(படங்கள் இணைப்பு)
கடந்த 22.12.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களின் அழைப்பின் பெயரில் வலி மேற்கு பிரதேசத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் மூளாய் மனிதவள சனசமூக நிலையத்திற்கு விஜயம் செயதார். இதன்போது அப்பகுதியில் சனசமூக நிலையத்தினை அமைக்கும் பணிக்காக பன்முகப்படுத்ப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரூபா 100000ஐ ஒதுக்கீடு செய்த நிலையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாடாளுமனற உறுப்பினரும் வலி மேறகு தவிசாளரும் இணைந்து வேலைத்திட்டத்தினை சனசமூக நிலையத்தவரின் கோரிக்கைக்கு இணங்க ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் கடந்த 22.12.2014 அன்று வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளரின் அழைப்பின் பெயரில் அங்கு விஜயம் மேற்கொண்ட யாழ் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் சுழிபுரம் பாண்டுவட்டை முரளிகிருஸ்னா ஞாபகார்த்த சனசமூக நிலையத்திற்கு பொதுமக்கள் பண்பாட்டிற்குரிய தகரப்பந்தல் அமைப்பதற்காக ரூபா. 75000ஐ பன்முகப்படுத்தப்படட நிதி ஒதுக்கீட்டின் ஊடக வழங்கிவைத்தார். இதேவேளை 22.12.2014 அன்று வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளரின் அழைப்பின் பெயரில் நாhளுமன்ற உறுப்பினர் கௌரவ .ஈ.சரவணபவன் அவர்கள் வட்டு வடக்கு சித்தன்கேணியில் உள்ள இளைய நட்சத்திர விளையாட்டுக் கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இவ் விளையாடடுக் கழகத்தின் அரங்கம் அமைப்பதற்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரங்க வேலைகள் நடைபெற்று வருகிறது