கௌரவ வட மாகாணசபை உறுப்பினர் (புளொட்) ஜி.ரி.லிங்கநாதனால் ஆச்சிபுரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து 07 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு ரூபா 35000.00 பெறுமதியான கூரைத்தகடுகள் அவற்றுக்கான ஆணிகள் ஆகியவற்றை வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் பிரமான அடிப்படையிலான 2014 நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இவ் உதவியை நல்கிய வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கூறுகையில் உங்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு இத்தகரங்கள் வழங்கப்படகின்றன, இதனை சரியான முறையில் பாவிப்பதன் மூலம் நீண்டகாலம் பயன்படுத்ததக்கதாக இருக்கும் என்பதோடு தொடர்ந்தும் இனம் காணப்பட்ட மக்களுக்கு 2015 ஆண்டு நிதியில் இவ்வாறான உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சு. ஜெகதீஸ்வரன்(சிவம்) அவர்களும் கலந்துகொண்டார்.