுமான உதவியை மேற்கொண்டுள்ளார். இந்த வகையில் அவரது செயற்பாடுகள் பாராட்டத்தக்கது பொற்றத்தக்கது என குறிப்பிட்டார். தொடர்ந்து இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது. Read more

சித்தன்கேணிபாலர்பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு-

கடந்த 12.10..2014 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். சித்தன்கேணி பாலர் பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வு பாலர் பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர் செல்வி லீலாவதி மாரிமுத்து தலைமையில் இடம்பெற்றது இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரும் இவ் ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். சிறார்களின் மகிழ்வான வரவேற்புடன் இவ் நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து இவ் பாடசாலையின் பழைய மாணவரும் சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் தலைவருமாகிய சபா.வாசுதேவக் குருக்கள் ஆசியுரையினை வழங்கினார். இவ் நிகழ்வில் கலந்துகொண்ட வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளரும் இவ் ஆரம்ப பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று எமது சமுதாயத்தில் முன் பள்ளிகள் காத்திரமான பங்கை வகிக்கின்றது. வளரும் சிறார்களை உரிய முறையில் வளர்த்தெடுக்கவேண்டியது மிக முக்கிய கடமையாக காணப்படுகின்றது. இந்த வகையில் இவ் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் எமது முன்பள்ளிகள் மிக முக்கிய பங்கினை வகித்து வருகின்றன. இன்றைய இவ் மழலைகளே நாளைய எமது எதிர்காலத்தினை தீர்மானிக்கும் தலைமுறைகள் ஆவர். அம்மா என்ற வாhத்தை எழுத்தில் எழுதக் கற்றுக் கொள்வது இவ் இடத்திலேயே ஆகும். இந்த வகையில் இவ் முன்பள்ளி பழைய மாணவி என்ற வகையில் மகிழ்வடைகின்றேன் Read more