Header image alt text

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட டயகம மக்களுக்கு உதவி, மாணவர்களுக்கு புளொட் ஜேர்மன் கிளை உதவி-(படங்கள் இணைப்பு)

dayagama people  (15)நுவரெலியா தலவாக்கலை டயகம பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் வீடுகளை இழந்து அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்காக வவுனியா வர்த்தக சங்கத்தினால் சேகரித்து வழங்கப்பட்ட உடுபுடவைகள், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு தலா 1500 ரூபாய் வீதம் 22 குடும்பங்களுக்கும் 33,000 ஆயிரம் ரூபாய் நிதியும் அந்த மக்களுக்கு உதவும் வகையில் நேற்றையதினம் (22.11.2014) புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் தலவாக்கலை சிறீ கதிரேசன் ஆலய மண்டபத்தில் வைத்து அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் திரு. பிரசாத் மற்றும் திரு. பாலமுரளி, திரு. திலகேஸ்வரன், திரு. விஜயகுமார், திரு. கெங்காதரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Read more

வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளரின் மறைவிற்கு புளொட் தலைவர் இரங்கல்-

sivakumaranயாழ். வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளராக இருந்த நண்பர் திரு. சண்முகம் சிவகுமார் அவர்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (23.11.2014) காலமானார். நண்பர் சிவகுமார் அவர்கள் எனது தந்தையின் காலம் தொடக்கமே அரசியலில் மிகத் தீவிரமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியிலும் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காகவும் நன்றாக உழைத்தவர். இவர் எனது தந்தையுடன் தனிப்பட்ட நட்புடன் பழகி வந்தவர்; என்பதுடன், என்னுடனும் மிக நீண்ட காலமாக நட்பாகப் பழகியிருக்கின்றார். அவருக்கு Read more

வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளரின் மறைவிற்கு இரங்கல்-

sivakumaranவலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் (மானிப்பாய்) தவிசாளராக இருந்த திரு. சிவகுமாரன் அவர்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (23.11.2014) இறைபதம் எய்தினார்.

தமிழ் தேசத்தினதும், தமிழ் தேசியத்தினதும் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் அச்சமின்றி உழைத்த பெருந்தகையார் கௌரவ தவிசாளர் திரு. சிவகுமாரன் அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். Read more

கொஸ்லாந்த மக்களுடன் புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் சந்திப்பு-          (படங்கள் இணைப்பு)

IMG_0166வவுனியா வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கொஸ்லாந்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நேற்று நேரடியாக கையளிக்கச் சென்றிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் Read more

பஸ் விபத்து இடம்பெற்ற பிரதேசத்திற்கு புளொட் தலைவர் விரைவு-(படங்கள் இணைப்பு)

IMG_36கேகாலை, மாவனல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்திருந்தனர். மாவனல்லை பஹல கடுகண்ணாவை பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததினாலேயே இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. இவ் விபத்தில் பெண் ஒருவர் உட்பட நால்வர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பஸ் வண்டி வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கையிலேயே இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. Read more

மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சர்கள் பாதுகாப்பு நீக்கம்-

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்றையதினம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகி இருந்தார். இதனையடுத்தே அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறியுள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐhதிக ஹெல உறுமயவும் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளது. அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஐhதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்-

பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்h சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தப் பதவிகளை வகித்து வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் வகித்து வந்த சுகாதார அமைச்சுப் பதவி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்து வந்த பதவிகள் என்பனவற்றில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு – ஐ.தே.கவைச் சேர்ந்த ஒருவர் காயம்-

களுத்துறை மாவட்டம் பேருவளை மக்கோனா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த ஐ.தே.கட்சியைச் சேர்ந்தவர் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை குருநாகல் மாவத்தகம பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வாகனங்கள் சில சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பதுளை, இரத்தினபுரி மண்சரிவு அபாயம், 100ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு-

பதுளை, லுணுகல, சோலன்ஸ் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 27 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 117பேர் இவ்வாறு இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக லுணுகல பிரதேச செயலர் டீ.எம்.எல்.எச் திசாநாயக்க கூறியுள்ளார். வெளியேற்றப்பட்ட அனைவரும் சோலன்ஸ் மேற்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, நேற்றுமாலை தொடக்கம் சோலன்ஸ் தோட்ட மக்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தெபலகலவத்தை பகுதியில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார். Read more

மனோ வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வு-

IMG_0020 - Copyமனோ வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் அங்கோடை வைத்தியசாலையின் தமிழ் மக்கள் சிகிச்சைபெறும் பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் அமைப்பின் நோர்வே கிளை அமைப்பாளர் சிவராசா இராஜசிங்கம் தலைமையிலான குழுவினருக்கும் அங்கோடை வைத்தியசாலை அதிகாரிகளுள் ஒருவரான டொக்டர் ஹரிச்சந்திர கம்பீர மற்றும் தாதியர் குழுவினருக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் (19.11.2014) இடம்பெற்றது. இதன்போது அங்கு சிகிச்சைபெறுவோரின் அன்றாட பிரச்சினைகள், அவர்களின் வியாதிகள், மொழிப்பிரச்சினைகள், அவர்களுக்கான உதவிகள், அவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைகள், சிகிச்சை பெற்று வீடு திரும்பி அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியபின் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களது உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் பொருளாதார பிரச்சினைகள், போதைக்கு அடிமையானோரின் நிலைமைகள் என்பன தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் இவர்களுக்கான பொருளாதார சிக்கல்களுக்கு கிராம மட்டத்தினூடாக நடைமுறைக்கு சாத்தியமான வகையில் எவ்வாறு உதவவது, வைத்தியர்கள் தாமே முன்வந்து நோயாளர்களது இருப்பிடங்களுக்கு சென்று சிகிச்சையளித்தலுக்கு எவ்வாறு உதவுதல் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை ஆற்றுப்படுத்தல், உறவினர்களுக்கு நோயின் தன்மை தொடர்பில் தெளிவுபடுத்தல் கிராம மட்டத்தில் அமைப்புகளின் ஊடாக அவர்களுக்கு உதவுவது தொடர்பிலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

angoda Hospital (6)angoda Hospital (4)angoda Hospital (2)angoda Hospital (1)

எதிரணி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன

maithripala_sirisenaஎதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி! நான் ஜனாதிபதியானால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவேன். 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்றும் அவர் கூறினார்.
*நாட்டின் அதிகாரம், நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில்.                                 *சட்டம் சீர்குழைந்துள்ளது.
*ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது.

*யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது.
*அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்.
*2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது.
*2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது.
*1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்.
*1974 – 1994 வரை சிறீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார்.
*சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது.
*வரலாறு எனக்கு தந்த பரிசு, ரணில், சந்திரிகா ஆகியோருக்கு நன்றிகள்.
*சிறீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த வேண்டும்.
*போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் சந்தித்தேன்.
*நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது, இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை.
*பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்.
*சகலதையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன்.
*நாட்டின் நிர்வாகம்
*அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
*அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும்.
*இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு.
*சுதந்திர தேர்தல் உரிமையை உருவாக்குவேன்.
*இது கூட்டமைப்பின் ஒரு முன்னணி.

மைத்திரிபால, ராஜித்த, துமிந்த மற்றும் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன பதவிநீக்கம்-

மைத்திரிபால சிறிசேன, ராஜித்த சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க மற்றும் எம்.கே.டி.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்தும், பொறுப்புக்களில் இருந்தும் அவர்களை நீக்குவதற்கு, கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார் இதேவேளை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் 8ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி-அமைச்சர் மைத்திரிபால சிறிசேன-

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று பிற்பகல் கொழும்பு நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டபோதே இவ்வாறு கூறியள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனநாயக மக்கள் கட்சியின் அர்ஜூன ரணதுங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது. நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 100 நாட்களுக்குள் இல்லாது செய்வதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து ஊடகவியலாலர்களும், ஊடக நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளபப்போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் 17வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, 18வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தை இரத்து செய்யப்போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை-சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க-

மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மட்டுமல்ல பல காரணங்கள் உண்டு அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, அது இங்கு முக்கியமில்லை. கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்களுக்கு இடமாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுகின்றன. பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர். ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன். எந்த பதவியும் தேலையில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

பதவிகளை துறந்து மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க முன்வந்துள்ளோம்-ராஜித்த-

நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில் கொண்டு நான் எனது பதவிகளை துறந்து, மஹிந்தவின் இராஜாங்கத்தை ஒழிக்க நாம் தற்போது முன்வந்துள்ளோம் என ராஜித்த சேனரத்ன தெரிவித்துள்ளார். புதிய நகரமண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனது எதிரிகளுக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைக்கமாட்டேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கும் எனது குடும்பத்திற்கும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நான் நாட்டிற்காக செயலாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதனைக் கருத்தில்கொண்டு நான் எனது பதவிகளை துறந்துள்ளளேன். இந்த தீர்மானத்திற்காக சிலர் எங்கள்மீது சேறுபூச நினைப்பார்கள். நான் அதனையெல்லாம் பொருட்படுத்த மாட்டேன். நான் எனது நாட்டு மக்களுக்காக வாழத் தயாராகவுள்ளளேன். நான் இதன்போது ஊடகவியலாளர்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகின்றேன். நீங்கள் பக்கச்சார்பற்ற நிலையில் நேர்மையாக உங்களுடைய சேவையை செய்ய வேண்டும். அப்போது தான் நீங்களும் வரலாற்றி;ல் இடம்பிடிப்பீர்கள். மக்களுக்கு உண்மையான செய்திகளை நீங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் அடக்கம்;-மைத்திரிபால சிறிசேன-

நாட்டின் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டில் சட்டம் சீர்குழைந்துள்ளது. யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் செல்கின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும் 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது. 1974 – 1994 வரை சிறீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார் போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் தாம் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன். சகல துறைகளையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன். நாட்டில் தற்போது நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது. அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.அத்துடன் அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியசரசின் 7ஆவது ஜனாதிபதித் தேர்தல்

3(226)இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியசரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியானது. பரப்பரப்பாக பேசப்பட்ட ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று பிற்பகலில் இருந்த சுபநேரமான 1.18க்கு கைச்சாத்திட்டார்.
அலரிமாளிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனத்தில் கைச்சாத்திடும்போது, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரி காமினி செனரத், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர மற்றும் ஜனாதிபதியின் புதல்வர்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ ஆகியோரும் உடனிருந்தனர்.
மற்றொரு பதவிக் காலத்துக்காக  ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்ற பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டதையடுத்து அந்த பிரகடனம் தொலைநகல் ஊடாக தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி கைச்சாத்திடப்பட்ட செய்தி பரவியதையடுத்து நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் மக்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதியை இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவிருப்பதாக தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
1988ஆம் ஆண்டு 16ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் திருத்த சட்டத்தின் பிரகாரம் வர்த்தமானி வெளியான நாளிலிருந்து வேட்புமனுத்தாக்கல் 16 அல்லது 21 நாட்களுக்கு கோரப்படும் என்பதுடன் தேர்தல் 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்கு உட்பட்ட நாளொன்றில் நடத்தப்படவேண்டும் என்று ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது