Header image alt text

மாதகல் தேவாலய மாலைநேர பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்-

untitledயாழ்ப்பாணம், மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் இன்று மாலைநேரப் பள்ளிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த மாலைநேரப் பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியாக வடக்கு மாகாண சபையின் பிரமாண அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் (1,00,000) கொடுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்லாது நலன் விரும்பிகளும், இதற்கான மிகுப்பணத்தை கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். தேவாலய பங்குத்தந்தை அருட்பணி கனீஸியஸ்ராஜ் அடிகளார் இங்கு உரையாற்றுகையில், மாலைநேரப் பள்ளிக்காக உதவி வழங்கியமைக்காகவும், உதவி வழங்குவதாக தெரிவித்திருப்போர்க்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறியதுடன், வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நலன்விரும்பிகளும் இந்த கட்டிட வேலைகளுக்காக தம்மால் இயன்ற உதவிகளை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இந்த வைபவத்தின்போது தேவாலய பங்குத்தந்தை அருட்பணி கனீஸியஸ்ராஜ் அடிகளாரும், அன்புக் கன்னியர் மடத்தின் சார்பில் கலந்துகொண்டிருந்த அருட்சகோதரி லெற்ரீஷியா, அருட்சகோதரி சகுந்தலா ஆகியோரும் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுமாக மாலைநேரப் பள்ளிக்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்கள். மேற்படி மாலைநேர பள்ளியில் அப் பகுதியைச் சூழ இருக்கக்கூடிய வறிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

mathakal st thomas church 28.10 (7)mathakal st thomas church 28.10 (6)mathakal st thomas church 28.10 (5)mathakal st thomas church 28.10 (4)mathakal st thomas church 28.10 (3)mathakal st thomas church 28.10 (2)mathakal st thomas church 28.10 (1)

நிறைந்த எதிர்பார்ப்புள்ள தமிழ் மக்களும் கூட்டமைப்பின் கருத்தியல் மோதல்களும்-கபில்- 

thamil thesiya koottamaippu indiaஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு அவ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் நியாயத்தை பெற்றுக்கொடுத்து அவ்வினத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் உரம் சேரப்பது உலக வரலாற்றில் நாம் கண்ட உண்மைகள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்களுக்காக மாட்டின் லூதர் கிங் என்ற மனிதர் வழியிட்டமைபோன்ற உன்னத உதாரணங்களை கண்ணூடாக கண்ட சமூகமாக இன்று தமிழினமும் உள்ளது.  இவ்வாறான நிலையிலேயே ஒடுக்கபபட்ட அல்லது பெரும்பான்மை இனத்தால் நசுக்கப்பட்ட ஒரு தேசிய இனமாக நிலைபெறும் தமிழினமும் 60 வருட காலத்தில் சாதித்தவை எது என்ற கேள்விகளுக்கு அப்பால் அவ் இனத்தின நிலையை உலகிற்கு அறியத்செய்த பெருமை நிறைவேறியிருப்பது யதார்த்தம். இந் நிலையிலேயே நிர்க்கதியான தமிழனத்தின் இருப்புக்கு மீட்பராக தமிழ் மக்கள் கருதிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற கருவி இன்று உள்ளக கருத்தியல் மோதலில் சிக்கியிருப்பது பெரும் துர்ப்பாக்கிய தருணமாகவேயுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசன செயற்பாட்டின் ஊடாக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு பல்வேறான சிக்கல் நிறைந்த பாதைகளை கடந்து இன்று ஆக்கபூர்வமான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டிய தருணத்தில் சிக்கல் நிறைந்த பாதையை மீள தெரிவு செய்து விடுமா என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் கேள்விமேல் கேள்வியாக உருப்பெற்று வருகின்றது. Read more

