சங்கானை வைத்தியசாலைக்கு ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சார்பில் அன்பளிப்பு

sanganai1கடந்த 22.01.2015 அன்று வலி மேற்கு பிரதேசத்தில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் சங்கானை வைத்திய சாலைக்கு ஜேர்மனிய நாட்டு புலம் பெயர் தமிழ் மக்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில்  சங்கானை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி திரு. செந்தூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இந்நாள் வடமாகான சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம். சித்தார்த்தன், ஜேர்மன் நாட்டிலிருந்து வருகை தந்த சபாரட்ணம் ஜெயகுமார்(சாமியார்), திருமதி. ஜெயகுமார், வசந்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர். தொடர்ந்து வைத்திய சாலையின் செயற்பாடுகள் மற்றும் பற்றாக் குறைகள் தொடர்பில் மேற்படி குழுவினர் ஆராய்ந்ததுடன் சிறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தாம் உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதே வேளை வைத்தியசாலை பொறுப்புவைத்தியரது கோரிக்கைகளில் ஒன்றான கழிவுகள் போடுவதற்கான பிளாஸ்டிக் பெட்டிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு வைத்திய சாலை நலன்புரிச் சங்கத்திற்கு வழங்குவதற்கென சிறு தொகைப்பணத்தினையும் ஜேர்மன் நாட்டின் தழிழ் உறவுகள் சார்பில் சபாரட்ணம்.ஜெயகுமார் வழங்கிவைத்தார்.

sanganai2sanganai3sanganai4sanganai5sanganai6