usa sriஅடுத்த மாதம் ஜெனீவா அமர்வு அடுத்த வாரம் மங்கள சமரவீர – ஜோன் கெரி சந்திப்பு

இலங்கை தொடர்பான ஐநா விசாரணையாளர்களின் அறிக்கை மார்ச்சில் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வடக்கு பிராந்தியத்திற்கும் அமெரிக்காவின் உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா பிஸ்வால் சென்று பலதரப்பட்டவர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் இறுதிக் கட்டப்போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஐநா நிபுணர் குழு நடத்திய விசாரணைகளின் அறிக்கை அடுத்த மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதே நேரம் அடுத்த வாரம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவில் வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.