வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட – கிழக்கு உறவுகளுக்கு அவசர உதவி கோருகிறது வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்.

IMG_5241இலங்கையில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தின் எதிரொலியால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு உறவுகளுக்கு புலம்பெயர் கருணை உள்ளங்கள் உள்ளூரில் இருக்கும் கொடையாளிகளின் உதவிகளை வவுனியா கோயில்குளம் இளைஞர் கழகத்தின் இடர் முகாமத்துவப்பிரிவு நாடியுள்ளது.
திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள், கோயில்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இம்மக்களுக்கான அடிப்படை உதவிகளான பொருட்கள், உடைகள், பாய்கள், போர்வைகள்,  சமையல் பாத்திரங்கள், உணவுப்பொருட்கள் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்கள், பால்மா, நுளம்பு வலை, எனும் அவசியப் பொருட்கள் தேவையாக உள்ளதுடன் அவர்கள் மீண்டும் தமது இருப்பிடம் செல்லும் போது அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் போன்றவை தேவையாக உள்ளது.
எனவே மனிதநேய உணர்வுமிக்க எமது உறவுகள் உங்களால் முடிந்த நிதி அல்லது பொருள் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பொருள் உதவிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கலாம் அல்லது கழகத்தின் அலுவலகமான வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம், இல.58, 5 ம் ஒழுங்கை, கோவில் புதுக்குளம், வவுனியா என்ற முகவரிக்கு சென்று கையளிக்கலாம்.
தொடர்புகளுக்கு – ஊடகப்பிரிவு, வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்.
0766644059, 0757729544, 0770733719,  0775058672