unnamedunnamed1வவுனியா மதீனாநகரில் இன்றுகாலை (16.12.2014) மக்கள் சந்திப்பு ஒன்று அக்கிராம சங்கத் தலைவரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினர்களான முன்னாள் வவுனியா நகரபிதாவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினரான திரு. சு.ஜெகதீஸ்வரன் (சிவம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் தனதுரையில், இப்பகுதி மக்களின் குறைகளை நான் நன்கறிவேன் இங்குள்ள மக்கள் இன மதங்களுக்கு அப்பால் சகோதரர்களாக வாழ்ந்து வருவதை நீண்ட காலமாக அவதானித்துள்ளேன் இம் மக்களுக்கு சேவை செய்வது எனது கடமையாகும். இம் மக்களுக்கு எனது வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான 2015ஆம் ஆண்டு நிதியில் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான நிதியினை மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்குவேன் எனத் தெரிவித்தார் தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் மக்களின் குடும்ப நிலையினை தனித்தனியே கேட்டறிந்தார்