நாட்டை விட்டு வௌியேற கேபிக்கு தடை உத்தரவு-

KPபுலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாபான் என்ற கே.பி. இலங்கையை விட்டு வெளியேற, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கே.பி.யை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜனவரி 19ம் திகதி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.