Header image alt text

கண்ணீர் அஞ்சலி!

Posted by plotenewseditor on 31 October 2014
Posted in செய்திகள் 

கண்ணீர் அஞ்சலி!

110987

 தாயின்மடியில்  : 03,04,1935     —    இறைவன்அடியில் : 24,10,2014

புளொட் பிரான்ஸ்கிளைப் பொறுப்பாளர் தோழர் யோன்சன் அவர்களின் தாயார் அமரர் திருமதி செல்லத்துரை மரியமகேஸ்வரி அம்மையாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!
தாயையும், தாய் நாட்டையும் பிரிந்து கண்ணீர்மல்கும் தோழனே! உன் உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தோழர்கள் நாமும் துயர் பகிர்ந்து கொள்கின்றோம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி கிழக்கு தச்சன்தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மரியமகேஸ்வரி அவர்கள் 24-10-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். Read more

பதுளை மாவட்டத்தில் இயற்கையனர்த்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரினில் நாமும் பங்கேற்கின்றோம்.

landslid_witness_012வாழ்வனைத்தும் போராடிப் போராடி அடிப்படை வசதிகளற்று வாழும் மலையக மக்கள் வாழ்வில் பேரிடியாகும் பதுளை மாவட்டம் கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு. இவ் அனர்த்தத்தில் உயிரிழந்த நம் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கை யாக்குகின்றோம். உயிரிழந்த எம் உறவுகளின் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டு, அவர்களின் துயருடன் நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்துகொள்ளுகின்றோம்.

imagesCAMSPTJDதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)                                          

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

ஏழு மாவட்டங்களில் தொடரும் மண்சரிவு அபாயம்-

sri_lanka_landslideபதுளை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்றிரவு 7மணிவரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு பணிமனை அறிவித்துள்ளது. இதன்படி பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பதுளை மாவட்டத்தின் எல்லை – வெல்லவாய, ஹப்புத்தளை – பெரகலை, பெரகலை – வெல்லவாய, பதுளை – இஸ்பிரிங்வெளி, பசறை – லுணுகலை, அட்டாம்பிட்டி – வெலிமட, பதுளை – பண்டாரவளை, பதுளை – மகியங்கனை மற்றும் ஹாலிஎல –வெலிமட வீதிகளை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மீரியாபெத்த மண்சரிவு காரணமாக மலையகத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறக்கொடிகளை ஏந்தி தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மூன்றாவது நாளாக மோப்ப நாய்களைக் கொண்டு தொடரும் மீட்பு பணி-

untitledபதுளை, கொஸ்லாந்தை – மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.. இராணுவத்தினர் இரண்டு பிரிவாக பெக்கோ இயந்திரங்களை கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசேட தேடுதலும் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரேன் பெனாண்டோ, ஐதேக தேசிய அமைப்பாளர் தயா கமகே உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன், உரையாடி, அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

மண் சரிவில் 144 பேர் மாயம், இடம்பெயர்ந்தவர்கள் விபரம்-

malyakamஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய புதுப்பிக்கப்பட்ட தகவலின்படி மீரியாபெத்த மண்சரிவு காரணமாக 144 பேர் இன்னும் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 410 குடும்பங்களைச் சேர்ந்த 1,413பேர் இவ் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு கொஸ்லாந்தை சிறிகணேசா தமிழ் வித்தியாலயத்திலும், பூனாகலை தமிழ் வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர எல்லை, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு ஏற்படுமென்ற அச்சம் காரணமாக 76 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மீரியாபெத்தை அனர்த்தத்தை தொடர்ந்து, பூனாகலை எல்.எல்.ஜீ. தோட்டப் பிரிவில் உள்ள மக்கள் அப்பிரிவில் ஏற்பட்ட நில வெடிப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள அதேநேரம், அச்சத்தில் இடம்பெயர்ந்த மற்றொரு பிரிவினர் பூனாகலை ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க….. Read more