புளொட் ஜெர்மன் கிளைத் தோழர்களால் புகைப்படக் கருவி அன்பளிப்பு-

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஜெர்மன் கிளைத் தோழர்களினால் கழகத்தின் ஊடகப் பிரிவுக்கு புகைப்படக் கருவியொன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி புகைப்படக்கருவி கடந்த 13.01.2015 செவ்வாய்க்கிழமை அன்று புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் கொழும்பில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.