Header image alt text

மூளாய் கலைவாணி சனசமூக நிலையத்தில் சிறுவர் தின, ஆசிரியர் தின நிகழ்வுகள்-

moolaiயாழ். மூளாய் கலைவாணி சனசமூக நிலையத்தில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை அன்றுமாலை 3மணியளவில் கலைவாணி கோல்ட் ஸ்டார் சிறுவர் கழகத்தினதும் முன்பள்ளியினதும் சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வுகள் கோல்ட் ஸ்டார் சிறுவர் கழகத் தலைவர் செல்வன் தங்கராஜா நிலக்சன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வன யோசுவா அடிகளார் அவர்களும், கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது வடமாகாண சபை ஒதுக்கீட்டின் கீழ் மேற்படி சனசமூக நிலையத்தில் நடைபெற்று வரும் முன்பள்ளிக்கு பாண்ட் வாத்தியக் கருவிகளை வழங்கியிருந்தார். இவ் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றும்போது இன்றைய இச் சிறார்களின் கைகளில் தான் நாளைய எமது சந்ததியினரின் எதிர்காலம தங்கியுள்ளது. இச் சிறார்களை உரிய முறையில் வளர்த்தெடுக்க வேண்டிய நிலை எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமை ஆகும். இப் பகுதியில் உள்ள சிறார்கள் புலமைப்பரீட்சையில் உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களை மனதார பாராட்டுகின்றேன் வாழ்த்துகின்றேன் இவர்கள் எதிர்காலத்தில் உயர் நிலை அடைய வாழ்த்துகின்றேன். இதே வேளை மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அதிக முக்கியத்துவம் வகிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டதோடு எதிர்காலத்திலும் இவ் மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பில் என்னால் ,இயன்ற உதவிகளை வழங்க தயாராக உள்ளேன் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதனைத் தொடாந்து மாணவர்களது கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன.

moolai... moolai..0 moolai moolai01 moolai03 moolai04

வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் பெரியபுலோ மக்களுடன் சந்திப்பு-

periyapuloயாழ். சுழிபுரம் பெரியபுலோ பகுதியில் கடந்த 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணியளவில் பிரதேச பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. திரு.குமார்(சின்னக்குமார்) அவர்களின் தலைமையில் பெரியபுலோ அண்ணா சனசமூக முன்றலில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின்போது புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் அப்பகுதியில் தற்போது நடைபெற்றுவரும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பாhர்வையிட்டுள்ளார்.

வட்டுக்கேட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு-

kalvikku kaikoduppom02 kalvikku kaikoduppom03யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் ஊடாக புலம்பெயர் உறவுகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விக்கு கைகொடுப்போம் நிகழ்சித்திட்டத்தின் கீழ் ஜேர்மனி வாழ் செல்லத்துரை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது. இவ் நிகழ்விற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டுப் பணிப்பாளர் திரு.பி.எல்.மோகணக்குமார் ஆசிரியர் தலைமை வகித்திருந்தார். இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கினார்கள்.

வட்டுக்கோட்டை கொத்தன்துறை மயான அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு-

koththanthurai mayaanam01koththanthurai mayaanam யாழ். வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், மற்றும் புளொட் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோர் 30.10.2014 அன்று வட்டுக்கோட்டை கொத்தன்துறை மயான அபிவிருத்தி தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளனர். மேற்படி மயானமானது வட்டுக்கோட்டை, அராலி, சங்கரத்தை, பொண்ணாலை, மூளாய் மற்றும் சித்தங்கேணி பகுதி மக்களால் பயன்படுத்தப்படுவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதே வேளை இவ் மயானம் மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் இருந்தமையும் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகும். இவ் நிலைமைககள் தொடர்பில் வட்டுக்கோட்டை கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறியத் தந்ததனைத் தொடர்ந்து கௌரவ வடமாகாண சபை முதலமைச்சர் அவர்கள் தமது ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 7 லட்சமும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா. ஓரு லட்சமும் வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அவர்களது மாகாணசபை நிதியிலிருந்து ரூபா 50,000மும் ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் வெகு விரைவில் இதன் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.

அராலி கிழக்கு ஐயனார் கோவில் புனரமைப்பு குறித்து மாகாணசபை உறுப்பினர் ஆராய்வு-

arali east04யாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட அராலி கிழக்கு பகுதிக்கு கடந்த 30.10.2014 வியாழக்கிழமை அன்று விஜயம் மேற்கொண்ட புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், அராலி கிழக்கு ஐயனார் கோவிலுக்கு சென்று நடைபெற்றுவரும் புனருத்தான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ. சு.ஐயலிங்கம் மற்றும் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