யாழ் – கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில்களை இணைக்க நடவடிக்கை-

railயாழ் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளுக்கு, மேலதிக ரயில்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளில் ஏற்பட்டுள்ள ஆசனத் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. ரயில் போக்குவரத்தில் ஈடுபடும் யாழ். தேவி, கடுகதி, குளிரூட்டப்பட்ட கடுகதி, தபால் ரயில் சேவைகள்மூலம் அதிக பயணிகள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைக்கு அதிகமான பயணிகள் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்வதால், ஆசனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கமையவே, மேலதிக ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

யாழில் இளைஞரை காணவில்லையென முறைப்பாடு-

16 வயது இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். குருநகர் தொடர்மாடி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்ரியன் ஜீவன் (வயது 16 ) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 24 ஆம் திகதி காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை. கடந்த 3 தினங்களாக உறவினர்களின் வீடுகளில் தேடி வந்த நிலையில் இளைஞர் எங்கு இருக்கின்றார் என்று தெரியவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண சபை காணி தொடர்பான தீர்மானம் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு-

northern_provincial_council1காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தினை உள்ளடக்கி வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் எழுதிய கடிதம் விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். காணிகள் சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இக்கடிதம் தமது அலுவலகத்தில் கிடைகப்பெற்றுள்ளதாகவும் அதனை கூடுமான விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கவுள்ளதாகவும் ஜானதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

யாழ். சிறையில் இந்திய மீனவர்களின் உண்ணாவிரதம் நிறைவு-

ilankai india meenavar pechchuயாழ். சிறையில் 24 இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தம்மை விடுவிக்க கோரி நேற்றுக்காலை முதல் இந்திய மீனவர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று முற்பகல் சிறைச்சாலைக்கு சென்று மீனவர்களுடன் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. மீனவர்களின் விடுதலை தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினை பெற்றுத்தருவதாக தாம் இந்திய மீனவர்களுக்கு உறுதி வழங்கியதாக துணைத்தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி கூறியுள்ளார்.

இலங்கை திரும்ப விருப்பமில்லை -இலங்கை அகதிகள்-

ilankai thirumpa viruppamillaiஇந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 67 வீதத்தினர் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது டிஐஎஸ்எஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவில் தங்கியுள்ள 520 குடும்பங்களில் 23வீதத்தினர் மாத்திரமே இலங்கைக்கு செல்ல விருப்பம் வெளியிட்டுள்ளனர் இவர்களில் 48.2 வீதமானோர் ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடன் இலங்கை செல்லவே விரும்புகின்றனர். இந்தியாவில் 111 முகாம்களில் 67ஆயிரம் அகதிகள் தங்கியுள்ளனர் மீதமுள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வசிக்கின்றனர்.

தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அலுவலர் காயம்-

உப காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காலி – நெலுவ காவல்நிலையத்தில் பணியாற்றும் பிறிதொரு காவல்துறை அலுவலர் காயமடைந்துள்ளார். காவல்துறையினரின் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை பின்தொடர்ந்து சென்ற காவல்துறை குழுவினர் அதன் சாரதியை கைது செய்தனர் இதன்போது, முச்சக்கரவண்டி சாரதிக்கும், காவல்துறை உப அத்தியட்சகருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உப பரிசோதகரின் உத்தியோகபூர்வ துப்பாக்கி வெடித்ததன் காரணமாக அவருடன் சென்றிருந்த பிறிதொரு அலுவலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அலுவலர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கனடாவில் மூன்று தமிழர்கள் தேர்தலில் வெற்றி-

canada vil moontru tamils vetriகனடாவின் ரொறொன்ரோ நகர தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன், ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல் மற்றும் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின் அடுத்த மேயராக ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றி ரொறொன்ரோ நகர சபையில் இடம்பெற்ற வோட் சகோதரர்களின் கொந்தளிப்பான ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் பலி-

british il ilankai tamil deadபிரித்தானியாவில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 43 வயதான ஜெயரட்னம் கந்தையா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு லண்டனுக்குச் சென்று 14 வருடங்கள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more