வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் முக்கிய கலந்துரையாடல்-

imagesCAMSPTJDபுளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும். முன்னைநாள் வவனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் நேற்று (06.11.2014) வியாழக்கிழமை கோயில்குளத்தில் அமைந்துள்ள தனது வடமாகாண சபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது 2015ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடக ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவது போன்று தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் போராட்ட கால வளர்ச்சிக்காக உயிர்நீத்த கழகத் தோழர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்நிதியின் மூலம் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகளையும், கழக வளர்ச்சிக்காக பாடுபட்டு தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ள ஏனைய கழகத் தோழர்களுக்கு தனது மாகாணசபை நிதியில் முன்னிலைப்படுத்தி தன்னால் இயன்ற உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது கழக நலன் விரும்பிகள் மற்றும் பொதுஅமைப்புக்களுடாகவும் உதவிகளை நேரடியாவே அல்லது தனதூடாகவோ வழங்குவதாகவும் அவர் கூறியதுடன், எம் இனத்தின் விடுதலைக்கு தன் வாழ்வை தியாகம் செய்து நிர்க்கதியாக நிற்கின்ற ஏனைய இயக்க, குடும்ப உறுப்பினர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

vadamaakaana sabai uruppinar (1) vadamaakaana sabai uruppinar (2) vadamaakaana sabai uruppinar (3)