arali eastarali east05arali east06arali east01

மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்-

anartha pathipputhaviவட மாகாண சபை அனர்த்;தப் பாதிப்புக்கு உதவுமாறு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இன்று 03.11.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பதுளை கொஸ்லாந்தை மீறியபெத்த மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 1500 பாதிக்கப்பட் மக்களுக்கான உடுபுடவைகள் வழங்கும் நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபை உறுப்பினர்களான திரு ந.பி.,ராஜ்குமார், திரு. ச.சபாநாயகம் மற்றும் உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர், இவ் நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் பொருட்டு மாவட்ட இளைஞர் கழகத்தின் சம்மேளன உப தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. ச.லக்சன் அவர்களிடம் உடுபுடவைகளை வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் ஒப்படைத்தார். மேற்படி உடுபுடவைகள் நாளை பாதிக்கப்பட்ட பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொஸ்லாந்தை மண் சரிவு அவலத்திற்கான இரங்கல் கூட்டம்-

koslanda irankal koottam (1) koslanda irankal koottam (2) koslanda irankal koottam (5)கொஸ்லாந்தை, மீரியபெத்த மண் சரிவு அவலத்திற்கான இரங்கல் கூட்டம் நேற்று 02.11.2004 ஞாயிற்றுக்கிழமை மாலை மருதானை பூக்கர் மண்டபத்தில் மக்களுக்கான கலைஞர் அமைப்பின் சார்பில் கலைஞர் மொஹமெட் இர்பான் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்த இரங்கல் கூட்டத்தில் புரவலர் கௌஷல்யா அம்மையார், கௌரவ ஏ.எச்.எம் அஸ்வர் பா உ, பேராசிரியர் சந்திரசேகரன், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனீஸ், பிரதி அமைச்சர் பிரபா கணேசன், பிரதி அமைச்சரின் செயலாளர் எச்.எச். விக்ரமசிங்க்ஹா, முஸ்லீம் பேரவை தலைவர் ஏ.என்.எம் அமீன், ஜ.தே.மு தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் ஆகியோர், ஆத்ம ஷாந்திக்கு மெழுகுவர்த்தி ஏற்றியதுடன், இரங்கல் உரையாற்றினர்.

கொழும்பு மெரைன் ட்ரைவ் வீதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்-

puttalam colombo roadகொழும்பு மரைன் ட்ரைவ் வீதியில் இன்றுமுதல் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த விதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அலுவலக நாட்களில் காலை 7மணி தொடக்கம் 9 மணி வரை மரைன் ட்ரைவ் வீதியின் வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்தியிலிருந்து கின்றோஸ் பிளேஸ் சந்திவரை கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்களை மாத்திரமே செலுத்த முடியும். பிற்பகல் 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை பம்பலப்பிட்டி கின்றோஸ் பிளேஸ் சந்தியிலிருந்து வெள்ளவத்தை இராமகிருஸ்ணா சந்திவரை தெஹிவளை பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவிள்ளது. இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை நாட்களில் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீறியபெத்தை மீட்பு பணியில் இன்று இரு சடலங்கள் மீட்பு-

kkoslantha_bodyபதுளை மாவட்டம் கொஸ்லாந்தை, மீறியபெத்தை தோட்ட மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும், சேறு கலந்திருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்படி மண்ணுக்குள் புதையுண்ட 7பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் எக்காரணம் கொண்டும் இடைநிறுத்தப்பட மாட்டாதென பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.

பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் சிக்கல்-

எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாறை, பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும், எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் இடாப்பு இன்று முதல் மக்கள் பார்வைக்கு-

தேர்தல்கள் ஆணையாளரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இந்த வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் காட்சிபடுத்தப்படவுள்ளது. இதற்கமைய, இந்த வாக்காளர் இடாப்பை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பார்வையிட முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் வாக்களிப்பதற்கான தகைமை 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு மாத்திரமே உள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க……… Read more

தற்கொலைத் தாக்குதலில் 55 பேர் மரணம் – பாகிஸ்தானில்

PakistanWagahBBczjQ8பாகிஸ்தானில் வாகா எல்லையில் நேற்று நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் 55பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள வாகா எல்லையையொட்டி பாகிஸ்தானுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. அணிவகுப்புடன் கூடிய அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து புறப்பட தயார் ஆயினர். அப்போது அங்கே எதிர்பாராத விதமாக வந்த Read more

இந்தியா – சீனா – இலங்கை

Posted by plotenewseditor on 3 November 2014
Posted in செய்திகள் 

இந்தியா – சீனா – இலங்கை

untitledஇந்தியாவின் காஷ்மீர் மற்றும் இமாச்சலபிரதேச பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதுவரை தரைவழியாக நடந்து வந்த ஊடுருவல் சம்பவங்கள் தற்போது நீர் வழியாகவும் நடக்க தொடங்கியுள்ளது. அதன்படி எல்லையில் அமைந்துள்ள பாங்காங் ஏரி வழியாக சீன ராணுவம் சமீபத்தில் ஊடுருவிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் லடாக் அருகே இமயமலை பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில், 45 கி.மீ. பகுதி இந்தியாவிலும், மீதமுள்ள 90 கி.மீ. பகுதி திபெத், சீன பகுதிகளிலும் உள்ளது. இந்த ஏரி வழியாக கடந்த மாதம் 22-ந் தேதி சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் திடீரென ஊடுருவியது. உடனே இதை கண்டுபிடித்த இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு வீரர்கள், Read more