இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலி மேற்கு பிரதேச மாணவர்களுக்கு உதவி-
கடந்த 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய வலி மேற்கு பிரதேசத்திகு விஜயம் மேற்கொண்ட இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க பிரதிநிதிகள் 10 கல்வி பயிலும் மாணவர்கட்கு மிக பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி அவர்களது கல்விக்கு ஒத்துழைப்பை வழங்கினர். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில், இவ்வாறான துடிப்புமிக்க இளைஞர்களின் பணி முக்கியமான ஒன்றாகவே இன்று காணப்படுகின்றது. இளவாலையை சேர்ந்த இவ் இளைஞர்கள் தமது பிரதெசத்திற்கப்பாலும் சேவையாற்ற வேண்டும் என்ற மனப்பாங்கில் எமது பிரதேசத்திற்காற்றிய இவ்; உதவி தொடர்பில் பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன். நடைபெற்று முடிந்த கோர யுத்தத்தின்பின் நாம் எதிர்நோக்கும் சவால்கள் ஏராளமானவை. வெறுமனே வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொட்பில் வாழ்வாதரத்தினை கட்டி வளர்க்க முடியத நிலையில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உதவும் என கூறியதோடு இவ்வாறான இளைஞர் சமூகத்தினை பாராhட்டுவதாகவும் உதவி புரிந்தவர்களை பாராட்டுவதாகவும் கூறினார்.