ஆனைக்கோட்டையில் தமிழ் பசங்க திரைப்படம் வெளியீடு-

tmailயாழ். வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சங்கானைப் பிரதேச இளைளுர்களின் ஒத்துழைப்புடன் பிரதீபனின் தயாரிப்பில் உருவாகிய தமிழ் பசங்க திரைப்படம் கடந்த 15.01.2015 அன்று மதியம் 2 மணியளவில் ஆனைக்கோட்டையில் லெஸ்லி திரையரங்கில் திரையிடப்பட்டது. இவ் நிகழ்வில வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததோடு பாராட்டு செய்தியையும் வழங்கினார். இவ் நிகழ்வின் போது யாழ் மாவட்ட பாராஞமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் முதற்பிரதியினை பெற்றுக் கொண்டார். இவ் நிகழ்வில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான திரு. பரஞ்சோதி, திரு. கஜதீபன், திரு. ஆணோல்ட், கலாநிதி. சர்வேஸ்வரன் முதலான பலரும் கலந்து சிறப்பித்ததுடன், படைப்பாளியும் இயக்குனருமான பிரதீபனுக்கு பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.

 tmail1tmail2 tmail3 tmail4 tmail5 tmail6