புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம்-

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாட்டின் அன்பான மக்களின் பொறுப்புகள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும், அதனை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவேன் எனவும் ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். மேலும் மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இதன்போது ரணில் விக்ரமசிங்கவும் புதிய பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.