வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புளொட் அமைப்பால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டது வவுனியாவில்-படங்கள் இணைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, வவுனியா மாவட்ட புளொட் இணைப்பாளர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் வழிகாட்டலில் கோவில்குளம் இளைஞர் கழகமும் இணைந்து இன்றைய தினம் சமளங்குளம் அ.த.க.பாடசாலை, முருகனூர் பாடசாலை, கோமரசங்குளம் பாடசாலை, எல்லப்பர் மருதங்குளம் சனசமூக நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 500 க்கு மேற்ப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டன.
இவ் சமூகப் பணியில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முல்லைத்தீவு இணைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்), புளொட் முக்கியஸ்தர்களான தோழர் யோகன், தோழர் முத்தையா கண்ணதாசன், தோழர் தவம், தோழர் வசந்தன், தோழர் ஜெயந்தன், தோழர் கணேஷ், தோழர் குட்டி, தோழர் சவூதி கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காண்டீபன், கேசவன், சுகந்தன், நிகேதன், சஞ்சீ ஆகியோர் கலந்து இன்றையதினம் சமைத்து மக்களுக்கான உணவுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.