எதிரணி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன

maithripala_sirisenaஎதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி! நான் ஜனாதிபதியானால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவேன். 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்றும் அவர் கூறினார்.
*நாட்டின் அதிகாரம், நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில்.                                 *சட்டம் சீர்குழைந்துள்ளது.
*ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது.

*யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது.
*அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்.
*2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது.
*2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது.
*1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்.
*1974 – 1994 வரை சிறீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார்.
*சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது.
*வரலாறு எனக்கு தந்த பரிசு, ரணில், சந்திரிகா ஆகியோருக்கு நன்றிகள்.
*சிறீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த வேண்டும்.
*போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் சந்தித்தேன்.
*நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது, இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை.
*பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்.
*சகலதையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன்.
*நாட்டின் நிர்வாகம்
*அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
*அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும்.
*இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு.
*சுதந்திர தேர்தல் உரிமையை உருவாக்குவேன்.
*இது கூட்டமைப்பின் ஒரு முன்னணி.

மைத்திரிபால, ராஜித்த, துமிந்த மற்றும் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன பதவிநீக்கம்-

மைத்திரிபால சிறிசேன, ராஜித்த சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க மற்றும் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்தும், பொறுப்புக்களில் இருந்தும் அவர்களை நீக்குவதற்கு, கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் 8ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.